குப்பி விளக்கு தட்டுப்பட்டு எரியுண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில்
இன்று உயிரிழந்தார்.
உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த பச்சிளம் குழந்தையின் தாயான ஜதீசன் தமிழினி (வயது 22) என்பவரே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு வேலைக்கு சென்று
விட்டு வந்த கணவன் உறக்கத்தில் இருந்த அவரை அழைத்தார் எனவும் அந்தநேரம் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது விளக்குத் தட்டுப்பட்டு அவர் அணிந்திருந்த உடையில் தீப்பற்றியதாகவும்
தெரிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக