வணக்கம்

வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஆணின் சடலம் கல்முனை பேரூந்து தரிப்பிடத்தில் மீட்பு!!!

அம்பாறை கல்முனை பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 
மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குறித்த நபர் கல்லாறு காளி கோயில் வீதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க தம்பிராசா வரதரதசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனியார் பேரூந்துகளில் நடத்துனராகவும். கடைகளிலும் தொழில் புரிந்து வந்ததாகவும் குறிப்பிட்ட பிரதேச மக்கள், அதிகளவில் மது அருந்துபவர் எனவும் கூறினர்.
கல்முனை பஸ் நிலையக் கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் இருந்து கீழ் தளத்தில் வீழ்ந்ததில், அவரது தலை பலமாக அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்:.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 27 ஜனவரி, 2016

தென்னிலங்கை வியாபாரிகளின் கடைகளை கீரிமலையில் அகற்ற நடவடிக்கை

யாழ் கீரிமலையில் அமைந்துள்ள தென்னிலங்கை வியாபாரிகளின் பெட்டிக்கடைகளை அகற்றும்படி தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
12 ஆண்டுகளுக்கு மேலாக கீரிமலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் சிற்றுண்டிகள் விற்பனை செய்யும் பெட்டிக் கடைகளை ஐந்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நடத்தி வருகின்றார்கள்.
இது வரைக்கும் குறிப்பிட்ட கடைகளை அகற்ற வேண்டும் என்று வலிவடக்கு பிரதேச சபையோ, அல்லது பிரதேச செயலகமோ அன்றி வேறு யாருமே தெரிவிக்காத நிலையில், தற்போது தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார பரிசோதகர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பிட்ட கடைகளை அகற்றும் உரிமை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திற்கே உண்டு எனவும், குறிப்பிட்ட சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு தேவைக்காக இத்தகைய நடவடிக்கைகளை பிழையான வழியில் மேற்கொள்வதாகவும் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




திங்கள், 25 ஜனவரி, 2016

நவற்கிரி பகுதியில் உண்டானது புவியதிர்வல்ல தரையிறக்கம்?

யாழ்.அச்சுவேலி-நவற்கிரி புத்தூர் மேற்கு. பரத்தப்புலம் என்னும் 
(வடக்குவெளி) பகுதியில் திரு.கந்தையா .சுப்பிராமணியம் என்பவருடைய வீ ட்டுசசுவர்களும். தோட்டவாய்கால்களும் நிலமும் பாதிப்புக்கு உள்ளானது-நிலத்தில் உண்டான திடீர் பிளவுகள் புவியதிர்வல்ல எனவும், அவை நிலத்தின் கீழ்  உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும்  உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கம் மட்டுமே எனவும், பேராதனை பல்கலைகழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமார் தெரிவித்துள்ளார். 
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வீடொன்றிலும் தோட்ட நிலங்களிலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைகழக புவியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாண குடாநாட்டில் தரையின் கீழ் நீரோட்டங்களும் குகைகளும் காணப்படுகின்றன. இந்த நிலையில் நாம் குழாய் கிணறுகள், ஆழமான 
கிணறுகள் அமைத்து அவற்றினுடாக நிலத்தடி நீரை அதிகமாக வெளியே உறிஞ்சி இழுப்பதால் நிலத்தின் கீழ் நிலத்தடி நீரோட்ட இடைவெளி அதிகரித்து சுண்ணாம்பு பாறைகள் உடைவதுடன் அதன் காரணமாக மண் பிடிமாணம் குறைவடைந்து இவ்வாறு நிலம் கீழ் இறங்குகிறது. இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுகிறது. 
மேலும் இதுபோன்ற பல சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்திலும் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.  குறிப்பாக கட்டுடை இடிகுண்டு 1200 ஆம் ஆண்டு இவ்வாறான செயற்பாடுகளினாலேயே உருவானது. 
இதனைவிட மாத்தளை பகுதியிலும் மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது. அத்துடன் டோக்கியோ போன்ற வளர்சியடைந்த நகரங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த சம்பவத்தில் பாரிய சத்தமொன்று ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளமை தொடர்பாக 
கேட்டபோது, நிலத்தின் கீழ் ஏற்படுகின்ற கற்பாறைகளுடைய வெடிப்பின் காரணமாக இச்சத்தம் ஏற்படும்.  இவ்வாறான அனர்த்தங்களை தவிர்க்க வேண்டுமாயின் இயற்கைக்கு முரணான வகையில் நிலத்தடி நீரை அகத்துறிஞ்சுவதை நிறுத்த வேண்டும். இல்லையேல் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாததாய் அமைந்துவிடும், எனவும் தெரிவித்துள்ளார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 23 ஜனவரி, 2016

பொலிஸாருக்கு சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க பிரித்தானியா உதவி [

யாழ் பொலிஸாருக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த பிரித்தானியா, யாழ்ப்பாண பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த யாழ்ப்பாண பொலிஸாருக்கு சாத்தியங்கள் ஏற்படும் என 
தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 21 ஜனவரி, 2016

மற்றைய நாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சைகளுக்கு தடை?

நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு
 தீர்மானித்துள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் தொடர்பில் வெளியாகிய ஊடக அறிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தனியார் வைத்திய சேவை கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன
 தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி கோரி தனியார் வைத்தியசாலைகளினூடாக முன்வைக்கப்பட்டிருந்த 29 விண்ணப்பங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
 குறிப்பிட்டார்.
இதேவேளை, தனியார் வைத்தியசாலைகளின் ஒழுக்காற்று குழுவை அழைத்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் டொக்டர் காந்தி ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 18 ஜனவரி, 2016

இலங்கைப் படையணி அமைதி காக்கும் கடமைகளுக்கு செல்லவுள்ள?

லெபனான் அமைதி காக்கும் கடமைகளுக்காக செல்லவுள்ள, இலங்கையின் 10ஆவது அமைதிகாக்கும் படையணியினர் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டிலிருந்து புறப்பட்டுச்
 செல்லவுள்ளனர்.
இந்தத் படையணியில் பத்து அதிகாரிகளும் நூற்று நாற்பது பேரும் அடங்குகின்றனர். குறித்த படையணிக்கு லெப்டினன்ட் கேணல் யூ.கே.டி.பி.பி.உடுகம தலைமை தாங்குகிறார்.
குறித்த பணிக்காக புறப்படுமுன் நடைபெறும் படையணி அணிவகுப்பு நேற்று அநுராதபுரம் – சாலியபுர, கஜபா ரெஜிமேன்ட் மத்தியஸ்தானத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த அமைதிகாக்கும் படையணி, ஒரு வருட காலத்திற்கு லெபனானில் சேவையில் ஈடுபடுமென இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 14 ஜனவரி, 2016

சிறுவன் ஒருவன் உட்படநான்கு பேர் குளவிக்கொட்டியதால் பாதிப்பு!

திருகோணமலை, தெவனிபியவரப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை குளவிக் கொட்டுக்கு இலக்கான  சிறுவன் ஒருவன் உட்பட நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தெவனிபியவரப் பகுதியைச் சேர்ந்தவர்களான 
சாமர மதுசங்க (வயது 03), வை.சுனீதா குமாரி (வயது 25) எம்.எம்.சஞ்சீவ (வயது 32), டபிள்யூ.திலகாவத்தி (வயது 27) ஆகியோரே குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். 
விஜய பாலர் பாடசாலையை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த குளவிக் கூடு கலைந்த நிலையில் அதிலிருந்த குளவிகள்
 இவர்களை 
கொட்டியுள்ளது.    உடனடியாக மஹாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள்,  மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 11 ஜனவரி, 2016

பார்வை இழந்து ஆறு வருடங்களுக்குப் பின் மீண்டும் பார்வை ஆற்றல்!!!

பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் புரட்­சி­கர செயற்கைக் கண் (பயோனிக் கண்) மூலம் 6 வரு­டங்­க­ளுக் குப் பின்னர் முதல் தட­வை­யாக பார்வை ஆற்­றலைப் பெற்­றுள்ளார்.
கார்டிப் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த றியான் லெவிஸ் (49 வயது) என்ற மேற்­படி பெண் 5 வயது சிறு­மி­யாக இருந்த போது தனது பார்வை ஆற்­றலை இழக்க ஆரம்­பித்தார்.அவர் தனது வலது கண்­ணி­லான பார்வை ஆற்­றலை 16 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இழந்தார்.
இந்­நி­லையில் 6 வரு­டங்­க­ளுக்கு முன் அவ­ரது பார்வை முழு­மை­யாக பாதிக்­கப்­பட்டு சூரிய ஒளியின் பிர­கா­சத்தை மட்­டுமே அவ­தா­னிக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்டார்.
அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருந்த பரம்­பரை ரீதி­யான பாதிப்பால் அவ­ரது விழித்­தி­ரை­யி­லி­ருந்த ஒளி உணர்­க­லங்கள் அழி­வ­டைந்­தமை கார­ண­மா­கவே அவர் பார்வை ஆற்­றலை இழக்க நேர்ந்­தது.
இத­னை­ய­டுத்து ஒக்ஸ்­போர்ட்­டிலுள்ள ஜோன் ரட்­கிளிப் மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த மருத்­து­வர்கள் புரட்­சி­கர செயற் கைக் கண்ணை அவ­ருக்கு வெற்­றி­க­ர­மாக பொருத்தி அவர் மீண்டும் பார்வை ஆற்­றலைப் பெற வழி­வகை
 செய்­துள்­ளனர்.
இந்­நி­லையில், அவ­ருக்கு செயற் கைக் கண்­ணா­னது 16 வரு­டங்­களுக்கு முன்னர் பார்வை ஆற்­றலை இழந்­தி­ருந்த அவ­ரது வலது கண்ணில் பொருத் ­தப்­பட்­டது.

இந்த செயற்கைக் கண்ணைப் பொருத்­து­வ­தற்­கான அறுவைச் சிகிச்­ சையில் வயதா­த­லுடன் தொடர்­பு­டைய தசை நார் சிதைவு கார­ண­மாக வயோ­தி­பர்­களில் ஏற்­படும் குருட்டுத் தன்­மைக்கு சிகிச்­சை­ய­ளிக்கப் பயன்­படும் விழித்­தி­ரையில் பொருத்­தப்­படும் சிப் உப­க­ரணம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.மேற்­படி சிப் உப­க­ர­ணத்தை ஜேர்­ம­னிய நிறு­வ­ன­மான ரெரினா இம்­பிளான்ட் ஏஜி உரு­வாக்­கி­யுள்­ளது.
புரட்­சி­க­ர­மான இந்த செயற்கைக் கண்­ணின் ஊடாக ஒருவர் ஒரு பொரு ளைப் பார்க்கும் போது இந்த சிப் உபகரணம் ஒளியை மின்சார சமிக் ஞைகளாக மாற்றி பார்வை நரம்புகள் மூலம் மூளைக்குக் கடத்துகிறது.  இதனால் அவருக்கு குறிப்பிட்ட பொருளைப் பார்ப்பது
 சாத்தியமாகிறது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

வெள்ளி, 8 ஜனவரி, 2016

ஈழத்துப் பெண் முதலாவதாக விண்வெளிக்கு பறக்கிறார்!!!

முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது.
அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஒரு ஈழத் தமிழ் மாணவி. அவர் பெயர் „சியோபன் ஞானகுலேந்திரன்“ . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஓடத்தில் சென்று இவரும் இவரோடு இங்கிலாந்து மாணவி டியானாவும் சேர்ந்து சில நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளனர். படத்தில் இருப்பவர் டியானா மற்றும் சியோபன்.
முதல் முறையாக தமிழர் ஒருவர் விண்வெளிக்கு செல்ல உள்ளது தமிழர்களுக்கு பெருமை தானே
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



செவ்வாய், 5 ஜனவரி, 2016

முதியவர் நோயின் தாக்கம் தாங்காமல் நஞ்சருந்திய மரணம்!

நோயின் தாக்கத்தை தாங்க முடியாத ஒருவர் நஞ்சு திரவம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு கடந்த ஏட்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
 தாவடி வடக்கு, கொக்குவில் மேற்கு என்னும் இடத்தை சோந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 
கணபதி தம்பித்துரை (வயது 75) 
என்பவர் கடந்த 26 ஆம் திகதி நஞ்நசுத் திரவகம் அருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படடிருந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் சிகிச்சை
 பயனளிக்காத நிலையில் 
மரணம் அடைந்துள்ளார். நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 2 ஜனவரி, 2016

மரணமடைந்தவர் வீட்டில் வாகனம் மோதி இருவர் பலி?

வாகன விபத்தில் மரணமடைந்த மொரட்டுவை கோரளவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் மரண வீட்டுக்கு அருகில் சீட்டுக்கட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வீதியில் சென்ற வான் 
மோதியதில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர்கள் விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்கு அருகாமையில் இருந்த வீதியில் பயணித்த வானே வீதியை விட்டு விலகி இவர்கள் மீது மோதியுள்ளது.
அதனையடுத்து வான் சாரதி மீது அங்கிருந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து சாரதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     இச்சம்பவம் தொடர்பில் லங்காதீப ஊடகத்தில் வெளியான படங்கள் உங்கள் 
பார்வைக்கும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>