வணக்கம்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

கடும் மழையால் வவுனியாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

வவுனியாவில் கடந்த சில தினங்களாக கடும் குளிருடனான காலநிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் இன்று காலையிலிருந்து கடும் மழை பெய்து வருவதாகவும், இதனால் மக்களின்
 இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.அத்துடன் வர்த்தக நிலையங்கள்இ தூர இடங்களிலிருந்து நகருக்கு வந்த பயணிகள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன.

இன்று (21.12.2018) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன.இதன்படி, 92,95 ஒக்ரெய்ன் பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது. புதிய விலையில் 92 ஒக்ரெய்ன் 125 ரூபாவும், 95 ஒக்ரெய்ன் 149 ரூபாவாகவும் 
விற்கப்படும். டீசல் 5 ரூபாவும், சுப்பர் டீசல் 10 ரூபாவும் குழறக்கப்படுகிறது.கடந்த ஒக்டோபர் மாதம்
 10ஆம் திகதியன்று, எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்ட போது, ஒரு பெரல் கச்சா எண்ணெய், 85 டொலராகக் காணப்பட்டது. இந்த விலை தற்போது, 57 டொலராகக் குறைவடைந்துள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்துக்கு அமைய, எரிபொருட்களின் விலைகள், இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக, திறைசேரித் தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 1 டிசம்பர், 2018

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்கள் விலை குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கப்படும் என பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே 
தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய வளத்துறை அமைச்சில்.30.11.2018. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்
 குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும், குறித்த எரிபொருட்களின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, ஒக்டேன் 92 வகை பெட்ரோல் 135 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளதுடன், 95 வகை பெட்ரோல் 159 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன், ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 106 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 131 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மண்ணெண்ணெய் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 20 செப்டம்பர், 2018

ஓர் நற்செய்தி பாண் விலை மீண்டும் குறைவடையும்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்வரும் சில தினங்களுக்குள் பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.அண்மையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பில் நேற்று (19) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை குறித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முன்னர் இருந்த விலைக்கே குறைத்து தருவதவதற்கு அமைச்சர் சம்மதம் தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பாணின் விலையையும் மீண்டும் குறைக்குமாறு அமைச்சர் வேண்டுக்கொண்டதனை அடுத்,து அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அதற்கு சம்மதம்
 தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

வீடு புகுந்து யாழ் ஊரெழுப்பகுதியில் திருட்டு

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள்  நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையடித்து சென்றுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தம்பதியைத் தாக்கிவிட்டு, இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் கோப்பாய் ஊரெழுப்பகுதியில் இன்று காலை நடந்துள்ளது.
காயமடைந்த தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 16 ஆகஸ்ட், 2018

திடீரென பலத்த காற்றுடன் யாழில் வீசிய மினி சூறாவளி

யாழில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளது.
அத்துடன், வீடுகளின் கூரைகளும் காற்றினால்
 தூக்கி வீசப்பட்டுள்ளன.
யாழ். குடாநாட்டில் 14.08.2018. மாலை திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தது. வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதுடன் கன மழையும் பெய்துள்ளது.
நேற்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த மினி சூறாவளியால் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமாகியுள்ளன.
காரைநகர் கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரப்பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமாகியுள்ளதுடன் நான்கு வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு பகுதியளவில் சேதமாகியுள்ளன.
அத்துடன் பொன்னாலை குடியிருப்பு பகுதியிலுள்ள மூன்று வீடுகள் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமாகியுள்ளது.
இதேவேளை இப்பகுதியிலுள்ள மரங்களும் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
நிலாவரை.கொம் செய்திகள் >>>



தாயும் மகனும் வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் தாயும் 4 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.$இன்று காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தாய் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டின் முன்னால் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்
கப்பட்டுள்ளனர்
இது குறித்து முன் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில், எமது வீட்டிற்கு குறித்த நான்கு வயது சிறுவன் வந்திருந்தான். அதன் பின் குறித்த தாயும் வந்திருந்தார். இருவரும் நன்றாக வழமை போல் என்னுடன் கதைத்தனர். இதன்போது வீட்டில் இருந்த றொட்டியை சாப்பிடக் கொடுத்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்கள் வீட்டில் நிற்கும் போது
 நான் அயலில் இருந்த கடைக்கு சென்று விட்டேன். 10 நிமிடத்தில் திரும்பி வந்து விட்டேன். அப்போது அவர்களை காணவில்லை. சிறிது நேரத்தில் அவர்களது மற்றைய பிள்ளையான 9 வயது சிறுவன் அம்மா நிற்கிறாவா என தேடி வந்தான். இதன்போது அவனுடன் இணைந்து தேடிய போதே குறித்த தாயும் மகனும் கிணற்றில் சடலமாக இருந்ததை கண்டோம்
 எனத்தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த கிராம அலுவலர் மற்றும் பொலிசார ஆகியோர் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>