வணக்கம்

செவ்வாய், 31 மே, 2016

குழந்தை பிறந்த 31 ஆம் நிகழ்வை குடித்துக் கொண்டாடிய தகப்பன் பரிதாப மரணம்!

பிள்ளை பிறந்து 31 ஆம் நாள் சடங்கு நிகழ்வு கொண்டாட்டத்தில் மதுபானத்தை அதிகமாகப் பருகிய தந்தை உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழில் இடம்பெற்றது.
சங்கானை ஆஸ்பத்திரி வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் அரியநேந்திரன் அஜந்தன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தையின் 31 ஆவது நாளை உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து குடித்துக் கொண்டாடிய தந்தை, இரவு நித்திரையாகிவிட்டார்.
வழமையாக நித்திரையின் போது குறட்டை விடும் கணவர் குறட்டை விடாமல் கிடப்பதனைக் கண்ட அவரின் மனைவி இரவு 2 மணியளவில் அவரை எழுப்பியுள்ளார்.
அவர் எழுந்திருக்காமையால் உறவினர்களின் உதவியுடன் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள் பரிசோதனையின் போது அவர் இறந்துவிட்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 29 மே, 2016

கலையிலக்கிய வட்டம் சிவரமணிக்கு கவித்தென்றல்பட்டம்வழங்கப்பட்டுள்ளது

இனிய  நந்தவனம்  பதிப்பகம்  சிறீமுகவாரிஅறவாரியம் மலேசியா
தடாகம்  கலையிலக்கிய வட்டம்  இணைந்து  நடத்திய பன்னாட்டு கருத்தரங்கும்  விருதுவழங்கல்  விழாவும் நூல்  வெளியீடும்  நடைபெற்றிருந்ததுஅதில் இலங்கை  திருகோணமலையைச்சேர்ந்த  கவிச்சுடர் சிவரமணிக்கு
 கவித்தென்றல்பட்டம் கவித்தென்றல்   என்ற பட்டமும்விருதும்.கிடைத்தமையும் அவரது  #அவள்ஒரு  தனித்தீவு  நூல்வெளியிட்டமையும்  குறிப்பிடத்தக்கது. இவரது ஆழுமை இன்னும் நிறைய எம்மவர் 

நவற்கிரி நாதம்இணையம் கலைஞர்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றது
நிழல் படங்கள்இணைப்பு  
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>






புதன், 25 மே, 2016

உழவு இயந்திரம் கிளிநொச்சியில் கிணற்றுக்குள் பாய்ந்தது!

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (திங்கட்கிழ்மை) பிற்பகல், கிணற்றினை சுற்றி உழவு செய்து கொண்டிருந்த சமயம் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் கிணற்றினுள் விழுந்துள்ளது. இதன்போது, சாரதி சிறு காயங்களிற்கு உள்ளான நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சுமார் 35 அடி ஆழமான கிணற்றில் நீர் அதிகமாக காணப்பட்டுள்ளதனால், கிராம மக்களின் ஒத்துளைப்புடன கிணற்றில் இருந்த நீர் அகற்றப்பட்டதன் பின்னர், உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 23 மே, 2016

சில வருடங்களில் கொழும்பு நகரம் நீரில் மூழ்கப் போவதாக எச்சரிக்கை!!

2100 ஆண்டளவில் கொழும்பில் பல பகுதிகளில் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை அடுத்து இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் நிபுணர்கள் விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையில் வடக்கு கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து, இருப்பிடங்களை இழந்தனர்.
இந்நிலையில் கொழும்பு நகரில் காணப்படும் பலவீனம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் காணப்படுகின்ற பலவீனம் காரணமாக கொழும்பு நகரம் நீரில் மூழ்கி அழிவடையும் ஆபத்தை
 எதிர்கொண்டுள்ளது.
கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்திருந்தால் களனி கங்கை நிரம்பி பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. அவ்வாறான நிலையில் அந்த வெள்ளத்தினை கட்டுப்படுத்துவதற்கான போதிய தொழில்நுட்ப வளங்கள் இலங்கை அரசாங்கத்திடம் இல்லையென
 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் முழு கொழும்பும் நீரில் மூழ்கி இருக்கும். நாட்டின் தலைநகருக்கு போதிய பாதுகாப்பின்மையானது, அது பல்வேறு விடயங்களை பாதிப்பை ஏற்படுத்தும். களனி கங்கை கொழும்பினை மூடியிருந்தால் பொருளாதார மையங்கள் தடம்புரண்டிருக்கும். நாட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சுற்றி ஏற்படுகின்ற காலநிலை மற்றும் அதன் தாக்கம் காரணமாக கொழும்பு நகரத்தின் ஆயுட்காலம் குறைவடையும் அபாய நிலையை எட்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 
எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமைகளுக்கு அமைய 2100ம் ஆண்டளவில் கொழும்பு நகரத்தின் ஒரு பகுதி கடலினால் மூழ்கும் அபாயம் உள்ளது. இது குறித்து சர்வதேச மட்டத்திலான ஆய்வு முடிவுகளும் உறுதி
 செய்துள்ளது.
முறையற்ற நகர்புற அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழலை கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக இயற்கைப் பேரழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையினை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
களனி கங்கையின் நீர் போக்குவரத்து முழுமையாக கொழும்பிற்கு செல்ல இடமளிக்காமல் அவிசாவளை அல்லது குருவிட்ட ஆகிய பிரதேசத்திற்கு அருகில் அல்லது குருணாகல் ஆகிய பிரதேசங்கள் ஊடாக கடலுக்கு திருப்புவதற்கான திட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறான மாற்றும் திட்டம் எதிர்காலத்தில் இலங்கையை காப்பாற்றும் வழிமுறையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்படாத பிரதேசங்கள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமைக்கு இது தான் பிரதான காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 
தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அனர்த்தங்களின் அதிர்வெண்களும் அதிகரிப்பட்டுள்ளது. மொத்தமாகவே ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு இரண்டு முறை வெள்ள அனர்த்தம் அல்லது மண் சரிவு ஆபத்துக்கள் ஏற்படுவதோடு அதில் முழு மக்களிலும் ஏறத்தாழ பாதியளவிலான மக்கள் மாத்திரமே பாதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு வருடமும் வறட்சியான நிலையில் காணப்படுகின்ற போதிலும் அது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை மாத்திரமே
 பாதிக்கின்றது.
இலங்கைக்கு தேவையான நீர், மலையக பிரதேசங்களில் சேமிக்கப்படுகின்றமையே அந்தப் பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறான நீர் நிலைகளை உலர் வலயங்களில் சேமித்து வைக்க வேண்டும் என தற்போதைய புவியியல் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் சமநிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக உத்ரா துருவத்தில் பனி உருக ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அதன் தாக்கம் காரணமாக 23 டிகிரி அளவில் பூமி சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய பூமி தட்டில் ஏற்படுகின்ற மாற்றத்திற்கமைய அடுத்த நூற்றாண்டில் நில அதிர்வு, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்ட வாய்ப்புகள் உள்ளன.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 20 மே, 2016

புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக யாழில் சஞ்சீவ தர்மரத்தன நியமனம்?

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெரேரா கொழும்பு பொலிஸ் வாகனப் பிரிவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக 
இடமாற்றப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடந்த ஒருவருடமாக கடமையாற்றியிருந்தார்.
யாழ்.மாவட்டத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக, மாத்தளை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சஞ்சீவ தர்மரத்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடந்த ஒரு வருடமாக கடமாயாற்றிய டபிள்யு.கே. ஜெயலத், காலி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபாராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமையும்
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 13 மே, 2016

வெள்ளவத்தையில் பலியான தமிழ் காதல் ஜோடிகள் உயிரிழந்ததாக?

 வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞர் மற்றும் யுவதியும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே நேற்று இவர்கள் மோதுண்டு உயிரிழந்ததாக
 தெரிவிக்கப்பட்டது.
புகையிரதம் வரும் தண்டவாளத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் இவர்கள் இருவரும் தண்டவாளம் நடுவில் வந்து நின்றுள்ளதாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கே அவர்கள் அங்கு வந்துள்ளதாகவும் புகையிரத சாரதி தெரிவித்துள்ளார்.
பின்னர் புகையிரதத்தை நிறுத்த நேரமின்மையால் அவர்கள் இருவரும் மோதுண்டாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், 24 வயதான இளைஞர் மற்றும் 25 வயதான யுவதியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், இதற்கு அவர்களின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும்
 தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



புதன், 11 மே, 2016

யாழில் வாள், கத்தி செய்யும் கம்மாலைக்கு தடை! மீறினால் தண்டனை:

சட்டத்துக்கு முரணான வகையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை கம்மாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ் மேல் நீதிமன்றம், அவற்றைவைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் 
என உத்தரவிட்டுள்ளது.
 யாழ் குடாநாட்டில் வாள் வெட்டுச் சம்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அத்துடன்ஆபத்தான கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்தஉத்தரவை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். 
அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டத்திற்கு முரணான வகையில் வாள்கள் வைத்திருப்பதும், அபத்தான கத்திகளைவைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும்.இவற்றை உடைமையில் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில்உடனடியாக ஒப்படைக்க வேண்டும். பொலிசார்  நடத்தும் தேடுதல் நடவடிக்கைகளின்போது, இந்த ஆயுதங்களை உடமையில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இத்தகைய ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக குடாநாட்டில்உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். சட்டத்திற்கு முரணான முறையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பன குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதனால், யாழ் குடாநாட்டில் உள்ள கம்மாலைகளில்இவற்றை உற்பத்தி செய்வதை இந்த நீதிமன்றம் தடை செய்கின்றது. நீதிமன்ற உத்தரவை மீறி இவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் அல்லது யாருக்கும் வழங்கினால் அத்தகைய கம்மாலைகளின் உரிமம் உடனடியாக ரத்துச்செய்யப்படும். அத்தகைய ஆயுதங்களை உற்பத்தி செய்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். யாழ் குடாநாட்டில் பல கம்மாலைகள் சட்ட முரணான வாள்கள் ஆபத்தான கத்திகள் என்பவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்வதையே முக்கிய தொழிலாகக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றச் செயல்களில் சம்பந்தப்படுகின்ற வாள்கள், ஆபத்தான கத்திகள்கைப்பற்றப்படும்போது, அவற்றை உற்பத்தி செய்யச் சொன்னது யார்? யார் 
அவற்றைஉற்பத்தி செய்தது? எந்தக் கம்மாலைகளில் அவைகள் உற்பத்தி செய்யப்பட்டன என்பதுபோன்ற தகவல்களை பொலிசாரின் விசாரணையின்போது சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவேண்டிய நிலை ஏற்படும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் வாள்கள் கத்திகளை 
உற்பத்தி செய்த கம்மாலைகளின் உரிமையளார்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். அந்தக் கம்மாலைகளின் உரிமமும் ரத்துச் செய்யப்படும். இவ்வாறு நீதிபதி இளஞ்செழியன் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 8 மே, 2016

கழிவுகளை ஏற்ற சென்ற டிராக்டர் 30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்தது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோர்க்கஸ் வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடொன்றின் மலசலகூட கழிவுகளை ஏற்ற சென்ற டிராக்டர் 30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து 07.05.2016 அன்று மு.ப – 11-45 மணியளவில் இடம் 
பெற்றுள்ளது.
குறித்த டிராக்டர் வீட்டு மலசல கூட கழிவுகளை ஏற்றிய பின்பு சாரதியால் டிராக்டரை திருப்ப முனையும் போது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கவனயீனத்தாலே இவ்விபத்து நேர்ந்ததாக நேரில் கண்டோர் தெரிவித்தனர். ஏனெனில் வாகனத்தை திருப்ப போதிய இடவசதி இல்லாத இடத்திலேயே டிராக்டரானது திருப்பப்பட்டுள்ளது.
இவ்விபத்தினால் உயிர் சேதங்கள் இல்லாத போதிலும் மரங்கள் இரண்டின் உதவியுடன் பிராக்டர் தடுக்கப்பட்டுள்ளது.
இல்லையேல் கீழுள்ள குடியிருப்பின் மீதே டிராக்டர் விழுந்து பாரிய சேதத்தை உண்டுபன்னியிருக்கும்.
விபத்து தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 6 மே, 2016

மாணவர்கள் வகுப்பை விட்டு கடும் வெயில் நேரத்தில் வெளியேற தடை!

 கடும் வெயில் நேரத்தில் வகுப்பை விட்டு வெளியேற மாணவர்களுக்கு தடை
பாடசாலை மாணவர்களை காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை 
வழங்கப்பட்டுள்ளது.
நிலவி வரும் அதிக வெப்பம் காரணமாகவே இவ் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  ஆராயுமாறு  முன்னர் அறிவுறுத்தியிருந்தார்.
சுகாதார அமைச்சு கல்வி அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவை இணைந்து இது குறித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ள பரிந்துரைகளிலேயே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் மாணவர்களுக்கென இரு பரிந்துரைகளாக இவை வெளியிடப்பட்டுள்ளன.
வகுப்பறைகளில் கதவுகள் ஜன்னல்கள் திறக்கப்பட்ட நிலையில் காற்றோட்டமான சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறும், மாணவர்களின் வெளிப் பாடவிதான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் பாடசாலைகளுக்கு 
 அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கழுத்துப்பட்டி அணிவதைத் தவிர்க்குமாறும் தொப்பி மற்றும் குடை என்பவற்றைப் பயன்படுத்துமாறும் இனிப்பான பாணங்கள் பருகுவதைக் குறைத்து சுத்தமான குடிநீரைப் பருகுவதுடன் குடிநீர் நிரப்பப்பட்ட போத்தலை எப்போதும் உடன் வைத்திருக்குமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை நேர அட்டவணையில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் அதற்கு பதிலாக பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தமை 
இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 1 மே, 2016

கடற்பகுதியில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்

யாழ்  தொண்டமனாறு கடற்பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை இந்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று காலை கடலுக்கு சென்ற சிலர் கடலில் சடலமொன்று மிதந்து வருவதை அவதானித்ததையடுத்து உடனடியாக அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு 
தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்தநிலையில் கிடைக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டிருந்தனர். எனினும் மீட்கப்பட்ட சடலமானது யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>