வணக்கம்

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

உயிரைக் குடித்த நண்பனுக்கு உயிர் கொடுத்த நண்பன்!

நகைத் தொழி­லாளி ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து நகை வேலைக்­குப் பயன்­ப­டுத்­தும் பொட்­டா­சி­யம் என்ற திர­வத்தை அருந்தி உயிரை மாய்த்­தார் என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
நண்­ப­னின் வியா­பார நோக்­கம் கருதி ஒரு கோடி ரூபா­வுக்­கும் மேற்­பட்ட பணத்­தைக் கட­னா­கப் பெற்று வழங்­கி­யி­ருந்­தார் என்­றும் அந்­தக் கடன் பணத்தை நண்­பன் திரும்­பித் தரா­த­தால் கடன் தொல்­லை­யால் அவர் உயிர் மாய்த்­தார் என்­றும் விசா­ர­ணை­யில் 
தெரி­விக்­கப்­பட்­டது.
யாழ்ப்­பா­ணப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யைச் சேர்ந்த ஒரு­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார்.
“வியா­பார நோக்­கத்­தில் ஒரு கோடியே 17 இலட்­சம் ரூபா பணத்தை கட­னா­கப் பெற்று தனது நண்­ப­னுக்கு நகைத் தொழி­லாளி வழங்­கி­யுள்­ளார்.

குறிப்­பிட்ட காலத்­தின் பின்­னர் கடன் பணத்தை நண்­ப­னி­டம் கேட்­ட­போது, 10 இலட்­சம் ரூபாவை வழங்கி மிகு­திப் பணத்­துக்கு சகோ­த­ர­னின் பெய­ரில் காசோலை வழங்­கி­யுள்­ளார். காசோ­லை­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்ட சகோ­த­ரன் வெளி­நாட்­டுக்கு சென்­று­விட்­டார்.
இந்த நிலை­யில் குறித்த குடும்­பத்­த­லை­வர் கடந்த 31ஆம் திகதி தன­து­வீட்­டில் தவ­றான முடிவு எடுத்து நகை வேலைக்­குப் பயன்­ப­டுத்­தும் பொட்­டா­சி­யத்­தைக் குடித்­துத்­துள்­ளார்” என்று இறப்பு விசா­ர­ணை­யில்
 தெரி­விக்­கப்­பட்­டது.
அவர் சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். சிகிச்சை பய­ன­ளிக்­காது அவர் நேற்று உயி­ரி­ழந்­தார்.
மருத்­து­வு­ம­னை­யின் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் மற்­றும் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>