வணக்கம்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

மாணவி தற்கொலை அனுமதி அட்டை வழங்கப்படாமையே காரணமாம்

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி மாணவி ஒருவர் நேற்று வியாழக்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.வேப்பங்குளம் பகுதியில்உள்ள குறித்த மாணவியின் வீட்டுக் கிணற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த. உ/த பரீட்சையில் தோற்ற இருந்த நிலையிலேயே கிணற்றுள் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
குறித்த மாணவி கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதபாட பெறுபேறு அற்ற நிலையில் உயர்தரம் கற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்கு தேற்றுவதற்கான அனுமதி 
அட்டை வந்த போதும் பாடசாலையில் அனுமதி அட்டை வழங்கப்படவில்லை எனவும் அதன் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக