வணக்கம்

வெள்ளி, 20 டிசம்பர், 2019

வறுமையை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் ஜனவரி 15 முதல் வேலை வாய்ப்பு

வறுமை இல்லாதொழிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் ஜனவரி 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தாம் வசிக்கும் பிரதேசத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுடன் மாதாந்தம் 35,000 ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.சுபீட்சத்தின் செட்டிங் நோக்கு கொள்கை பிரகடனத்தை மைய அபிவிருத்தி ஒன்றினை அமைப்பதற்கான முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றதுமிகவும் வறிய மட்டத்தின் வாழ்ந்துவரும், சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் அது கிடைக்கப் பெறாத குடும்பங்களை கட்டியெழுப்புதல் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் குறிக்கோளாகும்.
இந்த திட்டத்தின் ஊடாக அத்தகைய குடும்பங்களில் தொழில்துறைக்கு பங்களிப்பு வழங்க கூடியவர்களை அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படும்.எவ்வித கல்வியையும் பெறாத அல்லது குறைந்த கல்விகத்தகைமை கொண்ட பயிற்றப்படாதவர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் முதலாம் கட்டமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களை வழி நடத்துவதற்கும் முகாமைத்துவம் செய்வதற்கு மேலும் 30,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.சுமார் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு முகாமைத்துவ மற்றும் வெளிக்கள அலுவலர் மட்டத்தில் மேற்பார்வை செய்வதற்கான வேலைவாய்ப்புகளும் இதனூடாக உருவாக்கப்படும்.சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 300- 350 பேர் அளவில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

அவர்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள கல்வித் தகைமைகள் தேவைப்படாத வெற்றிடங்களுக்காக உள்ளீர்க்கப்படுவர். தச்சுத் தொழில், விவசாயம், மீன்பிடி, வனப்பாதுகாப்பு போன்ற துறைகளுக்காக அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த செயற்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.பாதுகாப்பு அமைச்சினதும், முப்படையினரதும் மேற்பார்வையில் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்குதல் இடம்பெறும்.இந்தத் திட்டம் தனது தேர்தல் செயற்பாடுகளின் போது உருவான திட்டமென்பதை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, வினைத்திறனான முறையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். இந்த திட்டத்தின் ஊடாக வறிய குடும்பங்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு பொருளாதாரரீதியில் வலுவடைவார்கள் எனவும் ஜனாதிபதி
 குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 1 டிசம்பர், 2019

எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல், மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும், மணிக்கு 100 மில்லி மீற்றர்களுக்கும் 150 மில்லி மீற்றர்களுக்கும்
 இடைப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் திணக்களம் கூறியுள்ளது.
அதேபோல தெற்கு, ஊவா, வடமத்திய 
மாகாணங்களிலும்,மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களில் வசிக்கும் மக்கள் இடி 
மின்னலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பது 
அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை இந்தப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று விடுத்துள்ள விசேட அறிக்கையில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 19 ஜூன், 2019

வழங்கப்படும் விசேட தேவையுடையவர்களுக்கு கொடுப்பனவில் மாற்றம்

விசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம்  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா வழங்கப்பட்டது.32 ஆயிரம் பயனாளிகள் இதன்மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது 40,000 பேர் வரை பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.


புதன், 5 ஜூன், 2019

இலங்கையர்களுக்கும் புயலுக்குப் பெயர் வைக்க சந்தர்ப்பம்

வட இந்திய பெருங்கடலில் ஏற்படவுள்ள புயல் காற்றுக்குப் பெயர் வைப்பதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இது தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளையும் கருத்துகளையும் வளிமண்டலவியல் திணைக்களம் 
கோரியுள்ளது.
இதன்படி திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் பெயரை குறிப்பிடுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆகையால் விரும்பியவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்கமுடியுமென்றும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மீண்டும் கிழக்கில் 29,04,19, மாலை முதல் ஊரடங்குச் சட்டம்

இன்று மாலை 6.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் 
$காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக்
 குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 29 ஏப்ரல், 2019

விசேட அறிவித்தல் பொனி சூறாவளியின் தாக்கம்

 பொனி சூறாவளியானது மட்டகளப்பில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் தற்போது
 நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், பொனி 
சூறாவளியின் தாக்கத்தினால், நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ந்துவரும் மணித்தியாலங்களில் நூறு மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம்
 எதிர்வு கூறியுள்ளது.
மேலும், சிலப்பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யக் கூடுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல்களுடன் இணைந்துக்கொள்கின்றார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹட் சாலிஹின்.

இங்குஅழுத்தவும் நிலாவரை .கொம் செய்திகள்

சனி, 27 ஏப்ரல், 2019

அரசாங்க வேலை வாய்ப்பு க.பொ.த உயர்தரத்துடன்


இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாளர்
 பதவிக்கு வெற்றிடம்*
🌐 *(தகைமை – க.பொ.த உயர் தரத்தில் சித்தி + 6 மாத கணணிக் கற்கை + 2 வருட வேலை அனுபவம்)*
🌐 *(விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)*
🌐 *விபரமாக -* https://goo.gl/rPNfny
🌐 *விண்ணப்ப முடிவுத் திகதி – 05.03.2019*
விண்ணப்ப படிவத்தைப் பெற இங்கே அழுத்துங்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில 
இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
 மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


காலநிலை குறித்த விசேட எச்சரிக்கைவடபகுதியில் வாழும் மக்களுக்கு

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3 நாள்கள் பலத்த காற்றுடன் அதிகரித்த மழை பெய்யும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.வங்காள விரிகுடாவில் 
ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வடக்கில் 28 ஆம் 29ஆம் 30ஆம் திகதிகளில் அதிக மழை வீழ்ச்சி ஏற்படும்.எதிர்வு கூறப்படும் மழை
வீழ்ச்சி 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் ஆக காணப்படுகிறது.ஆகவே வெள்ள மூழ்கடிப்பு நிலை ஏற்படும். சுமார் 
70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.வேகமான காற்றுடன் அதி கூடிய மழை வீழ்ச்சி எதிர் பார்க்கப்படுகின்றது.ஆகவே வடக்கு மாகாண மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
இடர் நிலைமைகளின் போது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் 1990 என்ற நோயாளர் காவு வண்டி சேவை இலக்கத்துக்கும் அழைத்து சேவைகளை பெற்று கொள்ளலாம் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 24 ஏப்ரல், 2019

வழங்கும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்

பல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவகையில், இந்தியாவுக்கான வீசா வழங்கும் ஐ.வீ.எஸ். லங்கா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளுக்கு வீசா
 வழங்கும் வீ.எப்.எஸ். குலோபல் வீசா நிலையம் என்பன மூடப்பட்டுள்ளன.
அத்துடன், மலேசியா, தாய்லாந்து மற்றும்
 சீனா ஆகிய நாடுகளுக்கு வீசா வழங்கும் தூதரகங்களுடன் இணைந்து இயங்கும் நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் 
குறிப்பிடப்படுகின்றது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தொடர் குண்டு வெடிப்புகள் நாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றது

1. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்
2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம்
3. மட்டக்களப்பு, சியோன் தேவாலயம்
4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்
5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல்

6. கொழும்பு, சினமன் கிராண்ட்
7. கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன்
8. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -1
9. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -2

நாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 180 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர்
 காயமடைந்துள்ளனர்.
இது வரையில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் அவற்றுல் இரண்டு ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அனைத்து வடமாகாண சபைக்கு உள்பட்ட அரச அலுவலகங்கள் விடுமுறை

வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால்,22,04,2019 நாளையும் 23,04,2019  நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் 
வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் 22,04,19 நாளை(22) திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 
பணிப்புரை விடுத்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கை ஊடரங்கு நடைமுறைக்கு பாதுகாப்பு அமைச்சு

நாடுமுழுவதும் ஊடரங்கு இன்று மாலை 6 மணி தொடக்கம் 
நாளைக் காலை 6 மணிவரை
நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் இன்று காலை 6 இடங்களிலும் பிற்பகல் தெஹிவளை மற்றும் தெமட்டகொடவில் என 8
இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன்இ சமூக வளைத்தளங்களும் 
தடை செய்யப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 16 ஏப்ரல், 2019

இலங்கையில் 3 நாட்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையின் பல பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வெப்பமான வானிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.
குறித்த பகுதிகளில் பணிகளில் ஈடுபடுபவர்கள், அதிகளவு நீரை அருந்த வேண்டும் என்றும், தங்களது பணியிடங்களில் தேவையான அளவு ஓய்வாக இருக்க வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேநேரம், முதியோர்கள் மற்றும் நோய்த்தாக்கம் உள்ளவர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அத்துடன், குழந்தைகளையும், சிறுவர்களையும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது என்றும் அந்த நிலையம் 
அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அதிக பணிச்சுமையை தவிர்க்குதாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 15 ஏப்ரல், 2019

யாழில் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் மோதல்

மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துகு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில்  சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்களை தாக்க முற்பட்டதால் 
பதற்றம் ஏற்பட்டது.
வரணி இயற்றாளையில்  மாணவன் தாக்கப்பட்டார். வைத்தியசாலைக்குள் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் நந்தகுமார் பாருகன்  (வயது-19) என்ற மாணவனே வெட்டுக்காயத்துக்குள்ளாகிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நண்பர்கள் கூடி மது அருந்தியுள்ளனர். அதன்போது அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டு  கைகலப்பாக மாறியதில் ஒருவர் தாக்கப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் கும்பல் மோதலில் ஈடுபட அங்கு ஏற்பட்ட பதற்றத்தையடுத்து  சாவகச்சேரி பொலிஸார் அழைக்கப்பட்டனர். அதற்கு முன்னர் தாக்குதல் நமத்திய கும்பல் 
அங்கிருந்து தப்பித்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 29 மார்ச், 2019

நாம் சுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா 6 வழிகள்

பணத்தை கையாளுவது மிகவும் கடினமான காரியமாகும். அதற்கு பல காரணங்கள் உண்டு. பலருக்கு செல்வத்தை மதிப்பிட்டு வைத்துக்கொள்வது என்பது புரியாத விஷயமாக உள்ளது. இன்றைய 
உறுதியற்ற பொருளாதார உலகில் வாழும் நாம் திட்டமிட்டு பணத்தை செலவு செய்வது அவசியம்
நிதி திட்டமிடல் என்னும் விஷயத்தை நாம் சரியாக திட்டமிட்டால் எளிய மற்றும் நிலையான தீர்மானங்களை எடுக்க முடிகின்றது. இதனால் நமது இலக்கையும் எளிமையாக எட்டவும் முடியும். கீழ்வரும் பகுதியில் பணம் சேமிக்கும் ஐந்து வழிகளை
 பற்றிப் பார்ப்போம்.
* பட்ஜெட்
ஒரு வீட்டை பராமரிக்கும் நீங்கள் வரவு செலவு கணக்கை மேம்படுத்துவது மிகவும் அவசியம். இதை நாம் சிறு தொகையாக இருந்தாலும் பெருந்தொகையாக இருந்தாலும் சரி குறித்து வைக்கும் பொழுது பண புழக்கத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். பணம் நமக்கு எந்த வகைகளில் வருகின்றது, மாத செலவுகள் என்னென்ன ஆகியவற்றை பதிவு செய்வது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் அவ்வப்போது ஆய்வு செய்து, நாம் சரியான பாதையில்
தான் செல்கிறோமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
* கறி மற்றும் மீன் இறைச்சிகளை தவிர்ப்பது
நமக்கு அதிகமாக செலவாகும் உணவு என்றால் அது இறைச்சி தான். இதை நாம் தவிர்த்தால் பெரும் அளவில் பணத்தை சேமிக்க முடியும். காய்கறிகள் மிகவும் சிறந்த உணவுகளாகும். பீன்ஸ், அவரை மற்றும் இதர காய்கறிகளில் உள்ள புரதச் சத்து பிரம்மிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அதிகமாக உள்ளது. இது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதாகவும் உள்ளது.
* பணி செய்யும் இடங்களில் கவனிக்க 
வேண்டியவை
நமது அலுவலகத்தில் கிடைக்கும் பயனுள்ள திட்டங்களை நாம் விட்டு விடக்கூடாது. அதாவது அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கு மருத்துவம், விடுமுறைகள், ஆயுள் காப்பீடு, கல்வி உதவித் திட்டங்கள், பாதுகாப்பு முறைகள் மற்றும் பெட்ரோல் பில்லின் தொகையை திருப்பித்தருவது ஆகிய பல வசதிகள் நமக்கு கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இலவச தேனீர், உணவு மற்றும் வரும் லாபத்தில் பங்கு தருவது ஆகிய பல வகைகளிலும் உங்களுக்கு வசதிகள்
தரப்படுகின்றது. இதை எல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவைகளை நாம் கடைப்பிடிக்கும் போது சிறிது சிறிதாக சேமித்தாலும் பெரும் தொகையை நாம் பிற்காலத்தில் இதனால் அடைய முடியும்.
* செலவு செய்யும் முன் 
சேமிக்க வேண்டும்
ஒவ்வொரு மாதமும் நாம் என்ன செலவு செய்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நமது தேவைகளில் எது முதன்மையானது என்பதை நாம் பட்டியலிட்டு அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும். மளிகை சாமான்கள், தண்ணீர், மின்சாரம், கடன் ஆகியவற்றிற்கான தொகையை செலுத்துவதற்கு முன் நமது தனிப்பட்ட தேவைக்கான தொகை
யை நாம் ஒதுக்கி வைப்பது நல்லது. நமது அத்தியாவசிய தேவைகளை பார்த்துக்கொள்ள இவை உதவியாக இருக்கும். நமது சம்பளத்தை கொடுத்த உடன் சிறிதளவு பணத்தை எடுத்து சேமிப்பு கணக்கில் வைத்துக் 
கொள்வதும் நல்லது.
* ஓய்வு காலத்திற்கான சேமிப்பு

இன்னும் ஒரு படி மேலே சென்றுப் பார்க்கும் போது ஓய்வு காலத்திற்கான சேமிப்பை பற்றி
நாம் சிந்திப்பது நல்லது, பொரும்பாலனோர் இதை பற்றி சிந்திப்பதே இல்லை. நாம் எங்கு வாழ வேண்டும், வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு அந்த இலக்கை நோக்கி செயல்படுதல் வேண்டும். இதனால் நாம் யாரையும் நம்பி இருக்காமல் சுதந்திரமாக பிற்காலத்தை கழிக்க முடியும். வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் அதற்கேற்ப சேமிப்புகளை நாம் காப்பீடுகளாக வைத்துக் கொள்வது 
சிறந்ததாகும்
இன்றைய காலத்தில் தொலைத்தொடர்பு சாசனத்திற்கு செலவிடும் பணம் மிக அதிகமாக காணப்பட்டுகிறது. முடிந்த வரை இணையத்தளத்தில் இருந்து விலகி இருப்பதால் அதிக பணத்தை சேமிக்கலாம். நீங்கள் இந்த செய்தியைப் படிக்கும் போதும்  உங்கள் பணத்தை செலவிடுகிறார்கள்.
பணத்தை  சேமிப்போம் எதிர்காலத்தில் 
சிறப்பாக வாழ்வோம்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 25 மார்ச், 2019

யாழ் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய நிர்­வா­கத்­தி­னரின் அறிவித்தல்

யாழ் மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் ஆல­யத்­துக்கு உந்­து­ரு­ளி­யில் வரு­கின்ற அடி­யார்­கள் அவ­சி­யம் தலைக்­க­வ­சம் அணிந்து வரு­மாறு ஆலய நிர்­வா­கத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.
வாகனப் பாது­காப்பு நிலை­யங்­க­ளில் தலைக்­க­வ­சம் பாது­காப்­பாக வைப்­ப­தற்கு ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்பட்­டுள்­ள­தால் தலைக்­க­வ­ச­மின்றி ஆல­யத்துக்கு வருகை தர­வேண்­டா­மென உந்­து­ரு­ளி­க­ளில் வரு­வோ­ருக்கு ஆல­யத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.
கடந்த வரு­டம் தலைக்­க­வ­ச­மின்றி வந்த பெண் வீதி விபத்­தில் சிக்கிச் சாவ­டைந்­தார். இந்­நி­லை­யில் உயிர்ச் சே­தத்தைத் தடுக்­கும் முன்­னேற்­பாடு நட­வ­டிக்­கை­யாக பாது­காப்பு நிலை­யங்­க­ளில் தலைக்­க­வச பாது­காப்பு ஒழுங்­கு­கள் மேற்கொள்­ளப்­பட்­டுள்­ளன.
மேலும் ஆல­யத்­துக்கு வரும் வாக­னங்­களை வீதி­யோ­ரம் விடா­த­வாறு அரு­கில் உள்ள வித்­தி­யா­லய மைதா­னத்­தில் தரிப்­பிட வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.
பாட­சாலை அருகே உள்ள சாலை­யூ­டாக வாக­னங்­க­ளைக் கொண்டு சென்று தரிப்­பி­டத்­தில் விடு­மா­றும் அறி­வித்­துள்­ள­னர்.
ஆல­யத்துக்கு வரு­வோர் தமது உடை­மை­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில் தங்க ஆப­ர­ணங்­கள் அணிந்து வரு­வதைத் தவிர்க்­கு­மா­றும் 
கேட்­டுள்­ள­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 23 மார்ச், 2019

அவசர அறிவித்தல் வடக்கில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு

நாட்டின் 9 மாவட்டங்களில் 23,03,2019, கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான 
காலநிலை நிலவும்.
இது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிக நீரை பருகுமாறும் நிழலான இடங்களில் தரித்திருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் 
அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, இதுவரை யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மக்களுக்கு ஓர் அவசர முன்னறிவித்தல்.!மின்சாரத் தடை தொடரும்

இலங்கையில் தொடர்ந்தும் மின்விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்
து தொடர்பான தகவல்கள் கடந்த 18ம் திகதி மின்சக்தி அமைச்சின் செயலாளரினால், உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக முன்னறிவித்தல் எதுவும் இன்றி மின்சாரம் 
துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மின்தடை காரணமாக எந்தவித அறிக்கையையும் மின்சார சபை வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.எனினும், நாட்டில் சீரான மழை பெய்யும் வரை மின்சார விநியோகம் தடை செய்ய நேரிடலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 12 மார்ச், 2019

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய சூழல் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினை முன்னிட்டு ஆலயச் சூழலை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
 வருகின்றன.
ஆலயத்தின் சூழலானது முரசு மோட்டை ஊரியான் கோரக்கன் கட்டு பிரதேசங்களை சேர்ந்த மக்களால் சுத்தம்
 செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் மதுப்பாவனை மற்றும் பொலித்தீன் பாவனை என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 14ஆம் திகதி விளக்கு வைத்தல் பூசையுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 21ஆம் திகதி இரவு நிறைவு பெறவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 11 மார்ச், 2019

நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் பொழுது எரிபொருளிக் விலை சூத்திரத்தை மையப்படுத்தி விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் குழு நாளை  கூடவுள்ளது. இதற்கமைய  நாளை நள்ளிரவிற்கு பிறகு எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என  நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருளின் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் . உலக சந்தையில் எரிபொருளின் விலையில் கடந்த வருடத்தின்  மூன்றாம் காலாண்டு தொடக்கம் நிலையான ஒரு தன்மை காணப்படாமையின் காரணமாகவே   எமது  எரிபொருள் விலையில் ஒரு நிர்ணய தன்மையினை பேணமுடியாதுள்ளது.
கடந்த மாதம் 11 ஆம் திகதி  எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டமையினை தொடர்ந்து எரிபொருள்  விலை சூத்திர  விலை நிர்ணய குழுவின்  தரப்படுத்தலுக்கு அமைய  ஒக்டைன்  92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 06 ரூபாவிலும்,  ஒக்டைன் 95 ரக  பெற்றோல் 05 ரூபாவிலும், ஒடோ டீசல்  ஒரு லீற்றர்  04 ரூபாவிலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர்  08 ரூபாவிலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நீங்கள் அறியாத அற்புத மருத்துவப் பலன்கள்கொண்டஓமம்



சிலர் எவ்வவயிறுப் பொருமல் நீங்க:
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
புகைச்சல் இருமல் நீங்க:
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
மந்தம்:
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
பசியைத் தூண்ட:
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.சுவாசகாசம், இருமல் நீங்க
காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த 
மருந்தது செய்முறை:
ஓமம் – 252 கிராம்ஆடாதோடைச் சாறு – 136 கிராம்இஞ்சி ரசம் – 136 கிராம்பழரசம் – 136 கிராம் புதினாசாறு – 136 கிராம்இந்துப்பு – 34 கிராம் சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.
சிறு குறிப்புகள்:
1. மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.
2. ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.
3.ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
4. ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.
5. ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
6. சோர்வு நீங்க ஓமத்தை
நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா? ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா? தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம். ஓமத்தில் 
சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு 
இது தான சாப்பாடு.
7. வயிற்றுக் கோளாறுக்கு ஓம் தான் சிறந்த மருந்து.
8. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.
9. ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
வயிற்று வலி ஏற்பட்டால்:
ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும். நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும்.
மூட்டு வலிக்கு:
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.

மார்ச்சளி இருந்தால்:
ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம்.
பல்வலி இருந்தால்:
இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
வயிறு “கடமுடா” வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்.
10. தொப்பையை குறைக்க:
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.
11. ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு:
ஓமம், சீரகம் கலவை வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. “ஜெலூசில் ” போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க்க விளைவுகளும் 
கிடையாது.
செய்முறை:
ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து ‘மிக்சியில்’ போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம். மந்த வயிற்றுக்கான அறிகுரி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக “கல்யாண சமையல் சாதம் ” சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும்.
12. இடுப்பு வலி நீங்க:
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
ளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் 
உடல் பலம்பெறும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 16 பிப்ரவரி, 2019

சரஸ்வதி சிலை ஐந்த இலட்சம் ருபா செலவில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில்

யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி உருவச் சிலை இன்று வெள்ளிக்கிழமை திறந்து 
வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைச் சமூகத்தின் வேண்டுகோளுக்கமைய யாழ் நகரிலுள்ள மகாநதி நகைமாட உரிமையாளரால் ஐந்த இலட்சம் ருபா செலவில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலையை பாடசாலையின் அதிபர் மகேந்திரராசா மற்றும் மேற்படி நகைகக் கடை உரிமையாளர் ஆகியோர் இணைந்து 
திறந்து வத்தனர்.
பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற விசேட அபிசேக ஆராதனை வழிபாடுகளின் பின்னர் இச் சிலை உத்தியோகபுர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் யாழ் இந்து மகளீர் கல்லூரி அதிபர் உட்பட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர். மாணவர்கள் எனப் பலரும் கலந்து 
கொண்டிருந்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தனியார் கல்வி நிலையங்களுக்கு வவுனியாவில் பூட்டு

வவுனியா தனியார் கல்வி நிலையங்களை நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் கல்வி நிலையங்களின் சங்கத்தலைவர் தி. கோபிநாத் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாவித்தியன் தினம் நாளைய தினம் பிரமாண்டமான முறையில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இந் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கோடு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை 3.2.19 மகாவித்தியன் தினம் அனுஸஷ்டிக்கப்படவுள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்களை மூடி குறித்த நிகழ்வில் பழைய மாணவர்களுடன் அவர்களது பிள்ளைகளும் நிகழ்வில் கலந்துகொண்வதற்கு 
இலகுவாகவும் தனியார் கல்வி நிலையங்களை மூடி
 ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா நகரசபையின் தலைவர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவாகள் விடுத்த
 கோரிக்கையினை தனியார் கல்வி நிலையத்தின் 
ஒன்றிய நிர்வாகம் இன்று விசேட கூட்டமொன்றின் ஊடாக தீர்மானத்தினை எடுத்துள்ளது.
அதன் பிரகாரம் நாளை ஞர்யிற்றுக்கிழமை 11 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட அனைத்து தனியார் வகுப்புகளையும் நிறுத்துவது எனவும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகள் வழமையோபன்று நடத:துவது எனவும் திர்மானிக்கப்பட்டள்ளது.
உயர்தர வகுப்பு மாணவர்கள் பலர் வேறு பிரதேசங்களில் இருந்து வவுனியாவிற்கு விடுமுறை நாட்களில் வருகை தந்து கற்பதுடன் சிலர் தங்கியிருந்தும் தமது கற்றல் செயற்பாட்டை 
முன்னெடுக்கின்றனர்.
அத்துடுன் உயர்தர வகுப்புகளுக்கு கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்தும் ஆசிரியர்கள் வவுனியாவழிற்கு வருகை தருவதனால் குறித்த வகுப்பை நிறுத்துவது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டள்ளது என தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஆவரங்கால் பாடசாலை அதிபரின் கீழ்த்தரமான செயல்

ஆவரங்கால் பகுதியில் அமைந்திருக்கும் பாடசாலை ஒன்றின் அதிபர், யாழ் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகையில் பத்து லட்சம் ரூபாவினை பெற்று, குறைந்த ரூபாவிற்கு மட்டும் வேலையை செய்து முழுப்பணத்திற்கான கணக்கை காட்டியதாக பாடசாலை நலன்விரும்பிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, வெளிநாட்டில் இருக்கும் பழைய மாணவர்களால் வாங்கப்பட்ட காணிக்கும் அவர்களால் செய்யப்படட வேலைகளுக்கும் இந்த பத்து லட்சத்திலேயே கணக்கு காட்டப்பட்டிருப்பதாக மேலும்
 தெரிவிக்கின்றனர்.
முன்னரும் பாடசாலை பணத்துடன் முரண்பாடுகளை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலமுறை கணக்கு வழக்கு கேட்டும் தெரிவிக்காத இந்த அதிபர் குறித்து, யாழ்ப்பாண கல்வித் திணைக்களமே இதற்கான உண்மைத்தன்மையை அறியத்தரவேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே தமக்கு இருப்பதாக இந்த பாடசாலையின் நலன்விரும்பிகள்
 தெரிவிக்கின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>