வணக்கம்

திங்கள், 14 மார்ச், 2016

இரண்டு மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து சிறுமி பலி!

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்வேவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்திலிருந்து விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த கட்டடத்தில் சிறுமி மேலும் பலருடன் நின்று கொண்டிருந்த வேளையிலையே கீழே விழுந்துள்ளார்.காயமடைந்த சிறுமி மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக