வணக்கம்

புதன், 5 ஆகஸ்ட், 2015

அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளை


சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் நேற்று,04.08.2015. அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களால் சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபா பணம் என்பனவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர்.
கந்தரோடை சுப்பிரமணியம் வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் முகத்தை வெள்ளைத் துணியால் மூடிக்கட்டிய நால்வர் கூரை வழியாக உள் நுழைந்து அங்கிருந்த சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சங்கிலிகள், இரண்டு சோடி தோடுகள் காப்புகள் மற்றும் ஆயிரம் பவுன்ஸ் வெளிநாட்டு கரன்ஸி என்பனவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இந்த வீட்டுக்கு சற்றுத் தள்ளி உள்ள மற்றொரு வீட்டினுள் நுழைந்த அதே கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களைக் மிரட்டி சுமார் முப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்ட அதேசமயம் அங்குள்ள அலுமாரிகளில் தேடுதல் நடத்திய போதிலும் தங்க நகைகளை எவையும் கிடைக்காத நிலையில் கைவிட்டுச் சென்றுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
நீண்டகாலத்தின் பின்னர் மீண்டும் இத்தகைய துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக