வணக்கம்

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நீங்கள் அறியாத அற்புத மருத்துவப் பலன்கள்கொண்டஓமம்



சிலர் எவ்வவயிறுப் பொருமல் நீங்க:
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
புகைச்சல் இருமல் நீங்க:
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
மந்தம்:
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
பசியைத் தூண்ட:
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.சுவாசகாசம், இருமல் நீங்க
காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த 
மருந்தது செய்முறை:
ஓமம் – 252 கிராம்ஆடாதோடைச் சாறு – 136 கிராம்இஞ்சி ரசம் – 136 கிராம்பழரசம் – 136 கிராம் புதினாசாறு – 136 கிராம்இந்துப்பு – 34 கிராம் சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.
சிறு குறிப்புகள்:
1. மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.
2. ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.
3.ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
4. ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.
5. ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
6. சோர்வு நீங்க ஓமத்தை
நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா? ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா? தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம். ஓமத்தில் 
சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு 
இது தான சாப்பாடு.
7. வயிற்றுக் கோளாறுக்கு ஓம் தான் சிறந்த மருந்து.
8. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.
9. ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
வயிற்று வலி ஏற்பட்டால்:
ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும். நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும்.
மூட்டு வலிக்கு:
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.

மார்ச்சளி இருந்தால்:
ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம்.
பல்வலி இருந்தால்:
இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
வயிறு “கடமுடா” வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்.
10. தொப்பையை குறைக்க:
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.
11. ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு:
ஓமம், சீரகம் கலவை வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. “ஜெலூசில் ” போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க்க விளைவுகளும் 
கிடையாது.
செய்முறை:
ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து ‘மிக்சியில்’ போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம். மந்த வயிற்றுக்கான அறிகுரி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக “கல்யாண சமையல் சாதம் ” சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும்.
12. இடுப்பு வலி நீங்க:
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
ளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் 
உடல் பலம்பெறும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 16 பிப்ரவரி, 2019

சரஸ்வதி சிலை ஐந்த இலட்சம் ருபா செலவில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில்

யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி உருவச் சிலை இன்று வெள்ளிக்கிழமை திறந்து 
வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைச் சமூகத்தின் வேண்டுகோளுக்கமைய யாழ் நகரிலுள்ள மகாநதி நகைமாட உரிமையாளரால் ஐந்த இலட்சம் ருபா செலவில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலையை பாடசாலையின் அதிபர் மகேந்திரராசா மற்றும் மேற்படி நகைகக் கடை உரிமையாளர் ஆகியோர் இணைந்து 
திறந்து வத்தனர்.
பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற விசேட அபிசேக ஆராதனை வழிபாடுகளின் பின்னர் இச் சிலை உத்தியோகபுர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் யாழ் இந்து மகளீர் கல்லூரி அதிபர் உட்பட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர். மாணவர்கள் எனப் பலரும் கலந்து 
கொண்டிருந்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தனியார் கல்வி நிலையங்களுக்கு வவுனியாவில் பூட்டு

வவுனியா தனியார் கல்வி நிலையங்களை நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் கல்வி நிலையங்களின் சங்கத்தலைவர் தி. கோபிநாத் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாவித்தியன் தினம் நாளைய தினம் பிரமாண்டமான முறையில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இந் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கோடு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை 3.2.19 மகாவித்தியன் தினம் அனுஸஷ்டிக்கப்படவுள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்களை மூடி குறித்த நிகழ்வில் பழைய மாணவர்களுடன் அவர்களது பிள்ளைகளும் நிகழ்வில் கலந்துகொண்வதற்கு 
இலகுவாகவும் தனியார் கல்வி நிலையங்களை மூடி
 ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா நகரசபையின் தலைவர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவாகள் விடுத்த
 கோரிக்கையினை தனியார் கல்வி நிலையத்தின் 
ஒன்றிய நிர்வாகம் இன்று விசேட கூட்டமொன்றின் ஊடாக தீர்மானத்தினை எடுத்துள்ளது.
அதன் பிரகாரம் நாளை ஞர்யிற்றுக்கிழமை 11 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட அனைத்து தனியார் வகுப்புகளையும் நிறுத்துவது எனவும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகள் வழமையோபன்று நடத:துவது எனவும் திர்மானிக்கப்பட்டள்ளது.
உயர்தர வகுப்பு மாணவர்கள் பலர் வேறு பிரதேசங்களில் இருந்து வவுனியாவிற்கு விடுமுறை நாட்களில் வருகை தந்து கற்பதுடன் சிலர் தங்கியிருந்தும் தமது கற்றல் செயற்பாட்டை 
முன்னெடுக்கின்றனர்.
அத்துடுன் உயர்தர வகுப்புகளுக்கு கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்தும் ஆசிரியர்கள் வவுனியாவழிற்கு வருகை தருவதனால் குறித்த வகுப்பை நிறுத்துவது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டள்ளது என தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஆவரங்கால் பாடசாலை அதிபரின் கீழ்த்தரமான செயல்

ஆவரங்கால் பகுதியில் அமைந்திருக்கும் பாடசாலை ஒன்றின் அதிபர், யாழ் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகையில் பத்து லட்சம் ரூபாவினை பெற்று, குறைந்த ரூபாவிற்கு மட்டும் வேலையை செய்து முழுப்பணத்திற்கான கணக்கை காட்டியதாக பாடசாலை நலன்விரும்பிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, வெளிநாட்டில் இருக்கும் பழைய மாணவர்களால் வாங்கப்பட்ட காணிக்கும் அவர்களால் செய்யப்படட வேலைகளுக்கும் இந்த பத்து லட்சத்திலேயே கணக்கு காட்டப்பட்டிருப்பதாக மேலும்
 தெரிவிக்கின்றனர்.
முன்னரும் பாடசாலை பணத்துடன் முரண்பாடுகளை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலமுறை கணக்கு வழக்கு கேட்டும் தெரிவிக்காத இந்த அதிபர் குறித்து, யாழ்ப்பாண கல்வித் திணைக்களமே இதற்கான உண்மைத்தன்மையை அறியத்தரவேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே தமக்கு இருப்பதாக இந்த பாடசாலையின் நலன்விரும்பிகள்
 தெரிவிக்கின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>