வணக்கம்

புதன், 31 ஆகஸ்ட், 2016

காலாவதி ஐஸ்கிறீம் .விற்ற வர்த்தகருக்கு அபராதம்

இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால்  நேற்று  திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர். வர்த்தகர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கடற்படை வாகனம் மோதி வயோதிபர் மரணம்

தெல்லிப்பழை தபாற்கந்தோர் அருகில் நேற்றுபிற்பகல் கடற்படை  “ட்ரக்“ மோதி வயோதிபர் மரணமடைந்துள்ளார். 
தெல்லிப்பளையைச் சேர்ந்த  60வயதுடைய ஐயம்பிள்ளை சற்குணராஜா என்பவரே மரணமடைந்தார்.  இவ் விபத்து நேற்று   மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. 
விபத்தில் காயமடைந்தவர் உடனடியாக தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிக்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 4.30 மணியளவில்
 உயிரிழந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

நல்லுார்க் கந்தன் திருவிழாவுக்கு ஆசாரசீலர்களாக வருவதே அவசியம்!

நல்லுார்க்கந்தன் பெருந் திருவிழாவுக்கு வருகை தரும் அடியவர்கள் ஆசரசீலர்களாக வரவேண்டுமேதவிர மேலங்கி இல்லாது வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என யாழ்ப்பாண இந்து சமய மறுமலர்ச்சி அமைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பண்டைய காலத்தில் பிராமணர்கள் தங்களது அடையாளமான பூநுாலை உடம்பில் போட்டிருப்பர். கோவில்களில் பிராமணர்களுக்கும் ஏனைய பக்தர்களுக்கும் வித்தியாசம் தெரிவதற்காகவே மேலங்கியுடன் ஆண்கள் கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று அந்தக்காலத்தில் கோவில்களில் உத்தரவிட்டிருந்ததாக அறிய முடிகின்றது. 
இதையே முட்டாள்தனமாக
 கோவில்களுக்குள் மேலங்கியுடன் செல்லக்கூடாது என தற்போதும் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். உலகம் நவீனமயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந் நேரத்தில் நல்லுார் முருகனே தன்னை மின் விளக்குகளால் அலங்கரித்த வௌவீதி உலா வருவதும், மந்திரங்களையும் நாதஸ்வர மேளச்சத்தங்களை
 ஒலி பெருக்கியில்
 ஒலிபரப்பச் செய்து கொண்டிருக்கும் போது மிகப் பண்டைக்காலத்து புறம்போக்கான ஒரு செயற்பாட்டை தற்போதும் நல்லுாரில் மேற்கொண்டிருப்பது நல்லுார் நிர்வாகத்தின் முட்டாள்தனமான செயற்பாடாகும். நல்லுாருக்கு அருகில் உள்ள வீரமகாகாளி அம்மன் ஆலயத்திற்குள் நல்லுார் முருகனின் திருவிழாவிற்காக 
கட்டண வாகனத் தரிப்பிடத்தை
 உருவாக்கியுள்ளார்கள். அங்கு செல்லும் சிங்கள சுற்றுலாப்பயணிகள் உட்பட அனைவரும் ஆலயத்தின் முன் பக்கத்தில் செருப்புடனே செல்கின்றார்கள். அத்துடன் அங்கு வைத்து அசைவ உணவுகளைப் பிரித்து உண்கின்றார்கள். இதனைத் தடுப்பதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள எந்த இந்து அமைப்பும் முயற்சி செய்யவில்லை. நாம் அதனைக்
 கண்டிக்கின்றோம்.
இவ்வாறான நிலையில் ஒரு சிங்கள சுற்றுலாப் பயணி நல்லுார் ஆலயத்திற்கு வெளியே உள்ள வீதித்தடையைத் தாண்டி நல்லுார் ஆலயச் சுற்றுப்புறத்தினுள் செருப்புடன் செல்ல முற்பட்ட போது அங்கு நின்ற பொலிசார் அவரை செருப்பை கழற்றச் சொல்லியுள்ளார். அதற்கு அந்தச் சுற்றுலாப்பயணி ‘ஏன் கழற்ற வேண்டும்‘‘
 எனக் கேட்ட போது
 இந்துக் கோவிலுக்குள் செருப்புடன் செல்லக்கூடாது‘ என்ற கட்டுப்பாடு இருக்கின்றது என பொலிசார் சொல்லியுள்ளனர். அப்போது ‘நான் அந்தக் கோவிலுக்குள் செருப்புடன் சென்றேன்‘ என வீரமகாகாளி அம்மன் கோவிலைச் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு கேவலமான நிலையில் உள்ளது எமது கோவில்களின் 
செயற்பாடுகள்.
இவ்வாறான நிலையில் நாம் யாழ்ப்பாணம் உட்பட்ட பல இடங்களில் இந்து சமய மறுமலர்ச்சிச் செயற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளோம். நாம் செயற்படுத்தப் போகும் இந்து சமய மறுமலர்ச்சிகளுக்கு இந்து சமயத்தைச் சேர்ந்த அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
தலைவர்
இந்துசமய மறுமலர்ச்சி அமைப்பு.
யாழ்ப்பாணம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 27 ஆகஸ்ட், 2016

கனடா செல்ல பயணித்தவர்கள் விபத்தில் பலி

புத்தளம்-அனுராதபுரம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் மீஓயா பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலும், படுகாயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதுடன் சிகிச்சைக்காக இவர்களை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, யாழ்பாணம்,பருத்தித்துறையை சேர்ந்த 39 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் கனடாவிற்கு செவல்வதற்காக விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தரம் 5 பரீட்சை முடிவுகள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய ரீதியில் இன்று இப்பரீட்சை நடைபெற்று முடிந்தது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு நாட்டின் சகல பாகங்களிலும் பரீட்சை நிறைவடைந்தது. இப்பரீட்சையின் சகல விடைத்தாள்களும் இன்று நள்ளிரவாக முன்னர் கொழும்பிலுள்ள பரீட்சைகள் திணைக்களத்தை வந்தடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த மாதம் 3 ஆம் திகதி முடிவடையவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

குழுவினர்வாள்வெட்டில் குடும்பஸ்தர்யாழில் பலி

இனந்தெரியாத குழுவினர் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - சங்குவேலியில் நேற்றுப் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிவகுமார் பிரணவன் (வயது 35) என்பவரே உயிரிழந்தவராவார்.
 நேற்றிரவு வீட்டின் முன்னால் நின்றிருந்தவரை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட குழு வாளால் வெட்டியது. இதில் அவர் தலை, கழுத்து, கை, கால் பகுதிகளில் கடும் காயங்களுக்கு இலக்கானார். உறவினர்களால் காப்பாற்றப்பட்ட அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமானார். மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபரை கொக்குவிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலைமையிலான குழுவே வாளால் வெட்டியது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் ரவுடித்தனம், வாள்வெட்டுப் போன்ற குற்றச் செயல்கள் கட்டுக்குள் இருந்தன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் யாழ். மக்களிடையே மீண்டும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கம்பியால் முதியவரை தாக்கி சங்கிலி கொள்ளை

யாழ்ப்பாணம், அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், குடும்பஸ்தரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து
 சென்றுள்ளனர்.
இன்று(புதன்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எஸ்.வீ. சமன்குணதிலக,
 தெரிவித்துள்ளார்.
இதன்போது கந்தசாமி மார்க்கண்டேயர் வயது(72) என்ற முதியவரே தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பொலிஸார், தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

உடுவில் பகுதியில் தொற்று நோய் பரவல் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

யாழ். உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளான நாய்கள் கடந்த இரண்டு மாதங்களாக ‘பாவோ’ நோய்த் தொற்றின் தாக்கத்துக்கு இலக்காகி வருவதாக உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.சி. விமலகுமார்
 தெரிவித்துள்ளார்.
பாவோ நோய் வைரஸ் மூலம் பரவும் ஒரு வித நோயாகும். குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்கான நாய்க்கு ஆரம்பத்தில் உணவில் நாட்டமிருக்காது. பின்னர் கடுமையான வாந்தி, வயிற்றோட்டம், இரத்தத்துடன் வயிற்றோட்டம் அல்லது நீரிழப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
கடந்த இரண்டு மாதத்தில் மாத்திரம் ‘பாவோ’ நோய்த் தொற்றுக்கு இலக்கான 30ற்கும் மேற்பட்ட நாய்களுக்கு எம்மால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. பல நாய்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாததன் காரணமாக உயிரிழந்திருக்கின்றன எனவும் எஸ்.சி. விமலகுமார் 
தெரிவித்துள்ளார்.
மேலும், வருடாந்தம் இந்த நோய் உருவாகுவதைத் தடுப்பதற்கான தடுப்பூசியை ஏற்றிக் இந்த நோயைத் தொற்றலை தடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் நாய்கள் உயிரிழப்பதை 
குறைத்துக் கொள்ள முடியும்.
எனவே, எமது கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பகுதிகளுக்குற்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் இந்த நோய்த் தொற்று தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் வைத்திய அதிகாரி எஸ்.சி. விமலகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

விமானம்கடைசி நிமிடத்தில் வெடித்த! பயணியின் திகில் அனுபவம்


எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயில் அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பயத்தில் 
அலறி துடித்தனர்.
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ’போயிங்’ ரக விமானம் இன்று 282 பயணிகள் மற்றும் 18 விமான குழு என 300 பேருடன் துபாய்க்கு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறங்க அனுமதி கேட்டார்.
இதனையடுத்து அந்த விமானத்திற்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. விமானம் துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் பயங்கர சப்தத்துடன் மோதி தரையிறங்கியது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

மாணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

ஊர்காவற்றுறை நாரந்தணை பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை முதல் காணாமற்போயிருந்த நிலையிலேயே, இன்று வெற்றுக் காணியிலுள்ள மரமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவனின் இறப்பு தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், விசாரணைகளை மேற்கொண்டார்.
சரவணை மேற்கு 1 ஆம் வட்டாரப் பகுதியிலுள்ள வேலணை மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்ற தவிசாலன் பானுசன் (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
அத்துடன், தடய அறிவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நீதிவானின் உத்தரவுக்கமைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 
பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

வெளிநாட்டுச்சுற்றுலாப் பயணி ஆரியகுளம் பகுதியில் படுகாயம்

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் படுகாயமடைந்த நிலையில் (29) யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை
 அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் வெளிநாட்டு பிரஜைகளான சுற்றுலா பயணிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்துள்ளனர்.
அதன்போது, அவர்களுக்கு மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள்  வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
இந்த விபத்தில் சுற்றுலா பயணியான பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.