வணக்கம்

புதன், 12 ஆகஸ்ட், 2015

துப்பாக்கி முனையில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வர்கள் கைது???

பாகிஸ்தானில் சுமார் 350 குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்த 14 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைதுசெய்து உள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கசூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு
 ஆளாகிய கொடூரச்சம்பவம் வெளியாகி உள்ளது. 21 பேர் அடங்கிய கும்பலானது இங்குள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை சீரழித்து தங்களுக்கு ஏற்றவாறு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து உள்ளனர். இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் இணைய தளங்களில் வெளியாகிஉள்ளது.
கும்பலானது எடுத்த ஆபாச படம் அடங்கிய சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள், சிறுவர்களை வைத்து கொடூரக்கும்பல் படம் எடுத்து உள்ளது. சர்வதேச அளவில் பாகிஸ்தானில் இருந்துதான் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் 
ஆபாச படங்கள் அதிக அளவில் வெளியாகுகிறது. பாகிஸ்தானில் சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள்தான் இந்த கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். சிறுவர் மற்றும் சிறுமிகளை துப்பாக்கி முனையில் இத்த கொடூரச்செயலை கொடூர கும்பலானது அரங்கேற்றிஉள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்திவரும் பாகிஸ்தான் போலீசார் சுமார் 14 பேரை கைது செய்து உள்ளனர் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.
கிராமப்புறங்களை சேர்ந்த சிறார்களுடன் முதலில் நல்ல முறையில் பழகும் இந்த கும்பலானது, அவர்களுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை வைத்து தங்கள் விருப்பப்படி வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவை இணைய தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இதற்கிடையே இதுபோன்ற வீடியோக்கள் 
மேற்கத்திய நாடுகளுக்கும் அனுப்பட்டது. வீடியோ எடுத்து, குழந்தைகளின் பெற்றோர்களையும் அதனை வைத்து கொடூரக்கும்பல் மிரட்டி உள்ளது. ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரை மிரட்டியும் இந்த கும்பல் பணம் பறித்துஉள்ளது.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது
 விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது என்றும் இதுதொடர்பாக மேலும் பலர் விரைவில் கைது 
செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. வீடுகளில் வேலைசெய்யும் சிறார்களுக்கும் அங்கு இதேநிலைதான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுபோன்ற கும்பல்கள் பாகிஸ்தானில் இவ்வளவு நாட்கள் எப்படி செயல்பட்டது என்பது தொடர்பாக கேள்வி 
எழுந்து உள்ளது.
பாதிகப்பட்ட சிறுமி பேசுகையில், அவர்கள் என்னை அழித்துவிட்டனர். என்னுடைய குடும்பத்தையும் அழித்துவிட்டனர். என்னையும் அவர்கள் கொலை செய்துவிட்டனர் என்று கண்ணீருடன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக மாவட்ட அதிகாரி பேசுகையில், 
“கொடூரக் 
கும்பலில் சுமார் 15 முதல், 21 பேர் வரையில் இருக்கலாம். கும்பலில் உள்ளவர்கள் 15 வயதுக்கு சிறிய சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இந்த கொடுரமானது நிக்ழந்துவருகிறது,” என்று கூறி உள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக