வணக்கம்

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

உயிரைக் குடித்த நண்பனுக்கு உயிர் கொடுத்த நண்பன்!

நகைத் தொழி­லாளி ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து நகை வேலைக்­குப் பயன்­ப­டுத்­தும் பொட்­டா­சி­யம் என்ற திர­வத்தை அருந்தி உயிரை மாய்த்­தார் என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
நண்­ப­னின் வியா­பார நோக்­கம் கருதி ஒரு கோடி ரூபா­வுக்­கும் மேற்­பட்ட பணத்­தைக் கட­னா­கப் பெற்று வழங்­கி­யி­ருந்­தார் என்­றும் அந்­தக் கடன் பணத்தை நண்­பன் திரும்­பித் தரா­த­தால் கடன் தொல்­லை­யால் அவர் உயிர் மாய்த்­தார் என்­றும் விசா­ர­ணை­யில் 
தெரி­விக்­கப்­பட்­டது.
யாழ்ப்­பா­ணப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யைச் சேர்ந்த ஒரு­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார்.
“வியா­பார நோக்­கத்­தில் ஒரு கோடியே 17 இலட்­சம் ரூபா பணத்தை கட­னா­கப் பெற்று தனது நண்­ப­னுக்கு நகைத் தொழி­லாளி வழங்­கி­யுள்­ளார்.

குறிப்­பிட்ட காலத்­தின் பின்­னர் கடன் பணத்தை நண்­ப­னி­டம் கேட்­ட­போது, 10 இலட்­சம் ரூபாவை வழங்கி மிகு­திப் பணத்­துக்கு சகோ­த­ர­னின் பெய­ரில் காசோலை வழங்­கி­யுள்­ளார். காசோ­லை­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்ட சகோ­த­ரன் வெளி­நாட்­டுக்கு சென்­று­விட்­டார்.
இந்த நிலை­யில் குறித்த குடும்­பத்­த­லை­வர் கடந்த 31ஆம் திகதி தன­து­வீட்­டில் தவ­றான முடிவு எடுத்து நகை வேலைக்­குப் பயன்­ப­டுத்­தும் பொட்­டா­சி­யத்­தைக் குடித்­துத்­துள்­ளார்” என்று இறப்பு விசா­ர­ணை­யில்
 தெரி­விக்­கப்­பட்­டது.
அவர் சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். சிகிச்சை பய­ன­ளிக்­காது அவர் நேற்று உயி­ரி­ழந்­தார்.
மருத்­து­வு­ம­னை­யின் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் மற்­றும் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 5 ஆகஸ்ட், 2017

இலங்கையில் ஆறு மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்

இந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 10 இலட்சத்து 10ஆயிரத்து  நானூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, அச்சபை தெரிவித்துள்ளது.
இதனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கடந்த ஆண்டில் 9 இலட்சத்து அறுபத்தி நான்காயிரத்து இருநூற்றி அறுபத்தி ஏழு சுற்றுலாப் பயணிகளே வருகைத்தந்து இருந்ததாக அச்சபை 
சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த 6 மாதக் காலப்பகுதியில் எமது அண்டை நாடான இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி இந்தியாவிலிருந்து 1 இலட்சத்து 72 ஆயிரத்து எண்ணூற்றி தொன்னூற்றி நான்கு சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 1 இலட்சத்து 34 ஆயிரத்து எழுநூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாபயணிகள் 
வருகை தந்துள்ளனர்.
ஆனால் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதக் காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. காரணம் இக்காலப்பகுதில் நாட்டில் டெங்கு தொற்று நோய் அதிகரித்து இருந்தமை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்​டிருந்தமை என, 
அச்சபை தெரிவித்தது.
இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தரச் செய்வதே எமது இலக்காகும். ஆனால் அந்த இலக்கை அடைவது கஸ்ட்டம் என, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 25 மே, 2017

விபத்தில் 7 பிள்ளைகளின் தாயார் பரிதாபச் சாவு!!!

யாழ்ப்பாணத்தில் நடந்த இறப்பு வீட்டுக்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்த 7 பிள்ளைகளின் தாய்க்கு அவரது மகனின் புத்தம் புதிய மோட்டார் சைக்கிளே எமனாக மாறிய சம்பவம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் நேற்று இடம்பெற்றது என்று பொலிஸார் 
தெரி­வித்­­த­னர்.
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் ரம்பை (வயது 51) என்ற 7 பிள்ளைகளின் தாயாரே விபத்தில் உயிரிழந்தவராவர்.
“யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டுக்குச் செல்வதற்காக குடும்பப் பெண் காலை 8 மணியளவில் பேருந்துக்காக புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் இருந்த சிமெந்துக் கட்டு மேல் உட்கார்துள்ளார். 
அந்த வேளை அந்தப் பெண் இருந்த கட்டுக்கு நேர் எதிராக இருந்த ஒழுங்கையின் ஊடாக அவரின் மகன் மோட்டார் சைக்கிளில் முதன்மை வீதியில் வந்து ஏறியுள்ளார். முதன்மை வீதியால் பயணித்த  முச்சக்கர வண்டியும் அவரின் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு 
விபத்துக்குள்ளாகின.
விபத்தால் நிலைகுலைந்த முச்சக்கரவண்டி மதிலில் உட்காருந்திருந்த பெண்ணின் மீது மோதுண்டது.
விபத்தில்  படுகாயமடைந்த குடும்பப் பெண்  உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு 
செல்லப்பட்டார். 
எனினும் போதனா வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பபட்டது” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பான போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் மகனையும், முச்சக்கர வண்டிச் சாரதியையும் கைது செய்தனர்.
“விபத்தில் சிக்கிய மோட்டர் சைக்கிள் புதியது. அதற்கான இலக்கத்தகடுகூட வழங்கப்படவில்லை.மோட்டர் சைக்கிளைச் செலுத்தியவருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை ” என்று பொலிஸார் 
தெரிவித்தனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

கொடூரமானமுறையில் ஈரானில் ஈழத்து இளைஞர் படுகொலை!

தொழில் நிமித்தம் ஈரான் சென்ற ஈழத்து இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் சடலம் நீர்கொழும்பு, மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு, அலம்பிள் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தையிடம் வாக்கு மூலம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய உடற்பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக
 குறிப்பிடப்பட்டுள்ளது.

வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

மூதாட்டியை அச்சுறுத்தி உடுவிலில்15 பவுண் நகை கொள்ளை!

உடுவிலில் நேற்று அதிகாலை வீடு புகுந்த கொள்ளையர்கள் 15 பவுண் தங்க நகைகள், பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் தனித்திருந்த மூதாட்டியை அச்சுறுத்தி ஓரிடத்தில் இருத்திவிட்டுச் சில மணித்தியாலங்களாகக் கொள்ளையர் தேடுதல் நடத்தி 15 பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், உண்டியலில் காணப்பட்ட ஒரு தொகைப் பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர்.
உடுவில், டச்சு வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஓடு பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் 5 பேர் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தாம் கொண்டு சென்ற ரோச் லைற் உதவியுடன் அறைகளிலும் அலுமாரிகளிலும் தேடுதல் நடத்தி நகைகளையும் பணத்தையும் எடுத்துச் சென்றனர்.
குறித்த வீட்டில் உள்ள ஏனையவர்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை கொள்ளை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. அங்கு விசாரணை நடத்தப்பட்டது. எவரும் கைது செய்யப்படவில்லை என்று 
பொலிஸார் தெரிவித்தனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



புதன், 24 மே, 2017

பஸ் கட்டணங்கள் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படும்?

எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.
வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பின் அடிப்படையில் இவ்வாறு ஜூலை மாதம் கட்டண அதிகரிப்பு பற்றி அறிவிக்கப்பட
 உள்ளது.
ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 9 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார்.
இம்முறை சிறியளவில் பஸ் கட்டணங்கள் உயர்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பஸ் கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சு எவ்வித தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது./
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>


செவ்வாய், 16 மே, 2017

யாழில் கடன் தொல்லையால் தந்தை தற்கொலை!

குடும்­பத் தலை­வர் ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
கடன்­பட்டு வெளி­நாடு சென்ற தனது மகன் திருப்பி அனுப்­பப்­பட்­ட­தால் கட­னைத் திருப்­பிச் செலுத்த முடி­யாத நிலை­யில் குறித்த தந்­தை­யார் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
சம்­ப­வத்­தில் சண்­டி­லிப்­பாய் மாசி­யப்­பிட்­டி­யைச் சேர்ந்த முரு­கேசு தம்­பி­ராசா (வய­துய- 58) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.
கட­னைத் திரும்­பச் செலுத்த முடி­ய­வில் லையே என்று கவ­லைப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த குறித்த குடும்­பத் தலை­வர் நேற்­று­முன்­தி­னம் தவ­றான முடிவு எடுத்து நஞ்­ச­ருந்­தி­யுள்­ளார்.
யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் அவ­ருக்கு மேல­திக சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்சை ப­ய­ன­ளிக்­காது அவர் நேற்­றுக் காலை உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டது. இவர் 4 பிள்­ளை­க­ளின் தந்தை.
பொலி­ஸார் மற்­றும் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். உட­லம் குடும்­பத்­தி­ன­ரி­டம் 
நேற்று ஒப்­ப­டைக்­கப்­பட்­
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 25 மார்ச், 2017

பன்­னா­லை­யில் ஆல­யத்­துக்­குள் வைத்து மது அருந்திய நால்­வர் கைது



தெல்­லிப்­பழை பன்­னா­லை­யில் கோயில் ஒன்­றுக்­குள் வைத்து மது அருந்­திய குற்­றச்­சாட்­டில் 2 சார­தி­கள் உட்­பட 4 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று 
பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
“தெல்­லிப்­ப­ழை­யைச் சேர்ந்த 4 பேரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­னர். நேற்­று­முன்­தி­ன­மி­ரவு அவர்­கள் குறித்த கோயி­லின் உள்ளே இருந்து மது அருந்­தி­யுள்­ள­னர். அது தொடர்­பில் பொலி­ஸா­ருக்­கு் தக­வல் வழங்­கப்­பட்­டது. அங்கு சென்ற பொலி­ஸார் 4 பேரை­யும் கைது 
செய்­த­னர். 
அவர்­கள் விசா­ர­ணை­யின் பின்­னர் பொலிஸ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்­குத் தொட­ரப்­ப­டும்” என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

சற்றுமுன்னர் யாழில் கோரவிபத்து!

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயங்களுக்கு
 உள்ளானார்.
முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 21 மார்ச், 2017

ஓட்டோவில் வந்தவர்களால் அளவெட்டியில் ஆடு திருட்டு!

யாழ் - அள­வெட்­டிப் பகு­தி­யில் வீட்­டின் முன்­னால் கட்டி வைத்­தி­ருந்த ஆடு திருட்­டுப் போயுள்­ள­தாக பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. முச்­சக்­கர வண்­டி­யில் வந்­த­வர்­களே ஆட்­டைத் திரு­டி­னார்­கள் என்று அதன் உரி­மை­யா­ளர் முறைப்­பாட்­டில் 
தெரி­வித்­துள்­ளார்.
“அள­வெட்டி பன்­னா­லைப் பகு­தி­யில் குட்டி ஈன்று இரண்டு மாதங்­க­ளே­யான  தாய் ஆடு வீட்­டுக்கு முன்­பாகக் கட்­டப்­பட்­டி­ருந்­தது. குட்டி அதன் அரு­கில் விடப்பட்டிருந்தது.20.03.2017 திங்கட்­கி­­­ழ­மை
 பகல் 10 மணி­ய­ள­வில் சாலை­யால் ஓர் முச்­சக்­கர வண்டி சென்­றது. அந்த நேரம் நாம் வீட்­டுக்­குள்­ளி­­ ருந்­தோம். முச்­சக்­கர வண்­டி­யில் வந்­த­வ­ரின் நட­மாட்­டம் அறிந்த அய­ல­வர்­கள் எம்மை கூப்­பிட்­ட­னர். சத்­தம் கேட்டு ஓடி­வந்­தோம். அந்த நேரம் ஆடு திரு­டப்­பட்­டு­ விட்­டது.
அய­ல­வர்­கள் கூறு­வ­தன் பிர­கா­ரம் ஓர் பட்­டர் கலர் முச்­சக்­கர வண்­டி­யி­லேயே ஆடு கடத்­தப்­பட்­டுள்­ளது.   இது தொடர்­பில் தெல்­லிப்­பழை பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. எனி­னும் பொலி­ஸார் இது­வ­ரை­யில் எந்த நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை. 
களவாடப்பட்ட தாய் ஆட்டின் இரண்டு மாதக் குட்டி தாயைப் பிரிந்து  நின்று கதறுவதை பார்க்கமுடியாது சோகமாகவுள்ளது. எந்த உணவையோ நீரையோ குட்டி அருந்துவதாகத் தெரியவில்லை. இதனால் கத்திக் கத்தியே அதன் உயிரும் பிரிந்துவிடுமோ என்ற 
ஏக்கமாகவுள்ளது.  
இவ்வாறான பாவங்களை சுமப்பவர்களும் இந்த நாட்டிலேயே உள்ளனர்” என்று ஆட்டின் உரிமையாளர் மனவேதனையுடன்
 தெரிவித்தா
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 2 மார்ச், 2017

தமிழகத்தில்நடன நிகழ்ச்சியில் மகுடம் சூட்டிக்கொண்ட, ரத்னம் விதுர்ஷா !!

யாழ். நெல்லியடியில் இருந்து கடந்த கால யுத்தத்தின் போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வரும் எங்கள் ஈழத்து பெண் ரத்னம்.விதுர்ஷா தற்பொழுது தமிழக தொலைக்காட்சிகளில் மூன்றாவது இடம் வகிக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் 
ஒன்றான சீ தமிழ் (zee tamil) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகும் பிரபல நடன நிகழ்ச்சியான டான்சிங் கில்லாடி நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் அறிமுக நிகழ்சி பிரமாண்டமான முறையில் நடை பெற்றது இந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
ஈழத்துப் பெண்ணை ராணியாக அலங்கரித்து நடிகை சினேகா அவர்களினால் மகுடம் சூட்டப்பட்டது.
இதற்கு பின்னால் ஒரு வலுவான காரணம் இருக்கிறது.
நடனத்தில் இருந்த அதீத ஆர்வத்தால் தமிழகத்தில் நான்காவது இடத்தில் உள்ள விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியான “ஜோடி நம்பர் 01″ நிகழ்ச்சியின் தேர்வில் கலந்து கொள்ள சென்ற இந்த ஈழத்துப் பெண்ணை அவரது நடனத்தை பார்க்காமலே அழகு குறைவு என்ற ஒரே காரணத்தால் அவரை நிராகரித்தது விஜய்
 தொலைக்காட்சி.
இதன் காரணமாக மன ரீதியில் பலவீனம் அடைந்த அந்த பெண்ணுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவே இவ்வாறு செய்தது
 சீ தமிழ் தொலைக்காட்சி
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 16 பிப்ரவரி, 2017

சர்வதேச தரத்திற்கு யாழிலுள்ள உணவகங்களை மாற்ற முயற்சி ?

யாழில் உள்ள உணவு தொழிற்சாலைகளை உலகத்தரம்  வாய்ந்தாக மாற்றுவதற்காக நாம் முயற்சிக்கின்றோம். எனவே எமது  அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் தமது செயற்பாடுகளை தொடங்குவார்கள் என வடமாகாண சுகாதார  உத்தியோகத்தர் கேசவன் தெரிவித்தார்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் 
தெரிவிக்கையில் 
ஜேர்மனின் பி.ரி.பி அமைப்பு  மற்றும்  இலங்கை  அரசாங்கத்தின் ஏற்பாட்டில்  உணவு மேம்பாட்டு தொழிற்பாட்டு திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் உணவு உற்பத்தி  உணவைப் பேணுதல்  உணவு விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளில் ஆரோக்கியமான  இரசாயன கலப்பற்ற கிருமி தொற்று அற்ற   உணவை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையே இத் திட்டதின் மூலம் 
பயிற்றுவிக்கப்படவுள்ளது.
இதன் முதற் கட்டமாக  உணவு தொழிற்சாலைகள், விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிச்சாலைகளில் தற்போதய நிலை மையை  ஆராய்ந்து  அறிக்கை  ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். 
இவ்  அறிக்கையில் உணவு தொழிற்சாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றி  ஆராய்ந்திருக்கின்றோம். இவ் அறிக்கையின் நோக்கம் உணவகங்கள் மீது குற்றம் சாட்டுவதல்ல. உணவகங்களை தற்போது  இருக்கின்ற நிலையைவிட மேலும் தரமுயர்த்துவதே
 இதன்  நோக்கம். 
இங்குள்ள உணவு தொழிற்சாலைகளை உலகத்தரம்  வாய்ந்தாக மாற்றுவதற்காக நாம் முயற்சிக்கின்றோம். எனவே  எமது அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் தமது செயற்பாடுகளை தொடங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வீட்டு வளவுக்குள்வேகக் கட்டுப்பாட்டை இழந்து புகுந்த பாரவூர்தி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஒன்று வீட்டு வளவுக்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளானதில் சாரதி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு, இருதயபுர சந்தியில் உள்ள பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீட்டின் சுற்று மதிலை உடைத்துக்கொண்டு குறித்த பாரவூர்தி வீட்டு வளவுக்குள் புகுந்துள்ளது
இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் அருகில் இருந்த மின்கம்பம் ஒன்று சேதமடைந்துள்ளது
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 2 பிப்ரவரி, 2017

அதிக வருமானம் வெளிநாட்டவர்களால் பெற்ற இலங்கை!

இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் கடந்த வருடம் அதிகளவான வெளிநாட்டு வருமானம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல 
தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 7,241.5 மில்லியன் அமெரிக்க டொலராகும். இலங்கை பெறுமதியில் அது 1,054.5 பில்லியன் ரூபாவாகும். இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.7 வீத
 அதிகரிப்பாகும்.
2015ஆம் ஆண்டு பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 6,980.3 மில்லியன் அமெரிக்க டொலராகும், அது இலங்கையின் பெறுமதியில் 949 பில்லியன் ரூபாவாகும்.
அதற்கமைய 2015 ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் 261 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 21 ஜனவரி, 2017

பலத்த காற்றுடன் யாழ்.குடாநாட்டில் இன்று பரவலாகக் கடும் மழை

யாழ்.குடாநாட்டில் இன்று (21.01.2017) பிற்பகல்-03 மணி தொடக்கம் தற்போது வரை பரவலாகக் கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாரி காலம் போல இடைவிடாது கொட்டும் மழையால் யாழ்.குடாநாட்டின் தாழ் நிலப் பகுதிகள் பலவற்றிலும், பல்வேறு வீதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழை வெள்ளம் தேங்கி நிற்பதை அவதானிக்க 
முடிகிறது.
கடும் மழையுடன் அவ்வப்போது பலத்த காற்றும் வீசுகிறது. இதேவேளை,இன்று காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரையும் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 13 ஜனவரி, 2017

புனரமைக்கப்பட்ட நானுஓயா பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு

நுவரெலியா - நானுஓயாவில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த பொலிஸ் நிலையம் திருத்தியமைக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பொலிஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் இருந்த போதும் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்தது.
அதற்கு தேவையான நிதி கடந்த அரசாங்கங்களினால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் நானுஓயா பொலிஸ் அதிகாரிகளும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையத்தை திருத்தியமைக்க 37 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
இத்தொகை பொலிஸ் நிலைய புனரமைப்பு பணிகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை.
இருந்த போதும் நானுஓயா பொலிஸ் நிலையத்தின் 18ஆவது பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரியந்த அமரசிங்க மற்றும் பொலிஸ் உதவி அதிகாரி அபேசிங்கவின் கடும் முயற்சியால் சிரமதான முறையில் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டது.
இதன்பின்னரே குறித்த பொலிஸ் நிலையத்தின் திறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சகல மதத்தலைவர்களும் கலந்து கொண்டதோடு பிரதம அதிதியாக நுவரெலியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்மசிரி முனசிங்க, டீ.எம்.யூ.எம்.திஸாநாயக்க, பிரிதி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.தஸநாயக்க, பிரிதி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஐ.அனுர பண்டார, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து
 கொண்டிருந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சத்திர சிகிச்சை உபகரணங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான சத்திர சிகிச்சை உபகரணங்கள் நேற்று(12) மாலை 3.00 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் கோட்போர் கூடத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி தனது 20 வருட சேவை நிறைவினை கொண்டாடும் இந்த ஆண்டில் “கூட்டாண்மை சமூக பொறுப்பு” திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 15 அரச வைத்தியசாலைகளின் சத்திர சிகிச்சை பிரிவுகளுக்காக 24.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்களை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீ.எல்.சி யின் மன்னார் கிளை முகாமையாளர் எவ்.ஆர்.மனோகாந்த் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரெலா ரதனி யூட் முன்னிலையில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் சசிகரனிடம் வழங்கி வைத்தார்.
இதன் போது வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 9 ஜனவரி, 2017

பயணச் சீட்டு இல்லாத பயணிகளிடம் 1000 ரூபா தண்டப் பணமும்,

தனியார் பஸ்களில் தூர இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்ளும்பிரயாணிகளுக்கும் புதிய தண்டப் பணமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகதேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கிணங்க, பயணச் சீட்டு இல்லாத பயணிகளிடம் 1000 ரூபா தண்டப் பணமும்,பிரயாணச் சீட்டுத் தொகையை இரு மடங்காகவும் அறவிடப்படவுள்ளது.
இது தொடர்பான சட்டம் ஆணைக்குழுவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுத்தலைவர் எம்.ஏ.பீ. ஹேமச்சந்திர 
தெரிவித்துள்ளார்.
இதேவேளை,அண்மையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கான தண்டப் பணம் 1000 ரூபாவாக அதிகரிக்கஅரசாங்கம் 
தீர்மானித்திருந்தது.
இருப்பினும்,தனியார் பஸ்களில் இந்த சட்டம் இருக்கவில்லை ஆனால் தற்பொழுதுதனியார் பஸ்களுக்கும் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
எனவே பஸ்களில் பயணிக்கும் பொது மக்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறுதேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் ராகு - கேது, குரு, சனிப்பெயர்ச்சி..!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017இல்) குரு, ராகு - கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என 9 நவக்கிரகங்கள் உள்ளன. நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான 
பலன்கள் ஏற்படும்.
சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும். குரு ஓராண்டு, ராகு- கேது ஒன்றரை ஆண்டு, சனி இரண்டரை ஆண்டுகள் என ஒவ்வொரு கோளும் ஒரு ராசியில் சஞ்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலம் வேறுபடும்.
இவற்றில் குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெறும் போது கோயில்களின் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் செய்யப்படும்.
குரு ஆண்டுதோறும் இடம் பெயர்வதால் பெரும்பாலான ஆண்டுகளில் குருப்பெயர்ச்சி ஏற்படும். ராகு-கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் ஒரு சில ஆண்டுகளில் ராகு-கேது பெயர்ச்சி இருக்காது.
அதேபோல, சனிப் பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுவதால் ஒன்று அல்லது 2 ஆண்டுகளுக்கு சனிப் பெயர்ச்சி
 இருக்காது.
ஆனால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017-ல்) குரு, ராகு-கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன.
திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 27ஆம் திகதி ராகு- கேது பெயர்ச்சி, செப்டம்பர் 2ஆம் திகதி குருப் பெயர்ச்சி, டிசம்பர் 19-ம் திகதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>