வணக்கம்

திங்கள், 30 நவம்பர், 2015

யாழ் பொலிஸாரால் கஞ்சாவுடன் இருவர் கைது!!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த தனியார் பஸ் வண்டியிலிருந்து 7.5 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு செல்லத் தயாராக இருந்த பஸ் நிறுத்தப்பட்டு பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கொங்ரீட் சில்பர் கட்டைகளில் விரிசல் வடக்கு ரயில் பாதையில்

வடக்கு தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொங்ரீட் சில்பர் கட்டைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மாத்தறை – பெலியத்த தொடர்ந்து பாதையின் நிர்மாணப் பணிகளில் தொடர்ந்து திணைக்களத்தினால் சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்கு பிழைகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் 
கூறப்பட்டுள்ளது.
இந்தியா – இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையில் வடமாகாண தொடர்ந்து பாதை நிர்மாணப் பணிகள் கடந்த 2011ம் ஆண்டு 
ஆரம்பிக்கப்பட்டது.
800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இந்த வேலைத்திடம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் மொத்த நீளம் 146 கிலோமீற்றர்களாகும்.
அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் நிர்மாணிக்கப்படும் தொடர்ந்து பாதைகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கான கடந்த மே மாதம் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் அறிக்கையின்படி, வடக்கு தொடர்ந்து பாதையில் பொருத்தப்பட்டுள்ள சில்பர் கட்டைகள் தற்போதையே வெடித்தும், விரிசல் அடைந்தும் காணப்படுவதாக 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஒல்லாந்தர் கால 200 வருடம் பழைமையான கோபுரம் சரிந்தது

கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஒல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் 
(28,11,15) அதிகாலை 2 மணியளவில் உடைந்து 
வீழ்ந்துள்ளது.
இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு
 செய்யப்பட்டுள்ளது.
60 அடி உயரமான இந்த கோபுரம் புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,  கோபுரம் அமைந்துள்ள பேஸ்லைன் வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி புனரமைப்பு நடவடிக்கையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
கோபுரம் உடைந்து வீழ்ந்தமையால் அருகிலிருந்த தாய், சேய் மருத்துவ நிலைய கட்டடத்தின் முன் பகுதிக்கு சேதம்
 ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக  தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‚இந்த கோபுரம்;  புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்லைன் வீதியில் 
வீதி புனரமைப்பு 
வேலைகள் நடைபெறுவது தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. கோபுரத்தை சுற்றி நிலம் தோண்டப்பட்டுள்ளது‘ என 
அவர் குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 28 நவம்பர், 2015

ஸ்ரீலங்கா விமானம் மீது பறவை மோதியது!!!

கொழும்பிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸக்கு சொந்தமான UL131 விமானம் தரையிறங்கும் போது பறவை ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த விமானம் 7 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தரித்து நின்றதாக தி ஹிந்து செய்தி 
வெளியிட்டுள்ளது.
குறித்த விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் இடதுபக்க இயந்திர பகுதி மீது பறவை மோதியுள்ளதாகவும் எனினும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணிகள் விமானம் நேற்று வியாழக்கிழமை காலை 9.40 அளவில் ஸ்ரீலங்கா நோக்கி பயணிக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் காரணமாக தாமதாகவே புறப்பட்டதாகவும்
 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பிலிருந்து திருச்சி நோக்கி நேற்று மதியம் சென்ற ஒரு தொகுதி பொறியியலாளர்கள் குழு குறித்த விமானத்தித் திருத்தப்பணிகளை மேற்கொண்டதை அடுத்து, குறித்த விமானம் நேற்று மாலை 5.20 அளவில் மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 26 நவம்பர், 2015

மைத்திரி சிறிசேன பியர் மீது கடுப்பில்.

வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவை
 பணித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 5 % க்கும் குறைந்த அல்கஹோல் மட்டம் கொண்ட மதுபானங்களின் இறக்குமதி வரியை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அல்கஹோல் மட்டம் குறைந்த ஒரு லீட்டர் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரி 190 ரூபாவிலிருந்து 160 ரூபாவாக குறைக்கப்பட்டது.
இதன்மூலம் மதுபான வகைகள் உக்குவிக்கப்படுவதால் வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி நிதி அமைச்சரை 
பணித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 25 நவம்பர், 2015

நபரொருவரால் 18 வயதான பாடசாலை மாணவிகடத்தல்!!

அனுராதபுரம் நகரத்தில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் , 35 வயதான திருமணமான நபரால் இன்று காலை 
கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
அவருடைய நண்பிகளோடு மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் கடத்தப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த பெண்ணை தாக்கி பலவந்தமாக முச்சக்கரவண்டியில் அழைத்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் போது குறித்த மாணவியின் நண்பிகளால் முச்சக்கரவண்டியில் இலக்கம் குறிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் முச்சக்கரவண்டியை பொலிஸார்
 கண்டுபிடித்ததுடன் , 
 அதன் சாரதியிடம் மேற்கொண்ட விசாரனையின் போது முச்சக்கரவண்டியில் இருந்த அந்த மாணவியை வெஸ்ஸகிரிய பிரதேசத்தில் வைத்து இருசக்கரவாகனத்தில் ஏற்றி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவியை கடத்திய நபர் அனுராதபுரம் இரண்டாம் கட்டை பகுதியை சேர்ந்தவராவார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2015

கஞ்சாவுடன் பஸ் நிலையத்தில் இரு இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு நகரில் இன்று காலை கஞ்சா கலந்து போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்த இருவரை சோதனையிட்டபோதே கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
ஓட்டமாவடியை சேர்ந்த குறித்த நபர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கலநத போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் 18 மற்றும் 22 வயதினையுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணையை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>

வெள்ளி, 20 நவம்பர், 2015

தொற்று நோய்களின் தாக்கம் சாவகச்சேரியில் அதிகரிப்பு!!!


யாழ்.சாவகச்சேரி பகுதியில் டெங்கு காய்ச்சல், விஷக் கடி, வயிற்றோட்டம் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொற்று நோய்கள் பரவலை தடுப்பதற்கான விசேட கரும்பீடம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வடமாகாணத்தில் கனமழை பெய்த நிலையில் மழையினால் யாழ்.மாவட்டத்தில் அதிகளவான பாதிப்பை 
சந்தித்திருந்தது.
இந்நிலையில் மழை வெள்ளம் தணிந்துள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதாக சாவகச்சேரி சுகாதார பகுதி அறிவித்துள்ளதுடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொற்றுநோய்களை தடுப்பதற்கான விசேட கரும்பீடம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றுநோய்கள் தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளதுடன், விஷகடி தொடர்பிலும் மக்களை அவதானமாக இருக்குமாறும் மக்கள்
 கேட்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 19 நவம்பர், 2015

ரசாயன ஆயுதங்களை கொண்டு பிரான்ஸில் தாக்குதல் நடத்தப்படலாம்?

பிரான்ஸில் தீவிரவாதிகள் "ரசாயன அல்லது உயிரியல்(வைரஸ்) ஆயுதங்களை" பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டு பிரதமர் மானுவெல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்து 
உள்ளார்.
பாதுகாப்பு நிறைந்த பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 129 பேர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தாக்குதலை அடுத்து தீவிரவாதிகள் வேட்டையில் பிரான்ஸ்
 போலீஸ் படை 
இறங்கிஉள்ளது. நேற்று போலீஸ் நடத்திய ரெய்டின் போது பெண் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு 
உள்ளது.
இந்நிலையில் பிரான்ஸில் அவசரநிலையை நீட்டிப்பது தொடர்பாக பிரான்ஸ் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மானுவெல் வால்ஸ் பேசுகையில், தீவிரவாதிகள் "ரசாயன அல்லது உயிரியல்(வைரஸ்) ஆயுதங்களை" பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுத்தார். “எதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது.
 ரசாயன அல்லது
 உயிரியல்(வைரஸ்) ஆயுதங்களாலும் ஆபத்து உள்ளது. இதற்கிடையே விமான பயணம் செய்பவர்கள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் தகவல்களை பறிமாறிக் கொள்ளவேண்டும் என்றும் அழைப்பு விடுத்து 
உள்ளார்.
தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்க, நமக்குள் ஒருங்கிணைப்பு என்பது தேவையானது என்று மானுவேல் வால்ஸ் கூறிஉள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 18 நவம்பர், 2015

கட்டுமுறிவு ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு உதவி

வாகரைப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த கட்டுமுறிவு, ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் உதவிகளை செவ்வாய்கிழமை வழங்கி வைத்தார்.
அண்மையில் தொடர்ந்து மழைய பெய்ததால் கட்டுமுறிவுகுளம் நிரம்பி நீர் வடிந்ததால் கட்டுமுறிவு, ஆண்டான்குளம் நடைபாதை தடைப்பட்டது. அத்தோடு கட்டுமுறிவுக்கு கதிரவெளியில் இருந்து செல்லும் வீதிகளும் இடை இடையே நீரில் மூழ்கியதால் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
அத்தோடு சில வீடுகளும் மழை நீரில் பாதிப்புக்குள்ளானது. இதனால் இப்பகுதி மக்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். கட்டுமுறிவில் 148 குடும்பமும், ஆண்டாங்குளத்தில் 75 குடும்பமும் பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு அவசர அவசரமாக வாகரைப் பிரதேச செயலாளர் மூலம் இரு நாள் உணவு உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அப்பகுதியையும், பாதிக்கப்பட்ட இரு கிராம மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு தமது சொந்த நிதியில் அவசிய தேவைகளின் ஒன்றான பாய் மற்றும் குழந்தைகளுக்கான நுளம்பு வலை போன்ற உதவிகளை இரு கிராமத்திலுமுள்ள 223 குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.
இப்பகுதி மக்களின் தொழில் நிலைகள் முற்றாக பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு உணவு தேவையை நிறைவேற்ற உணவுப் பொருட்கள் உதவிகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் வேண்டியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் இம்மக்களுக்கு உதவும் 
மனப்பாங்கு கொண்ட
 பெருந்தகைகள் மற்றும் தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள், புலம்பெயர் உறவுகளை இவர்களின் உணவு தேவையை நிறைவேற்றி உதவுமாறு வேண்டி கொள்கின்றார். அதேவேளை தாமும் இதற்கு ஏற்ற ஆதரவுகளை புரிவதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரைப் பிரதேசமான மிகவும் வறுமைக் கோட்டில் அமைந்த மக்களை கொண்ட பகுதியாகும். கடந்த யுத்த சூழலும், சுனாமி அனர்த்தத்தாலும் இப்பகுதி மிகவும் 
பாதிக்கப்பட்டது.
இவ்வாகரைப் பிரதேசத்தின் கட்டுமுறிவு, ஆண்டான்குளம் ஆகிய இரு கிராமங்களும் பொலநறுவை மாவட்டத்தை எல்லையாக கொண்டதான நடுக் காட்டின் மத்தியில் அமைந்த கிராமங்களாகும். இக்கிராமங்களுக்கு செல்வோர் கதிரவெளி சந்தியில் இருந்து 19 கிலோ மீற்றர் காடு வழியாக செல்ல வேண்டும்.
கடந்த பல காலமாக போக்குவரத்து வசதி எதுவும் இன்றி கஷ்ரப்பட்ட இம்மக்களுக்கு அண்மையிலேயே ஒரு நாளைக்கு ஒரு தடவை பஸ் ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதைகள் உடைக்கப்பட்டதால் அல்லது பழுதடைந்ததால் வாகனம் செல்ல முடியாது. அரச
 அலுவலகம் என்றால் 
பாடசாலை மாத்திரமே இங்கு உண்டு. ஏனைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற 19 கிலோ மீற்றர் அவர்கள் நடையாகவோ அல்லது துவிச்சக்கர வண்டி அல்லது மோட்டார் வாகனம் போன்றவை மூலமும் கதிரவெளிக்கு வரவேண்டும்.
இக்கிராம மக்கள் தேன் எடுத்தல், மிருகங்களை பிடித்தல், காட்டு பழங்களை பெற்று 19 கிலோ மீற்றர் கதிரவெளிக்கு கொண்டு வந்து விற்றல், கமச் செய்கை காலங்களில் சிறு கமம் மற்றும் அங்குள்ள குளங்களில் மீன் பிடித்தல் உட்பட்ட தொழிலை புரிகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 17 நவம்பர், 2015

முதியவர்ஒருவர் ஆபாச இருவெட்டுக்களுடன் கைது

ஆபாச காட்சிகள் அடங்கிய இருவெட்டுக்கள் சிலவற்றை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 69 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் இன்று கைது 
செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 16 நவம்பர், 2015

கொலைக்களமாக மாறும் யாழ் போதனா வைத்தியசாலை

யாழ் போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்கள், தாதியர்களது அசமந்தப் போக்கினால் பல உயிர்கள் காவு கொள்ளும் நிலை அண்மையில் ஏற்பட்டுள்ளது.
மாரடைப்பால் சென்ற நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து இரண்டாம் விடுதியில் அனுமதிக்கபட்டு 12 மணித்தியாலங்கள் வரை கதிரையிலேயே அமர்ந்திருந்திருக்கிறார். அவருக்கு கட்டில் கொடுக்கபடவுமில்லை. படுப்பதற்கு பாய் வசதிகள் கூட செய்துகொடுக்கப்படவில்லை. அங்கு படுப்பதற்கு 
இடமுமில்லை.
அங்கே பணி புரிகின்ற தாதியர்கள் நோயாளிகள் மீது எரிந்து விழுவதும் மரியாதை குறைவாக கதைப்பதும் நோய்க்காரணமாக பயத்தோடு இருக்கின்ற நோயாளிக்கு உளவியல் ரீதியாக பாரிய தாகத்தை 
ஏற்படுத்துகிறது.
யாழ் போதனா வைத்தியசாலையின் இரண்டாம் இலக்க விடுதியானது ஒரு தனியார் வைத்தியருக்கு உரியது. இவர் தனியார் மருத்துவமனைகளிலும் பணி புரிவதனால் அங்கு வரும் நோயாளிகளையே போதனா வைத்தியசாலையிலும் கவனிக்கிறார் என்றும் மற்றைய நோயாளிகளை கவனிப்பதில்லை என்றும் நோயாளர் மத்தியில் பெரும் குற்றச்சாட்டு இருக்கின்றது.
இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த விடுதியில் பணி புரியும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் வேண்டா வெறுப்பாக தமது கடமைகளை செய்வதும், முகம் பார்த்து கடமைகளை செய்வதும், நோயாளர்கள் மனம் நோக நடந்து கொள்வதும் இவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மாறாக தெரியாது விட்டால் அவர் ஒரு விடுதியின் கட்டுப்பட்டாளராக இருக்க தகுதியில்லை.
வயதானவர்கள் சென்றால் ஒருவிதமான பார்வையும் மற்றவர்கள் சென்றால் வேறோருவிதமான பார்வையும் இங்கே செலுத்தப்படுகிறது என நோயாளர்களும் பராமரிப்பளர்களும் 
தெரிவிக்கின்றனர்.
இந்த விடுதியின் வைத்தியர்கள் தாதியர்களின் அசமந்தப் போக்கினால் 01.11.2011 அன்று கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையை சேர்ந்த லீனஸ் பெர்ணடேற்றம்மா அவர்கள் மரணத்தை தழுவியமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 நவம்பர், 2015

வட-கிழக்கில் இன்று ஹர்த்தால்முற்றாக முடங்கியது யாழ்ப்பாணம்!

வடக்கு கிழக்கில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் போராட்டத்தினால் யாழ். மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் 
பயங்கரவாத
 தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைய யாழ். மாவட்டத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள், பல்கலைக்கழம் என்பன மூடப்பட்டுள்ளதுடன், யாழ் நகரம் உட்பட யாழ் மாவட்டமே வெறிச்சோடி காணப்படுகின்றது. யாழ் நகரில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதால் மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹர்தாலை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர், விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் மக்களின் அத்தியாவசியமான வைத்தியசாலைச் சேவைகள்
 வழமைப்போல் இயங்குவதுடன், தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் வெளிமாட்டங்களில் இருந்து யாழ். மாவட்டத்திற்கான போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அழைப்பு விடுத்துள்ளன. அத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பூரண ஆதரவை 
வழங்குவதாக
 அறிவித்துள்ளன. வடக்கு மாகாண சபை, சர்வமத தலைவர்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள், கல்விச் சமுகம், பல்கலைக்கழக சமுகம், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், இந்து, கத்தோலிக்க அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை இந்த ஹர்த்தாலுக்கு வழங்குவதாக 
அறிவித்துள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 11 நவம்பர், 2015

புகைப்பட போட்டியில் தேசிய ரீதியில் மானிப்பாய் இந்து மாணவன் வெற்றி

தேசிய ரீதியில் மூன்றாவது கண்ணால் உலகை காண்போம்' எனும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே தேசிய ரீதியில் நடத்தப்பட்ட புகைப்படப் போட்டியில் 21 வயதுப் பிரிவில் மானிப்பாய்
 இந்துக் கல்லூரி மாணவன் சிவநேஸ்வரன் நிஜந்தன் வடமாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
 கல்வி அமைச்சானது பாடசாலையில் இயங்குகின்ற ஊடகக்கழக உறுப்பினர் பங்குபற்றுகின்ற வகையில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டியிலேயே மேற்படி விருதினை பெற்றுக்கொண்டுள்ளார்.
 மானிப்பாய் இந்துக் கல்லூரியில் எஸ்.ரி. அருள்குமரனை பொறுப்பாசிரியராக கொண்டு இயங்கும் காண்பிய ஊடகக் கழகத்தின் தலைவராக மேற்படி மாணவன் செயற்படுகின்றமை
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 8 நவம்பர், 2015

கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு (படங்கள்)

யாழ் கைதடி பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் 
குறிப்பிட்டனர்.கைதடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை முதல் குறித்த இளைஞர் காணாமற் போயிருந்த 
நிலையில் இன்று
 காலை அவரது சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 7 நவம்பர், 2015

காட்டுக்குள் ஆசிரியர் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு ஐயன்கேணி காட்டுப் பகுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஐயன்கேணி மயானத்திற்கு பிற்பகுதியில் காணப்படும் காட்டுப்பகுதிக்குள் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தினை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
ஐன்கேணியைச் சேர்ந்த ஆசிரியரான அழகையா அச்சுதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக அடயாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் வாகரை பாடசாலையில் சித்திரப்பாட ஆசிரியர் என்பதுடன் இவர் ஆலயங்கள் உட்பட பல இடங்களில் ஓவியங்கள் வரையும் சிறந்த ஓவியர் எனவும் தெரியவந்துள்ளது.

இவரது தற்கொலைக்கான காரணம் மிகவும் மர்மம் நிறைந்ததாக உள்ளதாக ஊர் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக ஏறாவூர் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி 
மக்கள் கூறினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வியாழன், 5 நவம்பர், 2015

பொம்பிளைப்பிள்ளையின் திருவிளையாடலால்! காதலித்தவன் நஞ்சு குடித்தான்!!

நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் தன்னைக் காதலித்த இளைஞனை ஏமாற்றி வெளிநாடு செல்ல முற்பட்டதால் குறித்த இளைஞன் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்ட
 சம்பவம் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் நடைபெற்றது. நீ என்னுடன் தொடர்ந்து கதை, எது வேண்டுமானாலும் என்னைச் செய்... ஆனால் கலியாணம் கட்டமாட்டேன். ஏனெனில் நான் 
வெளிநாடு செல்லப் போகின்றேன்
 என தன்னை உயிருக்கு உயிராகக் காதலித்த இளைஞனுக்கு சொல்லியுள்ளாள் நெல்லியடி யுவதி. துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் இளைஞன் நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த யுவதியைக் காதலித்து வந்துள்ளான். யுவதியின் தம்பியும் குறித்த இளைஞனும் நண்பர்கள் எனவும் தெரியவருகின்றது.
நண்பர்களான இவர்கள் இருவருமாக ஒன்றாகச் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற போது பொலிசார் மறிக்காது நின்றதால் பொலிசாரிடம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கத. யுவதியும் யுவதியின் பெற்றோரும் குறித்த ஆட்டோக்கர இளைஞன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாக இருப்பது தெரிந்தும் இளைஞனை தமது வீட்டுக்குள் அனுமதித்து அவனுடன் கூடிக்குழாவியுள்ளனர். அத்துடன் யுவதியும் அவனுடன்
 பல இடங்களுக்கு 
தனியே சென்றுவந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் யுவதி குறித்த இளைஞனுடன் நெருங்கிப் பழகுவது பெற்றோருக்குத் தெரிந்தும் அவர்கள் அதைப் பற்றி பொருட்படுத்தாது இருந்துள்ளனர். அத்துடன் குறித்த ஆட்டோக்காரனின் உழைப்பையும் இவர்கள் பெற்று வந்துள்ளதாக துன்னாலை இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் யுவதியின் உறவினர்கள் கனடாவில் இருந்து வந்து யுவதியின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த யுவதிக்கும் ஆட்டோக்காரனுக்கும் இடையில் இருந்த தொடர்பை அறிந்து அவனது 
சமூகத்தைப் பற்றியும் 
அறிந்துவிட்டு அவளை இளைஞனிடம் இருந்த பிரிப்பதற்கு தந்திர நடவடிக்கையில் இறங்கினர். கனடாவுக்கு யுவதியை அழைத்துச் செல்வதாகவும் அங்குள்ள ஒரு இளைஞனுக்கு திருமணம் முடித்து வைப்பதாகவும் யுவதிக்குத் தெரிவித்த போது யுவதி தனது நிலையை மாற்றிவிட்டாள். இதன் பின்னர் குறித்த ஆட்டோக்கார 
இளைஞனுக்கு
 தான் வெளிநாடு போவதாகத் தெரிவித்து இனிமேல் தன்னுடன் தொடர்பு வைக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளாள். இதனைக் கேட்ட ஆட்டோக்கார இளைஞன் குறித்த யுவதியின் வீ்ட்டின் முன் இரவு வேளையில் சென்று தான் நஞ்சு குடிக்கப் போவதாக யுவதியிடம் தெரிவித்த போது யுவதியும் ‘நீ குடித்தால் எனக்கு என்ன?‘ என கேட்டு அவளை தற்கொலை முயற்சிக்கு துாண்டியதாகத் தெரியவருகின்றது,
இதனையடுத்து குறித்த இளைஞனும் நஞ்சருந்தியதாகத் தெரியவருகின்றது. இளைஞன் நஞ்சருந்தியதையடுத்து அவனது சகோதரருக்கு குறித்த யுவதியின் உறவினர்கள் தொலைபேசியில் சொல்லிவிட்டு இருந்துவிட்டார்கள். இதன் பின்னர் வரணியில் இருந்து
 இளைஞனின் 
சகோதரன் வந்து இளைஞனை அந்த இடத்தில் இருந்து துாக்கிச் செல்லும்வரையும் யாரும் அவனைக் காப்பாற்ற முற்படவில்லை எனத் தெரியவருகின்றது. தற்போது குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இளைஞன் நஞ்சருந்திய தகவல்கள் பரவியதும் இளைஞனின் நண்பர்களும் 
துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. தன்னைக் காதலித்தவன் ஏமாற்றிவிட்டான் என கூறி பொலிஸ் நிலையம் செல்லும் யுவதிகளுக்கு ஆதரவாக நடக்கும் பொலிசாரும் நீதித்துறையினரும் இளைஞர்களுடன் ஒன்றாகத் திரிந்து அவர்களுடன் பாலியலுறவு கொண்டு அவர்களது உழைப்புக்களைச் சுரண்டி எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு அவனை அம்போ என்று வி்ட்டுவிட்டு இன்னொவனைத் திருமணம் செய்யும் யுவதிகளை தண்டிக்க மாட்டார்களா?? என கேட்கின்றார்கள்.
குறித்த இளைஞன் பொலிசாரிடம் சென்று முறையிட்டால் அவனுக்கு நீதிகிடைக்குமா? வழக்குத் தாக்கல் செய்வார்களா? குறித்த யுவதியை தண்டனைக்கு உள்ளாக்குவார்களா?? என்பது கேள்விக்குறியாக 
உள்ளதாக 
குறித்த இளைஞர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். யாழ்ப்பாணம் உட்பட பபல இடங்களில் நடக்கும் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் யுவதிகள், மாணவிகளின் பிறழ்வுகளுக்கும் அந்தப் பெண்பிள்ளைகளின் பெற்றோரும் காரணமாக உள்ளார்கள் என்பது தெரியவருகின்றது. தனது
 பிள்ளை என்ன
 செய்கின்றாள், யாருடன் நட்புக் கொண்டுள்ளாள் என்பது பற்றித் தெரிந்திருந்தும் அல்லது அது பற்றி அக்கறையில்லாது இருந்துவிட்டு பின்னர் பிரச்சனைகள் வரும் போது குய்யோ முறையோ என கத்திக் கூப்பாடு போட்டு தங்களை நியாயப்படுத்தப் பார்க்கும் பெற்றோரையும் சிறைக்குள் அடைக்க வேண்டியது நீதித்துறையின் கடமையாகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 3 நவம்பர், 2015

உணவிற்கு பின்னர் சுடுநீர் அருந்த வேண்டியதன் அவசியம்!

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..
உங்களின் விலைமதிப்பற்ற
இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக
படிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்
உணவிற்கு பிறகு குளிர்ந்த
தண்ணீரை விடுத்து சூடான தேநீர்
அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம்
வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம்
உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள்
திடப்பொருளாக
மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில்
இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.
இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால்
உறிஞ்சபடும்.
இது நம் குடலில்
அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக
விரைவில், இது கொழுப்புகளாக
மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப்
குடிப்பது நல்லது.
மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும்
கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர
வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக
நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும்
கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட
பொதுவான அறிகுறிகள் ஆகும்.
60% சதவீத மக்கள் தூக்கத்தில்
மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால்
எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த
தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும்
எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக
பகிருங்கள்.
விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம்
ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 2 நவம்பர், 2015

காணோளியில் வேற்றுகிரக விண்கலம் தெளிவாக பதிவானதால் பரபரப்பு !

ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரை எத்தனையோ காணோளிகள் இணையத்தில் வெளியாகியுள்ள
 நிலையில், 
தற்போது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட காணோளி ஒன்றில் ஏலியன்களின் வேற்றுகிரக விண்கலம் தெளிவாக பதிவாகியிருப்பது ஏலியன் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ போஸ்டன் நகரில் கடந்த 24-ம் திகதி இரவு 07.00 மணியளவில் இந்த காணோளி எடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>