வணக்கம்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.அதற்கமைய
 இந்த விடயம் தொடர்பாக அறிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி இலக்கத்தை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.அதுதவிரவும், இந்த விடயம் தொடர்பாக பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக் குழுவிற்கும் அறிவிக்க 
முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக இணையத்தின் ஊடாக
 விண்ணப்பிப்பதற்கான மென்பொருள் ஒன்றை 
பரீட்சைகள் திணைக்களம் அண்மையில் அறிமுகப்படுத்தியது.இதனூடாக உயர்தரப் பரீட்சை வரை விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 8 பிப்ரவரி, 2020

யாழ் நல்லைக் கந்தன் பக்தர்களுக்கு ஓர் முக்கிய செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் தைப்பூசம் 08.02.2020 சனிக்கிழமை தைப்பூச உற்சவமானது மாலை 4.45 மணிக்கு வசந்தமண்டபபூஜையுடன்
 ஆரம்பமாகி தொடர்ந்து முருகப்பெருமான் 
வள்ளி தேவசேனா சமேதராக மஞ்சத்தில் வெளிவீதியுலா எழுந்தருள்வார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>