வணக்கம்

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

செல்வச் சந்நிதி முருகனின் தீர்த்தோற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தீர்த்ததிருவிழா  இன்று சனிக்கிழமை(29.8.2015)அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
தீர்த்ததிருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பங்கேற்றனர்.தீர்த்ததிருவிழாவில் தொடர்ந்து பஜனை நிகழ்வுகளும் நடைபெற்றது.
யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் மினிபஸ் சேவைகள் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபட்டன .
இம்முறை தீர்த்ததிருவிழாவில் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்த அதிக எண்ணிக்கையானவர்களும் கலந்து கொண்டார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக