வணக்கம்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தடாகத்தில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி பலியானார்.

பெங்களூர் அருகே பாறை மீது நின்று ‘செல்பி‘ படம் எடுக்க ஆசைப்பட்டு  அருவியின் தடாகத்தில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி பலியானார். 
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை டவுனில் நேருநகரை சேர்ந்தவர் பிரதீப் (வயது 24). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. புதுமாப்பிள்ளையான பிரதீப் நேற்று  தனது நண்பர்கள் 5 பேருடன் மடிகேரி தாலுகா நாபொக்லு அருகே உள்ள சேலாவரா அருவிக்கு 
சுற்றுலா சென்றார்.
அப்போது பிரதீப் மட்டும் அருவி ஓரத்தில் இருந்த ஒரு பாறை மீது ஏறி அருவியையும், தன்னையும் சேர்ந்து ‘செல்பி‘ படம் எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் வழுக்கி, 
அருவியின் தடாகத்தில் விழுந்துள்ளார். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது 5 நண்பர்களும் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் அவர்களால், பிரதீப்பை காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கினார். அவரது உடலை தண்ணீர் அடித்துச் சென்றது.
அதனை தொடர்ந்து போலீசார் தீவிரமாக அவரது உடலை தேடினர் தீவிர தேடுதலுக்கு பிறகு பிரதீப்பின் உடல் மீட்கப்பட்டது. 
அங்கு வந்திருந்த பிரதீப்பின் மனைவி, அவரது பெற்றோர், அவரது உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக