வணக்கம்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

கடலுக்குள் சென்ற மீனவர்களில் இருவர் மரணம் ஒருவர்உயிர்தப்பியுள்ளார்?

யாழ் பருத்தித்துறை முனைப் பகுதியில் அதிகாலை கடலுக்குள் சென்ற மீனவர்கள் மூவரை பாரிய அலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது. இச் சம்பவத்தில் இரு மீனவர்கள் பலியாகியுள்ளனர். ஒருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். கடல் அலை இழுத்துச் சென்றவர்களை 
தேடும்பணியில் கடற்படையினரின் சுழியோடிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜெனிபேட், ஜோர்ஜ் ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவர். கடற்படையினரின் தேடுதலில் ஜோர்ஜ் என்னும் ஒரு மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய மீனவரின் சடலத்தைத் தேடும் பணி தொடர்கின்றது. மீனவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக
 கடற்படையினர்
 அப்பகுதி மீனவர்களை கடற்பாதுகாப்பு கவசம் (ஜக்கட்) அணிந்து செல்லுமாறு பல தடவைகள் அறிவுறுத்தியுள்ளனர். இருந்தும் அப்பகுதி மீனவர்கள் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை எனத்
 தெரிகின்றது.
 மீனவர்களைப் பாதுகாப்பதில் கடற்படையினருக்கு இருக்கும் அக்கறை அப்பகுதிகளில் தொழில்படும் மீனவசங்கங்களுக்கு இருக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடற்படையினரின் மீட்பு நடவடிக்கைகளைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை 
மெச்சியுள்ளனர்-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

யாழ் புங்குடுதீவு- அனலைதீவுக்கு இடையில் பயணித்த படகு மூழ்கியது!

புங்குடுதீவு- அனலைதீவு இடையே சேவையில் ஈடுபட்டுருந்த நோயாளர் காவு படகு கடலில் வீசீய காற்றின் காரணமாக கடலில் மூழ்கியது.
வடமாகாண சுகாதார அமைச்சினால் யாழ்.புங்குடுதீவு- அனலைதீவு இடையில் நோயாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் படகு இன்றைய தினம் காலை கடல் கொந்தளிப்பினால் கடலில் மூழ்கியுள்ளது.
யாழ். மற்றும் அனலைதீவு இடையே இடம்பெறும் போக்குவரத்தினால் நோயாளர்கள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து குறித்த படகு அண்மையில் சுகாதார அமைச்சினால் வட மாகாணசபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்து.
இருப்பினும் குறித்த படகு விபத்திற்கு உள்ளானதால் இத்தீவிற்கு நோயாளர் படகு சேவை பாதிப்படைந்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 25 டிசம்பர், 2015

சட்டவிரோத சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது!!!

யாழ்ப்பாணம்  கொழும்புத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாக சாராய போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த புலிக்குட்டி என அழைக்கப்படும் 44 வயதுடைய தர்மலிங்கம் தர்மகுலராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன்
 தெரிவித்துள்ளார்.
நபரொருவர் தனது உடமையில் பத்துப் போத்தல் சாராயத்தையே வைத்திருக்கக்கூடிய நிலையில், குறித்த நபர் தமது உடமையில் 55 சாராய போத்தல்களை வைத்திருந்தமையாலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்றும், நாளையும் 
மதுபானசாலைகள் திறக்கப்படாமையால் இப்போத்தல்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காகவே வைத்திருந்ததாக விசாரணையின் போது தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த நபர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தியிருந்ததுடன், 6 மாத கால கடூழிய சிறைத் 
தண்டனையும் பெற்றிருந்தார். அத்துடன், மேலும் ஒரு குற்றத்துக்காக நீதிமன்றால் 300 மணித்தியாலங்கள் நற்பணி செய்வதற்கு பணிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



செவ்வாய், 22 டிசம்பர், 2015

செஞ்சிலுவைச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு

யாழ்.பிரதான வீதியிலுள்ள மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், லங்கா பெற்றோலிய நிறுவனத்தின் முகாமைப்பணிப்பாளர் சியாம் போரா ஆகியோர் கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.
மேற்படி இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் நிர்மாணிப்பதற்கான அனுமதி முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. 
எரிபொருள் அமையப் பெறுவதால் சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளின் நீர் மாசுபடும் வீதியின் வளைவில் எரிபொருள் நிலையம் அமையப் பெறுவதால் எரிபொருள் நிலையத்துக்குள் உள்நுழையும் மற்றும் 
வெளியேறும்
 வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படும் ஆகிய விடயங்கள் அப்பகுதியிலுள்ள பொதுமக்களால் மாநகர சபையின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, கொடுக்கப்பட்ட அனுமதியை முதல்வர் இரத்துச் செய்திருந்தார்.
இரத்துச் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எரிபொருள் நிலையத்தை அமைத்த முன்னாள் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கொடுத்த அனுமதியை 
இரத்துச் செய்ய முடியாது, அனுமதி கொடுக்க முன்னரே பரிசீலனை செய்திருக்க வேண்டும் மற்றும் அனுமதியை இரத்துச் செய்வது தொடர்பில் சரியான காரணங்களை மாநகர சபை நீதிமன்றத்தில் 
சமர்ப்பிக்க தவறியுள்ளது எனத் தெரிவித்த நீதிமன்றம், அனுமதி செல்லுபடியாகும் என அறிவித்தது. 
மேலும் இதனையடுத்து, குறித்த இடத்தில் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 19 டிசம்பர், 2015

.பொலிஸார் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

யாழ்.குடாநாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டமாக, யாழ்.மாவட்டத்தில் சகல பகுதகளிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் துண்டு பிரசுரங்களை பொலிஸார் ஒட்டியுள்ளனர்.
குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில் பொலிஸார் இந்த நடவடிக்கையினை 
மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் ஹெரோயின் மற்றும் போதைக்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த உதவுமாறு பொலிஸாரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி இலக்கமும்
 போடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 16 டிசம்பர், 2015

வெங்கனாந்தி பாம்பு 22 கிலோ எடையுடன் மக்கள் அச்சத்தில்

யாழ் சாவகச்சேரி,  தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கனாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர்.
இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
22கிலோ 300 கிராம் எடை கொண்ட இந்தப் பாம்பு 8 அடி நீளமானதாகப் காணப்படுகிறது.
காடுகளில் வசிக்கும் வென்கனாந்தி இன பாம்புகள் விலங்குகளை இரையாக உட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,  இதனால் அந்த பிரதேச மக்கள் பீதியோடு காணப்படுகின்றனர்

சனி, 12 டிசம்பர், 2015

மாணவர்கள் யாழில் சீருடைகளைப் பெற்றுக் கொள்ளும் வர்த்தக நிலையங்கள்

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
அபி றேடர்ஸ், இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம்
.சிறி கணேஷ் புடவையகம், இல-20 ,நவீன சந்தை, யாழ்ப்பாணம்
ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ், இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம்.
சென்னை பசன் வேல்ட் ,இல-63 ,பெரிய கடை ,யாழ்ப்பாணம்.
கணேசன் ஸ்ரோர்ஸ், இல-41,பெரிய கடை,
யாழ்ப்பாணம்.
குமாரசாமி ரெக்ஸ் ,இல-44|42, பெரிய கடை யாழ்ப்பாணம்.
சிற்றி ரெக்ஸ், இல-256, பருத்தித் துறை வீதி, யாழ்ப்பாணம் .
ஏகாம்பரம் ரெக்ஸ்,இல-747 ,மின்சார நிலைய வீதி,யாழ்ப்பாணம்.
கீர்த்திகா ரெக்ஸ் உரும்பிராய்ச் சந்தி ,உரும்பிராய்.
வலி.கிழக்குப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
பருத்தித்துறை வீதி, ஆவரங்கால்,புத்தூர் .
கணேசன் ஸ்ரோர்ஸ் ,இல-20,கே.கே.எஸ்.வீதி,யாழ்ப்பாணம்.
டொப்பாஸ் ,இல-72,பெரிய கடை வீதி இயாழ்ப்பாணம்
டொப்பாஸ் மோல் ,இல-195,பெரிய கடை வீதி,யாழ்ப்பாணம்
வாணி ரெக்ஸ் ,இல-81,பெரிய கடை வீதி ,யாழ்ப்பாணம்.
சிங்கம்ஸ் ரெக்ஸ் ரைல்ஸ் ,இல-172,காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாணம்
ஆர்.வி.ஆடையகம், இல-104,பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம்
மகா சில்க்ஸ் ,இல-40,நவீன சந்தை,யாழ்ப்பாணம்.
ரி.சி.ரி.பல்பொருள் வாணிபம் ,இல-527,நாவலர் வீதி,நல்லூர்.
பி.வி.எஸ் தையல் புடவையகம், புத்தூர்
லலிதா புடவை மாளிகை, இல -5|6 ,நவீன சந்தை யாழ்ப்பாணம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 10 டிசம்பர், 2015

மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவில்

இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சோரங்க் பகுதியில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 டிசம்பர், 2015

இரண்டு பிள்ளைகளின் தந்தை பணக்கார பெண்ணை ஏமாற்றி திருமணம் புரிந்தர் ! ! !

ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி, தாம் மணம் முடிக்கவில்லை என்று கூறி 24வயதான பணக்கார பெண் ஒருவரை திருமணம் முடித்து
 தேன்நிலவில்
 இருக்கும் போது உண்மையான மனைவியால் பிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே தாம் மணம் புரிந்த மனைவி வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக உள்ள 24 வயது பெண்ணை, ஏமாற்றி தனியார் நிறுவன அதிகாரி திருமணம் செய்துள்ளார்.
இதன் நிமித்தம் தமது தாயாரைப் போன்று நடிப்பதற்காக பெண் ஒருவருக்கு பணம் வழங்கப்பட்டே திருமணம் நிச்சயிக்கப்பட்டிந்தது.
அதேவேளை, திருமண நிகழ்வுக்கு ஏழு இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதுமணத் தம்பதிகள் தேன்நிலவில் இருக்கும் போது உண்மையான மனைவியும் அவர் பணிபுரியும் வைத்தியசாலையின் பணியாளர்களும் ஹொட்டேலுக்குள் புகுந்து இருவரையும் பிடித்து மீரிஹன பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த ஆண், திருமணமானவர் என்று தமக்கு தெரியாது என 24 வயதான பணக்கார பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் 
அளித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

வானிலையின் சீரற்றத்தல் பராக்கிரம சமுத்திரத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு

பொலன்னறுவை பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் 
அறிவித்துள்ளது.
அத்துடன், கவுடுள்ள வாவியின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.பீ கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், நிமிடத்திற்கு 1200 கனஅடி நீர் பராக்கிரம சமுத்திரத்தின் ஒரு வான் கதவின் ஊடாக வெளியேறுவதாகவும், கவுடுள்ள வாவியில் இருந்து நிமிடத்திற்கு 1680 கனஅடி நீர் வெளியேறுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி, மகாவலி கங்கையின் ஊடாக அதிகமாக நீ்ர் பெருக்கெடுத்தோடுவதால் மட்டகளப்பு - பொலன்னறுவை பிரதான வீதியானது நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் அந்த பாதையுடனான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாவதி பகுதிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளதால் அந்த பாதையுடனான போக்குவரத்திற்கு தடை
 ஏற்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்றைய வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிகளவான மழை பெய்யும் என எதிர்வு 
கூறப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 4 டிசம்பர், 2015

ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழதுள்ளார்!

 கிளிநொச்சி, வட்டக்கச்சி, தச்சன் வீதியிலுள்ள மரப்பட்டறை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (04) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். மரம் 
அரியும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக அவரை 
கிளிநொச்சி 
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தமை வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைக்காக 
கிளிநொச்சி
 மாவட்ட பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.  மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 2 டிசம்பர், 2015

மரக்கறிகளின் விலைகள் யாழ் சந்தைகளில் அதிகரிப்பு!

யாழ் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.அண்மைய நாட்களில் அதிகளவான மழை பெய்தமையால் மரக்கறிகளின் உற்பத்தி 
குறைவடைந்தது. 
 இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,  1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும், கீரையை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.   
கத்தரிக்காய்
 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், பயிற்றங்காய் 1 கிலோகிராம் 240 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 160 ரூபாய்க்கும், வெண்டி 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், கரட் 1 கிலோகிராம் 350 ரூபாய்க்கும், போஞ்சி 1 கிலோகிராம் 260 ரூபாய்க்கும், புடலங்காய் 1 கிலோகிராம் 150 ரூபாய்க்கும், கருணைக்கிழங்கு 1 கிலேகிராம் 120 ரூபாய்க்கும், லீட்ஸ் 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், 
பூசணிக்காய்
1 கிலோகிராம் 50 ரூபாய்க்கும், வாழைக்காய் 1 கிலோகிராம் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.  சின்ன வெங்காய் 1 கிலோகிராம் 140 ரூபாய்க்கும், பொன்னாங்காணி 1 பிடி 30 ரூபாய்க்கும், 
வல்லாரை 
1 பிடி 20 ரூபாய்க்கும், தேசிக்காய் 1 கிலோகிராம் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மழையால் தொழில்களை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள அன்றாடத் தொழில் செய்து பிழைக்கும்  மக்கள் இந்த விலை அதிகரிப்புகளினால் மேலும் 
பாதிக்கப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





திங்கள், 30 நவம்பர், 2015

யாழ் பொலிஸாரால் கஞ்சாவுடன் இருவர் கைது!!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த தனியார் பஸ் வண்டியிலிருந்து 7.5 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு செல்லத் தயாராக இருந்த பஸ் நிறுத்தப்பட்டு பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கொங்ரீட் சில்பர் கட்டைகளில் விரிசல் வடக்கு ரயில் பாதையில்

வடக்கு தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொங்ரீட் சில்பர் கட்டைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மாத்தறை – பெலியத்த தொடர்ந்து பாதையின் நிர்மாணப் பணிகளில் தொடர்ந்து திணைக்களத்தினால் சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்கு பிழைகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் 
கூறப்பட்டுள்ளது.
இந்தியா – இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையில் வடமாகாண தொடர்ந்து பாதை நிர்மாணப் பணிகள் கடந்த 2011ம் ஆண்டு 
ஆரம்பிக்கப்பட்டது.
800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இந்த வேலைத்திடம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் மொத்த நீளம் 146 கிலோமீற்றர்களாகும்.
அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் நிர்மாணிக்கப்படும் தொடர்ந்து பாதைகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கான கடந்த மே மாதம் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் அறிக்கையின்படி, வடக்கு தொடர்ந்து பாதையில் பொருத்தப்பட்டுள்ள சில்பர் கட்டைகள் தற்போதையே வெடித்தும், விரிசல் அடைந்தும் காணப்படுவதாக 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஒல்லாந்தர் கால 200 வருடம் பழைமையான கோபுரம் சரிந்தது

கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஒல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் 
(28,11,15) அதிகாலை 2 மணியளவில் உடைந்து 
வீழ்ந்துள்ளது.
இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு
 செய்யப்பட்டுள்ளது.
60 அடி உயரமான இந்த கோபுரம் புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,  கோபுரம் அமைந்துள்ள பேஸ்லைன் வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி புனரமைப்பு நடவடிக்கையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
கோபுரம் உடைந்து வீழ்ந்தமையால் அருகிலிருந்த தாய், சேய் மருத்துவ நிலைய கட்டடத்தின் முன் பகுதிக்கு சேதம்
 ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக  தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‚இந்த கோபுரம்;  புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்லைன் வீதியில் 
வீதி புனரமைப்பு 
வேலைகள் நடைபெறுவது தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. கோபுரத்தை சுற்றி நிலம் தோண்டப்பட்டுள்ளது‘ என 
அவர் குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 28 நவம்பர், 2015

ஸ்ரீலங்கா விமானம் மீது பறவை மோதியது!!!

கொழும்பிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸக்கு சொந்தமான UL131 விமானம் தரையிறங்கும் போது பறவை ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த விமானம் 7 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தரித்து நின்றதாக தி ஹிந்து செய்தி 
வெளியிட்டுள்ளது.
குறித்த விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் இடதுபக்க இயந்திர பகுதி மீது பறவை மோதியுள்ளதாகவும் எனினும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணிகள் விமானம் நேற்று வியாழக்கிழமை காலை 9.40 அளவில் ஸ்ரீலங்கா நோக்கி பயணிக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் காரணமாக தாமதாகவே புறப்பட்டதாகவும்
 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பிலிருந்து திருச்சி நோக்கி நேற்று மதியம் சென்ற ஒரு தொகுதி பொறியியலாளர்கள் குழு குறித்த விமானத்தித் திருத்தப்பணிகளை மேற்கொண்டதை அடுத்து, குறித்த விமானம் நேற்று மாலை 5.20 அளவில் மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 26 நவம்பர், 2015

மைத்திரி சிறிசேன பியர் மீது கடுப்பில்.

வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவை
 பணித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 5 % க்கும் குறைந்த அல்கஹோல் மட்டம் கொண்ட மதுபானங்களின் இறக்குமதி வரியை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அல்கஹோல் மட்டம் குறைந்த ஒரு லீட்டர் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரி 190 ரூபாவிலிருந்து 160 ரூபாவாக குறைக்கப்பட்டது.
இதன்மூலம் மதுபான வகைகள் உக்குவிக்கப்படுவதால் வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி நிதி அமைச்சரை 
பணித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 25 நவம்பர், 2015

நபரொருவரால் 18 வயதான பாடசாலை மாணவிகடத்தல்!!

அனுராதபுரம் நகரத்தில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் , 35 வயதான திருமணமான நபரால் இன்று காலை 
கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
அவருடைய நண்பிகளோடு மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் கடத்தப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த பெண்ணை தாக்கி பலவந்தமாக முச்சக்கரவண்டியில் அழைத்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் போது குறித்த மாணவியின் நண்பிகளால் முச்சக்கரவண்டியில் இலக்கம் குறிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் முச்சக்கரவண்டியை பொலிஸார்
 கண்டுபிடித்ததுடன் , 
 அதன் சாரதியிடம் மேற்கொண்ட விசாரனையின் போது முச்சக்கரவண்டியில் இருந்த அந்த மாணவியை வெஸ்ஸகிரிய பிரதேசத்தில் வைத்து இருசக்கரவாகனத்தில் ஏற்றி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவியை கடத்திய நபர் அனுராதபுரம் இரண்டாம் கட்டை பகுதியை சேர்ந்தவராவார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2015

கஞ்சாவுடன் பஸ் நிலையத்தில் இரு இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு நகரில் இன்று காலை கஞ்சா கலந்து போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்த இருவரை சோதனையிட்டபோதே கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
ஓட்டமாவடியை சேர்ந்த குறித்த நபர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கலநத போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் 18 மற்றும் 22 வயதினையுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணையை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>

வெள்ளி, 20 நவம்பர், 2015

தொற்று நோய்களின் தாக்கம் சாவகச்சேரியில் அதிகரிப்பு!!!


யாழ்.சாவகச்சேரி பகுதியில் டெங்கு காய்ச்சல், விஷக் கடி, வயிற்றோட்டம் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொற்று நோய்கள் பரவலை தடுப்பதற்கான விசேட கரும்பீடம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வடமாகாணத்தில் கனமழை பெய்த நிலையில் மழையினால் யாழ்.மாவட்டத்தில் அதிகளவான பாதிப்பை 
சந்தித்திருந்தது.
இந்நிலையில் மழை வெள்ளம் தணிந்துள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதாக சாவகச்சேரி சுகாதார பகுதி அறிவித்துள்ளதுடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொற்றுநோய்களை தடுப்பதற்கான விசேட கரும்பீடம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றுநோய்கள் தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளதுடன், விஷகடி தொடர்பிலும் மக்களை அவதானமாக இருக்குமாறும் மக்கள்
 கேட்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 19 நவம்பர், 2015

ரசாயன ஆயுதங்களை கொண்டு பிரான்ஸில் தாக்குதல் நடத்தப்படலாம்?

பிரான்ஸில் தீவிரவாதிகள் "ரசாயன அல்லது உயிரியல்(வைரஸ்) ஆயுதங்களை" பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டு பிரதமர் மானுவெல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்து 
உள்ளார்.
பாதுகாப்பு நிறைந்த பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 129 பேர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தாக்குதலை அடுத்து தீவிரவாதிகள் வேட்டையில் பிரான்ஸ்
 போலீஸ் படை 
இறங்கிஉள்ளது. நேற்று போலீஸ் நடத்திய ரெய்டின் போது பெண் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு 
உள்ளது.
இந்நிலையில் பிரான்ஸில் அவசரநிலையை நீட்டிப்பது தொடர்பாக பிரான்ஸ் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மானுவெல் வால்ஸ் பேசுகையில், தீவிரவாதிகள் "ரசாயன அல்லது உயிரியல்(வைரஸ்) ஆயுதங்களை" பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுத்தார். “எதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது.
 ரசாயன அல்லது
 உயிரியல்(வைரஸ்) ஆயுதங்களாலும் ஆபத்து உள்ளது. இதற்கிடையே விமான பயணம் செய்பவர்கள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் தகவல்களை பறிமாறிக் கொள்ளவேண்டும் என்றும் அழைப்பு விடுத்து 
உள்ளார்.
தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்க, நமக்குள் ஒருங்கிணைப்பு என்பது தேவையானது என்று மானுவேல் வால்ஸ் கூறிஉள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 18 நவம்பர், 2015

கட்டுமுறிவு ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு உதவி

வாகரைப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த கட்டுமுறிவு, ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் உதவிகளை செவ்வாய்கிழமை வழங்கி வைத்தார்.
அண்மையில் தொடர்ந்து மழைய பெய்ததால் கட்டுமுறிவுகுளம் நிரம்பி நீர் வடிந்ததால் கட்டுமுறிவு, ஆண்டான்குளம் நடைபாதை தடைப்பட்டது. அத்தோடு கட்டுமுறிவுக்கு கதிரவெளியில் இருந்து செல்லும் வீதிகளும் இடை இடையே நீரில் மூழ்கியதால் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
அத்தோடு சில வீடுகளும் மழை நீரில் பாதிப்புக்குள்ளானது. இதனால் இப்பகுதி மக்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். கட்டுமுறிவில் 148 குடும்பமும், ஆண்டாங்குளத்தில் 75 குடும்பமும் பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு அவசர அவசரமாக வாகரைப் பிரதேச செயலாளர் மூலம் இரு நாள் உணவு உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அப்பகுதியையும், பாதிக்கப்பட்ட இரு கிராம மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு தமது சொந்த நிதியில் அவசிய தேவைகளின் ஒன்றான பாய் மற்றும் குழந்தைகளுக்கான நுளம்பு வலை போன்ற உதவிகளை இரு கிராமத்திலுமுள்ள 223 குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.
இப்பகுதி மக்களின் தொழில் நிலைகள் முற்றாக பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு உணவு தேவையை நிறைவேற்ற உணவுப் பொருட்கள் உதவிகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் வேண்டியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் இம்மக்களுக்கு உதவும் 
மனப்பாங்கு கொண்ட
 பெருந்தகைகள் மற்றும் தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள், புலம்பெயர் உறவுகளை இவர்களின் உணவு தேவையை நிறைவேற்றி உதவுமாறு வேண்டி கொள்கின்றார். அதேவேளை தாமும் இதற்கு ஏற்ற ஆதரவுகளை புரிவதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரைப் பிரதேசமான மிகவும் வறுமைக் கோட்டில் அமைந்த மக்களை கொண்ட பகுதியாகும். கடந்த யுத்த சூழலும், சுனாமி அனர்த்தத்தாலும் இப்பகுதி மிகவும் 
பாதிக்கப்பட்டது.
இவ்வாகரைப் பிரதேசத்தின் கட்டுமுறிவு, ஆண்டான்குளம் ஆகிய இரு கிராமங்களும் பொலநறுவை மாவட்டத்தை எல்லையாக கொண்டதான நடுக் காட்டின் மத்தியில் அமைந்த கிராமங்களாகும். இக்கிராமங்களுக்கு செல்வோர் கதிரவெளி சந்தியில் இருந்து 19 கிலோ மீற்றர் காடு வழியாக செல்ல வேண்டும்.
கடந்த பல காலமாக போக்குவரத்து வசதி எதுவும் இன்றி கஷ்ரப்பட்ட இம்மக்களுக்கு அண்மையிலேயே ஒரு நாளைக்கு ஒரு தடவை பஸ் ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதைகள் உடைக்கப்பட்டதால் அல்லது பழுதடைந்ததால் வாகனம் செல்ல முடியாது. அரச
 அலுவலகம் என்றால் 
பாடசாலை மாத்திரமே இங்கு உண்டு. ஏனைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற 19 கிலோ மீற்றர் அவர்கள் நடையாகவோ அல்லது துவிச்சக்கர வண்டி அல்லது மோட்டார் வாகனம் போன்றவை மூலமும் கதிரவெளிக்கு வரவேண்டும்.
இக்கிராம மக்கள் தேன் எடுத்தல், மிருகங்களை பிடித்தல், காட்டு பழங்களை பெற்று 19 கிலோ மீற்றர் கதிரவெளிக்கு கொண்டு வந்து விற்றல், கமச் செய்கை காலங்களில் சிறு கமம் மற்றும் அங்குள்ள குளங்களில் மீன் பிடித்தல் உட்பட்ட தொழிலை புரிகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 17 நவம்பர், 2015

முதியவர்ஒருவர் ஆபாச இருவெட்டுக்களுடன் கைது

ஆபாச காட்சிகள் அடங்கிய இருவெட்டுக்கள் சிலவற்றை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 69 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் இன்று கைது 
செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 16 நவம்பர், 2015

கொலைக்களமாக மாறும் யாழ் போதனா வைத்தியசாலை

யாழ் போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்கள், தாதியர்களது அசமந்தப் போக்கினால் பல உயிர்கள் காவு கொள்ளும் நிலை அண்மையில் ஏற்பட்டுள்ளது.
மாரடைப்பால் சென்ற நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து இரண்டாம் விடுதியில் அனுமதிக்கபட்டு 12 மணித்தியாலங்கள் வரை கதிரையிலேயே அமர்ந்திருந்திருக்கிறார். அவருக்கு கட்டில் கொடுக்கபடவுமில்லை. படுப்பதற்கு பாய் வசதிகள் கூட செய்துகொடுக்கப்படவில்லை. அங்கு படுப்பதற்கு 
இடமுமில்லை.
அங்கே பணி புரிகின்ற தாதியர்கள் நோயாளிகள் மீது எரிந்து விழுவதும் மரியாதை குறைவாக கதைப்பதும் நோய்க்காரணமாக பயத்தோடு இருக்கின்ற நோயாளிக்கு உளவியல் ரீதியாக பாரிய தாகத்தை 
ஏற்படுத்துகிறது.
யாழ் போதனா வைத்தியசாலையின் இரண்டாம் இலக்க விடுதியானது ஒரு தனியார் வைத்தியருக்கு உரியது. இவர் தனியார் மருத்துவமனைகளிலும் பணி புரிவதனால் அங்கு வரும் நோயாளிகளையே போதனா வைத்தியசாலையிலும் கவனிக்கிறார் என்றும் மற்றைய நோயாளிகளை கவனிப்பதில்லை என்றும் நோயாளர் மத்தியில் பெரும் குற்றச்சாட்டு இருக்கின்றது.
இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த விடுதியில் பணி புரியும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் வேண்டா வெறுப்பாக தமது கடமைகளை செய்வதும், முகம் பார்த்து கடமைகளை செய்வதும், நோயாளர்கள் மனம் நோக நடந்து கொள்வதும் இவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மாறாக தெரியாது விட்டால் அவர் ஒரு விடுதியின் கட்டுப்பட்டாளராக இருக்க தகுதியில்லை.
வயதானவர்கள் சென்றால் ஒருவிதமான பார்வையும் மற்றவர்கள் சென்றால் வேறோருவிதமான பார்வையும் இங்கே செலுத்தப்படுகிறது என நோயாளர்களும் பராமரிப்பளர்களும் 
தெரிவிக்கின்றனர்.
இந்த விடுதியின் வைத்தியர்கள் தாதியர்களின் அசமந்தப் போக்கினால் 01.11.2011 அன்று கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையை சேர்ந்த லீனஸ் பெர்ணடேற்றம்மா அவர்கள் மரணத்தை தழுவியமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 நவம்பர், 2015

வட-கிழக்கில் இன்று ஹர்த்தால்முற்றாக முடங்கியது யாழ்ப்பாணம்!

வடக்கு கிழக்கில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் போராட்டத்தினால் யாழ். மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் 
பயங்கரவாத
 தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைய யாழ். மாவட்டத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள், பல்கலைக்கழம் என்பன மூடப்பட்டுள்ளதுடன், யாழ் நகரம் உட்பட யாழ் மாவட்டமே வெறிச்சோடி காணப்படுகின்றது. யாழ் நகரில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதால் மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹர்தாலை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர், விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் மக்களின் அத்தியாவசியமான வைத்தியசாலைச் சேவைகள்
 வழமைப்போல் இயங்குவதுடன், தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் வெளிமாட்டங்களில் இருந்து யாழ். மாவட்டத்திற்கான போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அழைப்பு விடுத்துள்ளன. அத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பூரண ஆதரவை 
வழங்குவதாக
 அறிவித்துள்ளன. வடக்கு மாகாண சபை, சர்வமத தலைவர்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள், கல்விச் சமுகம், பல்கலைக்கழக சமுகம், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், இந்து, கத்தோலிக்க அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை இந்த ஹர்த்தாலுக்கு வழங்குவதாக 
அறிவித்துள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>