வணக்கம்

புதன், 2 டிசம்பர், 2015

மரக்கறிகளின் விலைகள் யாழ் சந்தைகளில் அதிகரிப்பு!

யாழ் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.அண்மைய நாட்களில் அதிகளவான மழை பெய்தமையால் மரக்கறிகளின் உற்பத்தி 
குறைவடைந்தது. 
 இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,  1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும், கீரையை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.   
கத்தரிக்காய்
 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், பயிற்றங்காய் 1 கிலோகிராம் 240 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 160 ரூபாய்க்கும், வெண்டி 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், கரட் 1 கிலோகிராம் 350 ரூபாய்க்கும், போஞ்சி 1 கிலோகிராம் 260 ரூபாய்க்கும், புடலங்காய் 1 கிலோகிராம் 150 ரூபாய்க்கும், கருணைக்கிழங்கு 1 கிலேகிராம் 120 ரூபாய்க்கும், லீட்ஸ் 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், 
பூசணிக்காய்
1 கிலோகிராம் 50 ரூபாய்க்கும், வாழைக்காய் 1 கிலோகிராம் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.  சின்ன வெங்காய் 1 கிலோகிராம் 140 ரூபாய்க்கும், பொன்னாங்காணி 1 பிடி 30 ரூபாய்க்கும், 
வல்லாரை 
1 பிடி 20 ரூபாய்க்கும், தேசிக்காய் 1 கிலோகிராம் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மழையால் தொழில்களை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள அன்றாடத் தொழில் செய்து பிழைக்கும்  மக்கள் இந்த விலை அதிகரிப்புகளினால் மேலும் 
பாதிக்கப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக