வணக்கம்

வியாழன், 16 பிப்ரவரி, 2017

சர்வதேச தரத்திற்கு யாழிலுள்ள உணவகங்களை மாற்ற முயற்சி ?

யாழில் உள்ள உணவு தொழிற்சாலைகளை உலகத்தரம்  வாய்ந்தாக மாற்றுவதற்காக நாம் முயற்சிக்கின்றோம். எனவே எமது  அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் தமது செயற்பாடுகளை தொடங்குவார்கள் என வடமாகாண சுகாதார  உத்தியோகத்தர் கேசவன் தெரிவித்தார்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் 
தெரிவிக்கையில் 
ஜேர்மனின் பி.ரி.பி அமைப்பு  மற்றும்  இலங்கை  அரசாங்கத்தின் ஏற்பாட்டில்  உணவு மேம்பாட்டு தொழிற்பாட்டு திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் உணவு உற்பத்தி  உணவைப் பேணுதல்  உணவு விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளில் ஆரோக்கியமான  இரசாயன கலப்பற்ற கிருமி தொற்று அற்ற   உணவை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையே இத் திட்டதின் மூலம் 
பயிற்றுவிக்கப்படவுள்ளது.
இதன் முதற் கட்டமாக  உணவு தொழிற்சாலைகள், விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிச்சாலைகளில் தற்போதய நிலை மையை  ஆராய்ந்து  அறிக்கை  ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். 
இவ்  அறிக்கையில் உணவு தொழிற்சாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றி  ஆராய்ந்திருக்கின்றோம். இவ் அறிக்கையின் நோக்கம் உணவகங்கள் மீது குற்றம் சாட்டுவதல்ல. உணவகங்களை தற்போது  இருக்கின்ற நிலையைவிட மேலும் தரமுயர்த்துவதே
 இதன்  நோக்கம். 
இங்குள்ள உணவு தொழிற்சாலைகளை உலகத்தரம்  வாய்ந்தாக மாற்றுவதற்காக நாம் முயற்சிக்கின்றோம். எனவே  எமது அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் தமது செயற்பாடுகளை தொடங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வீட்டு வளவுக்குள்வேகக் கட்டுப்பாட்டை இழந்து புகுந்த பாரவூர்தி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஒன்று வீட்டு வளவுக்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளானதில் சாரதி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு, இருதயபுர சந்தியில் உள்ள பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீட்டின் சுற்று மதிலை உடைத்துக்கொண்டு குறித்த பாரவூர்தி வீட்டு வளவுக்குள் புகுந்துள்ளது
இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் அருகில் இருந்த மின்கம்பம் ஒன்று சேதமடைந்துள்ளது
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 2 பிப்ரவரி, 2017

அதிக வருமானம் வெளிநாட்டவர்களால் பெற்ற இலங்கை!

இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் கடந்த வருடம் அதிகளவான வெளிநாட்டு வருமானம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல 
தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 7,241.5 மில்லியன் அமெரிக்க டொலராகும். இலங்கை பெறுமதியில் அது 1,054.5 பில்லியன் ரூபாவாகும். இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.7 வீத
 அதிகரிப்பாகும்.
2015ஆம் ஆண்டு பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 6,980.3 மில்லியன் அமெரிக்க டொலராகும், அது இலங்கையின் பெறுமதியில் 949 பில்லியன் ரூபாவாகும்.
அதற்கமைய 2015 ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் 261 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>