வணக்கம்

செவ்வாய், 15 நவம்பர், 2022

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடத்தின் ஐயப்ப மண்டல விரதம் 15.11.2022

ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப மண்டல விரதம் எதிர்வரும் 15.11.2022 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி தொடக்கம் கணபதி ஹோம வழிபாடுடன் ஆரம்பமாகும் 16.11.2022 ஸ்ரீ ஹரிஹர புத்திரனுக்கு விசேட அபிஷேகங்கள் நடைபெற்று காலை 11 மணியளவில் புனித மாலை அ

ணியும் வைபவம் நடைபெறும் ஐயப்பன் அடியார்கள் அனைவரையும் ஆலயம் வருகை தந்து ஐயன் புனிதமான மாலை அணிந்து தொடர்ந்து மண்டல விரதத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடம் சுவிஸ் 
 வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>








சனி, 24 ஜூலை, 2021

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 24.07.21

 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா
24-07-2021..இன்று பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.
அம்பாளின்  தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்
அத்துடன், கற்பூரச்சட்டி  , பால்குடம், எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது,
ஐரோப்பாவில் நான்கா வது  தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
.ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்பாள் துணை 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>








ஞாயிறு, 19 ஜூலை, 2020

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 18.07.20

 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா18-07-2020..இன்று 8-45.மணிக்கு  பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.
அம்பாளின்  தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்
அத்துடன், கற்பூரச்சட்டி  , பால்குடம், எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது,
ஐரோப்பாவில் மூன்றாவது  தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
.ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்பாள் துணை 

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>




வெள்ளி, 5 ஜூன், 2020

மணியண்ணருக்கு ஒரு பேரன் கிடைத்துள்ளார்.


ஓம் சக்தி!!04/6 வியாழக்கிழமை (குருநாளில்)
மணியண்ணருக்கு  ஒரு பேரன் கிடைத்துள்ளார்.ஓம் சக்தி!!

மகிழ்ச்சி   வாழ்த்துக்கள்

ஓம் சக்தி
மேல் மருவத்துர்
அம்மன் துணை
நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.அதற்கமைய
 இந்த விடயம் தொடர்பாக அறிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி இலக்கத்தை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.அதுதவிரவும், இந்த விடயம் தொடர்பாக பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக் குழுவிற்கும் அறிவிக்க 
முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக இணையத்தின் ஊடாக
 விண்ணப்பிப்பதற்கான மென்பொருள் ஒன்றை 
பரீட்சைகள் திணைக்களம் அண்மையில் அறிமுகப்படுத்தியது.இதனூடாக உயர்தரப் பரீட்சை வரை விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 8 பிப்ரவரி, 2020

யாழ் நல்லைக் கந்தன் பக்தர்களுக்கு ஓர் முக்கிய செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் தைப்பூசம் 08.02.2020 சனிக்கிழமை தைப்பூச உற்சவமானது மாலை 4.45 மணிக்கு வசந்தமண்டபபூஜையுடன்
 ஆரம்பமாகி தொடர்ந்து முருகப்பெருமான் 
வள்ளி தேவசேனா சமேதராக மஞ்சத்தில் வெளிவீதியுலா எழுந்தருள்வார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 20 டிசம்பர், 2019

வறுமையை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் ஜனவரி 15 முதல் வேலை வாய்ப்பு

வறுமை இல்லாதொழிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் ஜனவரி 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தாம் வசிக்கும் பிரதேசத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுடன் மாதாந்தம் 35,000 ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.சுபீட்சத்தின் செட்டிங் நோக்கு கொள்கை பிரகடனத்தை மைய அபிவிருத்தி ஒன்றினை அமைப்பதற்கான முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றதுமிகவும் வறிய மட்டத்தின் வாழ்ந்துவரும், சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் அது கிடைக்கப் பெறாத குடும்பங்களை கட்டியெழுப்புதல் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் குறிக்கோளாகும்.
இந்த திட்டத்தின் ஊடாக அத்தகைய குடும்பங்களில் தொழில்துறைக்கு பங்களிப்பு வழங்க கூடியவர்களை அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படும்.எவ்வித கல்வியையும் பெறாத அல்லது குறைந்த கல்விகத்தகைமை கொண்ட பயிற்றப்படாதவர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் முதலாம் கட்டமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களை வழி நடத்துவதற்கும் முகாமைத்துவம் செய்வதற்கு மேலும் 30,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.சுமார் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு முகாமைத்துவ மற்றும் வெளிக்கள அலுவலர் மட்டத்தில் மேற்பார்வை செய்வதற்கான வேலைவாய்ப்புகளும் இதனூடாக உருவாக்கப்படும்.சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 300- 350 பேர் அளவில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

அவர்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள கல்வித் தகைமைகள் தேவைப்படாத வெற்றிடங்களுக்காக உள்ளீர்க்கப்படுவர். தச்சுத் தொழில், விவசாயம், மீன்பிடி, வனப்பாதுகாப்பு போன்ற துறைகளுக்காக அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த செயற்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.பாதுகாப்பு அமைச்சினதும், முப்படையினரதும் மேற்பார்வையில் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்குதல் இடம்பெறும்.இந்தத் திட்டம் தனது தேர்தல் செயற்பாடுகளின் போது உருவான திட்டமென்பதை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, வினைத்திறனான முறையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். இந்த திட்டத்தின் ஊடாக வறிய குடும்பங்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு பொருளாதாரரீதியில் வலுவடைவார்கள் எனவும் ஜனாதிபதி
 குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>