வணக்கம்

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சிங்கள பொலிஸார்தமிழ் மொழி டிப்ளோமாதேர்வுக்கு இணைவு

இனவிவகார நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அரச கரும மொழிகள் திணைக்கள ஏற்பாட்டில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்படும் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொள்ள 192 சிங்கள பொலிஸார் இன்று மட்டக்களப்பில் இணைந்து
 கொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இப்பயிற்சி நெறிகள் இன்று பயிற்சி பரிசோதகர் ஐ.பி.பேரின்பராசா தலைமையில் 
ஆரம்பமானது.
5 மாதங்களை கொண்ட இப்பயிற்சி நெறி 11வது பயிற்சி முகாமாகும். இதற்கு முன்னர் கல்லூரியிலிருந்து 1400 சிங்கள பொலிஸ்
 உத்தியோகத்தர்கள் தமிழ் மொழி டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேற்யுள்ளனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே.திஸ்ஸாநாயக தமிழ் கற்கை நெறிக்குப்பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜினதாச உட்பட பலர் கலந்து 
கொண்டனர்.
மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பல பொலிஸ் அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செல்வச் சந்நிதி முருகனின் தீர்த்தோற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தீர்த்ததிருவிழா  இன்று சனிக்கிழமை(29.8.2015)அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
தீர்த்ததிருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பங்கேற்றனர்.தீர்த்ததிருவிழாவில் தொடர்ந்து பஜனை நிகழ்வுகளும் நடைபெற்றது.
யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் மினிபஸ் சேவைகள் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபட்டன .
இம்முறை தீர்த்ததிருவிழாவில் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்த அதிக எண்ணிக்கையானவர்களும் கலந்து கொண்டார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

பாடசாலையின் காமுக அதிபரை பொலிஸார் தேடுகின்றனர் !

  புத்தளம் நகரில் பிரபல பாடசாலையொன்றின் முன்னாள் அதிபர் , அதே பாடசாலையில் கற்கும் மாணவியொரை துஷ்பிரயோகத்துகுட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அயலவரொருவரே சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு இம்முறைப்பாட்டை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது அம் மாணவி மருத்துவ பரிசோதனைகளின் பொருட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வண்ணாத்திவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியொருவரே மருத்துவ பரிசோதனைகளின் பொருட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.குறித்த அதிபர் சிறுமியிடம் பல தடவை முறைகேடான விதத்தில் நடந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பில் பிள்ளையின் தாய் புத்தளம் கல்வி வலயஅலுவலகத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த அதிபர் பின் தங்கிய பிரதேச பாடசாலையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதனையடுத்து மாணவியின் வீட்டுக்கு வந்துள்ள அதிபர் பெற்றோரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதனைக் கண்ட அயலவரே முறைப்பாடு செய்துள்ளார்.பின்னர் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், மாணவியிடம் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளைப் பெற்றுள்ளனர். மாணவியும் அதிபரின் காமுக செயற்பாடுகள் தொடர்பில் உண்மைகளைக் கூறியுள்ளார். தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறாக நடந்தமை தொடர்பில் அம்மாணவி தகவல் வழங்கியுள்ளார். தற்போது அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள்.???

கடற்பகுதியில் இருந்து சுமார் 4400 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இத்தாலிய கடலோர காவற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை இத்தாலிய கடலோர காவற்படையினர் உத்தியோகபூர்வமாக இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளனர்.
சுமார் 20 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலம் குறித்த
 குடியேற்றவாசிகள் வந்திறங்கியதாகவும் அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலேயே வந்திறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 2000 க்கும் அதிகமானோர் இவ்வாறு சட்டவரோதமாக சிறிய கப்பல்களில் பயணித்து வரும் பொழுது உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிபியாவில் இருந்து இத்தாலிக்கு வரும் குடியேற்றவாசிகளே அதிகம் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து
 தெரியவந்துள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

விளக்கு தீயில் எரியுண்ட இளம்பெண் சாவு..!!

குப்பி விளக்கு தட்டுப்பட்டு எரியுண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில் 
இன்று உயிரிழந்தார்.
உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த பச்சிளம் குழந்தையின் தாயான ஜதீசன் தமிழினி (வயது 22) என்பவரே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு வேலைக்கு சென்று 
விட்டு வந்த கணவன் உறக்கத்தில் இருந்த அவரை அழைத்தார் எனவும் அந்தநேரம் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது விளக்குத் தட்டுப்பட்டு அவர் அணிந்திருந்த உடையில் தீப்பற்றியதாகவும் 
தெரிவிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தடாகத்தில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி பலியானார்.

பெங்களூர் அருகே பாறை மீது நின்று ‘செல்பி‘ படம் எடுக்க ஆசைப்பட்டு  அருவியின் தடாகத்தில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி பலியானார். 
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை டவுனில் நேருநகரை சேர்ந்தவர் பிரதீப் (வயது 24). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. புதுமாப்பிள்ளையான பிரதீப் நேற்று  தனது நண்பர்கள் 5 பேருடன் மடிகேரி தாலுகா நாபொக்லு அருகே உள்ள சேலாவரா அருவிக்கு 
சுற்றுலா சென்றார்.
அப்போது பிரதீப் மட்டும் அருவி ஓரத்தில் இருந்த ஒரு பாறை மீது ஏறி அருவியையும், தன்னையும் சேர்ந்து ‘செல்பி‘ படம் எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் வழுக்கி, 
அருவியின் தடாகத்தில் விழுந்துள்ளார். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது 5 நண்பர்களும் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் அவர்களால், பிரதீப்பை காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கினார். அவரது உடலை தண்ணீர் அடித்துச் சென்றது.
அதனை தொடர்ந்து போலீசார் தீவிரமாக அவரது உடலை தேடினர் தீவிர தேடுதலுக்கு பிறகு பிரதீப்பின் உடல் மீட்கப்பட்டது. 
அங்கு வந்திருந்த பிரதீப்பின் மனைவி, அவரது பெற்றோர், அவரது உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 12 ஆகஸ்ட், 2015

துப்பாக்கி முனையில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வர்கள் கைது???

பாகிஸ்தானில் சுமார் 350 குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்த 14 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைதுசெய்து உள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கசூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு
 ஆளாகிய கொடூரச்சம்பவம் வெளியாகி உள்ளது. 21 பேர் அடங்கிய கும்பலானது இங்குள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை சீரழித்து தங்களுக்கு ஏற்றவாறு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து உள்ளனர். இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் இணைய தளங்களில் வெளியாகிஉள்ளது.
கும்பலானது எடுத்த ஆபாச படம் அடங்கிய சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள், சிறுவர்களை வைத்து கொடூரக்கும்பல் படம் எடுத்து உள்ளது. சர்வதேச அளவில் பாகிஸ்தானில் இருந்துதான் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் 
ஆபாச படங்கள் அதிக அளவில் வெளியாகுகிறது. பாகிஸ்தானில் சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள்தான் இந்த கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். சிறுவர் மற்றும் சிறுமிகளை துப்பாக்கி முனையில் இத்த கொடூரச்செயலை கொடூர கும்பலானது அரங்கேற்றிஉள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்திவரும் பாகிஸ்தான் போலீசார் சுமார் 14 பேரை கைது செய்து உள்ளனர் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.
கிராமப்புறங்களை சேர்ந்த சிறார்களுடன் முதலில் நல்ல முறையில் பழகும் இந்த கும்பலானது, அவர்களுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை வைத்து தங்கள் விருப்பப்படி வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவை இணைய தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இதற்கிடையே இதுபோன்ற வீடியோக்கள் 
மேற்கத்திய நாடுகளுக்கும் அனுப்பட்டது. வீடியோ எடுத்து, குழந்தைகளின் பெற்றோர்களையும் அதனை வைத்து கொடூரக்கும்பல் மிரட்டி உள்ளது. ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரை மிரட்டியும் இந்த கும்பல் பணம் பறித்துஉள்ளது.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது
 விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது என்றும் இதுதொடர்பாக மேலும் பலர் விரைவில் கைது 
செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. வீடுகளில் வேலைசெய்யும் சிறார்களுக்கும் அங்கு இதேநிலைதான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுபோன்ற கும்பல்கள் பாகிஸ்தானில் இவ்வளவு நாட்கள் எப்படி செயல்பட்டது என்பது தொடர்பாக கேள்வி 
எழுந்து உள்ளது.
பாதிகப்பட்ட சிறுமி பேசுகையில், அவர்கள் என்னை அழித்துவிட்டனர். என்னுடைய குடும்பத்தையும் அழித்துவிட்டனர். என்னையும் அவர்கள் கொலை செய்துவிட்டனர் என்று கண்ணீருடன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக மாவட்ட அதிகாரி பேசுகையில், 
“கொடூரக் 
கும்பலில் சுமார் 15 முதல், 21 பேர் வரையில் இருக்கலாம். கும்பலில் உள்ளவர்கள் 15 வயதுக்கு சிறிய சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இந்த கொடுரமானது நிக்ழந்துவருகிறது,” என்று கூறி உள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

நீச்சலடிக்க சென்ற பெண்னின் கை முதலையின் வாயில்

அமெரிக்காவில் தனிமையில் நீச்சலடிக்க விரும்பிய பெண் முதலையிடம் சிக்கி தனது கையை பறிகொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள வெகிவா நதியில் நீச்சலடிப்பதற்காக பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அங்கு நண்பர்களுடன் நீச்சலடித்துக்கொண்டிருந்த தனிமை விரும்பியான இவர், ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றுள்ளார், அங்கு நீச்சலடித்துக்கொண்டிருந்தபோது முதலை ஒன்று இவரது கையை கடித்திருக்கிறது.
முதலையுடன் நடந்த போராட்டத்தில் தனது கையை இழந்ததாக கூறப்படுகிறது, இந்த போராட்டத்தின்போது மயங்கிய இவரை அந்த வழியாக படகில் சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, இவரது கையை பொருத்தி சீரமைக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அசனத்திகாக ரயில் பெண்கள்:ஆடைகளை கிழித்துகலட்ட.காணொளி

சீனாவில் மெட்ரோ ரயிலில் இடம்பிடிப்பதற்காக இரண்டு பெண்கள் ஆடைகளை கிழித்து சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சீனா தலைநகர் பீஜிங்கின் மெட்ரோ ரயிலில் இரு பெண்கள் பயணித்துள்ளனர், அப்போது ஒரு இருக்கை காலியானபோது அதில் அமர்வதற்கு இவர்கள் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் தொடங்கிய சண்டை, சிறிதுநேரத்தில் கைகலப்பாக மாறி இருவரும் மாறி மாறி ஆடைகளை கிழித்துக்கொண்டனர், இவர்கள் இருவரையும் சகபயணிகள் விலக்கிவிடாமல் அருகில் இருந்து வேடிக்கை பார்த்துள்ளனர்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

குழந்தைகளுக்கு தாய்கள் இல்லாத :அவலநிலை???

சீனாவில் 6.1 கோடி குழந்தைகள் அனாதைகளாக தவிப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.
மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள ஹூயஜிங் கிராமம் தாய்கள் அற்ற கிராமம்("motherless village" ) என்று அழைக்கப்படுகிறது.
ஏனெனில், இந்த கிராமத்தில் பெற்றோர் இல்லாமல் 132 குழந்தைகள் வசிக்கின்றனர், மேலும் அனாதையாக தவிக்கும் இக்குழந்தைகள் மனநிலை பிரச்சனை மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும், சீனாவில் சமீபத்தில் வெளியான புள்ளிவிபரத்தில், 6.1 கோடி குழந்தைகள் அனாதைகளாக உள்ளனர், பெரும்பாலான பெற்றோர்கள் வேலை தேடி நகரங்களுக்கு செல்லும் காரணத்தினாலேயே அனாதைக்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது.
இதுதவிர, மறுமணம் செய்துகொள்வதும், பெற்றோர் மரணமடைவதும் காரணமாக கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சட்டப்படிபதினெட்டு வயதுக்குக் குறைந்த திருமணம் செல்லுபடியாகது

கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயிருந்த தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டுமாறு கோரி, தாயார் ஒருவர் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகளின்போது, 
காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் கழுத்தில் தாலியுடனும் 6 மாதக் கர்ப்பத்துடனும் தனது காதலனுடன் நீதிமன்றத்தில் பலரும் பார்த்திருக்க வந்து நின்றார்.
இந்த வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் அளித்துள்ள தீர்ப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் திருமண வயதை எட்டாத சிறுமியொருவர் இவ்வாறு தாலியோடும் கர்ப்பமாகவும் வந்து நின்ற கோலத்தையடுத்து,
 பெருமைக்குரிய யாழ் மண்ணின் பெருமை சீரழியும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கின்றது என கவலை வெளியிட்டிருந்தார்.
தமிழ் மக்களின் கலாசாரத் தலைநகரமாகக் கருதப்படுகின்ற யாழ் மண்ணின் பெருமை சீரழியும் நிலையை வெளிப்படுத்தும் வகையில் இந்த வழக்கு தொடர்பான செய்தி முன்னர் வெளியாகியிருந்தது.
அந்தச் செய்தி சமூகத்தின் பல தரப்பினர் மத்தியிலும் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. வயது வந்த பெண்களின் தாய்மார், வயது வந்த இளம் பெண்கள், பொறுப்புள்ள பெற்றோர் என பலதரப்பட்டவர்களும் இந்த வழக்கு தொடர்பான சம்பவம் குறித்து பெரிதும் கவலையடைந்திருந்தனர்.
அதேநேரம், 17 வருடம் 2 மாதம் நிறைந்த – திருமண வயதை எட்டாத அந்தப் பெண்ணை அவருடைய விருப்பப்படி, அவருடைய காதலனுடன் (தாலி கட்டிய கணவன்) செல்ல அனுமதித்தன் மூலம் 18 வயதுக்குக் குறைந்தவர்களின் தாலி திருமணம் செல்லுபடியானதா என்ற ஒரு மயக்க நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனை சமூகத்திற்குத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த வழக்கு விசாரணையின்போது எழுந்திருந்த சட்டரீதியான விவாதம், கேள்விகள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டிண தேவை எழுந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது சட்டரீதியான
 பல்வேறு விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டிந்தன என்பது குறிப்பிடத்தக்கது, அத்தகைய கவனிப்பின் அடிப்படையிலேயே நீதிபதி இளஞ்செழியன் 18 வயதுக்குக் குறைந்த தாலித் திருமனம் செல்லுபடியற்றது. அதனை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட நீதிமன்றத்திற்கே உள்ளது என தெரிவித்தார்.
அரசியலமை;பபுச் சட்டத்தின் 141 ஆம் பிரிவின் கீழ் இந்த ஆட்கொணர்வு மனுவை காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்த பெண்ணின் தாயார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணையின்போது, அந்தப் பெண் தனது காதலுடன் சட்டத்தரணியின் ஊடாக மன்றில் ஆஜராகினார். அப்போது அவருடைய சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இந்தப் பெண்ணுக்கு 17 வருடம் 2 மாத வயதாகின்றது.
இவர் இந்து சமயாசாரப்படி, தாலித்திருமணம் செய்துள்ளார். ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் உள்ளார் என தெரிவித்தார்.
இதனையடுத்து, 18 வயதுக்குக் குறைந்த தாலித் திருமணம் சட்டப்படி செல்லுபடியானதா என்ற சட்ட விவாதம் மன்றில் எழுந்தது.
அப்போது, பொதுத் திருமணக் கட்டளைச் சட்டத்தின்படி 18 வயதுக்குக் குறைந்த பதிவுத் திருணம செல்லுபடியற்றது.
குணரட்னம் எதிர் பதிவாளர் நாயகம் வழக்கில் நீதியரசர் ஷிராணி திலகவர்தன 18 வயதுக்குக் குறைந்த பதிவு திருமணம் செல்லுபடியற்றது என தீர்ப்பளித்துள்ளார்.

எனவே, எந்தவிதமான திருமணமும் 18 வயதுக்குக்குறைந்ததாக இருந்தால் தேச வழமைச் சட்;டம், பொதுத் திருமணக் கட்டளைச்சட்டம் என்பவற்றின் அடிப்படையில் அது செல்லுபடியற்றது.

எனவே, இந்த வழக்கில் 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் செய்துள்ள தாலித் திருமணம் சட்டப்படி செல்லுபடியற்றது. இதனை ரத்து செய்யும் அதிகாரம் சிவில் நீதிமன்றமாகிய மாவட்ட நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.

எனவே இந்த தாலித் திருமணத்தை ரத்து செய்ய வேண்டுமானால் மாவட்ட நீதிமன்றத்திற்கே செல்ல வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அத்துடன் அவர் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது:

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை எனவே, 17 வயதுடைய இந்தச் சிறுமியின் பாதுகாவலர் யார் என்ற சட்டரீதியான கேள்வியும் எழுகின்றது.

இதனையடுத்து, ஐநா சிறுவர் உரிமைகள் சட்டத்தின்படி, 18 வயதுக்குக் குறைந்தவர்கள் சிறுவர் சிறுமியராவர். இலங்கை சிறுவர் பாதுகாப்பு உரிமைகள் சட்டத்திலும், 18 வயதுக்குக் குறைந்தவர்கள், சிறுவர் சிறுமியர் என்றே வரையறுக்கப்பட்டிருக்கின்றது.

எனவே அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை பெற்றோராகிய தாய் தந்தையருக்கே வழங்கப்பட வேண்டும் என்பது சட்டம். அந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 17 வருடம் 2 மாதம் நிறைந்த பெண்ணின் பாதுகாப்பை மனுதாரராகிய தாயிடமே வழங்க வேண்டும். ஆனால் இங்கே அவர் கர்ப்பிணியாக இருப்பதே முக்கியமான பிரச்சினையாகும்.

அத்துடன், 16 வயதுக்குக் குறைந்த பெண் விரும்பியோ விரும்பாமலோ ஓர் ஆணுடன் உடலுறவு கொண்டால் அந்த ஆண் மகன் மீது சட்டப்படி பாலியல் வல்லுறவு குற்றம் சுமத்தி, வழக்கு தாக்கல் செய்ய முடியும் என இலங்கை தண்டனைச் சட்டக் கோவை பரிந்துரைக்கின்றது.
ஆனால் 16 க்கும் 18 க்கும் இடைப்பட்ட வயதுடைய பெண் ஒருவர், விரும்பி ஆண் ஒருவருடன், உடலுறவில் ஈடுபட்டால், அந்த ஆண் மகனுக்கு எதிராகக் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
எங்கள் முன்னிலையில் உள்ள இந்த வழக்கில் அப்பெண் கர்ப்பம் தரித்த வயது 17 வருடம் 2 மாதமாகும். எனவே அது குற்றச் செயலும் அல்ல.
அடுத்ததாக, 18 வயதுக்குக் குறைந்த சட்டரீதியற்ற தாலித்திருமணத்தின் போது பிறக்கும் குழந்தையின் சட்டபூர்வ நெறிமுறையான அந்தஸ்து என்ன என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது.
அதனை சட்டபூர்வமாக்க வேண்டுமானால், குழந்தையை சுமக்கும் பெண் 18 வயது நிரம்புகின்றபோது, பொதுத் திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ், சட்டரீதியான பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
எனவே, 18 வயதுக்குக் குறைந்த தாலி திருமணத்தை ரத்து செய்வது, பிறக்கப்போகும் குழந்தையின் நெறிமுறையான, சட்டரீதியான தன்மை, 18 வயதுக்குப் பின்னர் செய்யப்பட வேண்டிய பதிவுத்
 திருமணம் என்பன சிவில் நீதிமன்றமாகிய மாவட்ட நீதிமன்றத்திலேயே தீர்க்கப்பட வேண்டும்.
மேல் நீதிமன்றத்தில் எங்கள் முன்னிலையில் தாக்கல் செய்யப்டப்ட வழக்கு பிள்ளையைக் காணவில்லை என்ற ஆட்கெணர்வு மனு வழக்காகும்.
வழக்கு விசாரணைகளின்போது, பிள்ளையை உயிருடன் மன்றில் நிறுத்தியுள்ளார்கள். பிள்ளை 17 வருடம் 2 மாதம் என்ற காரணத்தினால், அந்தப் பிள்ளையின் தாலித் திருமணம் சட்டரீதியானதல்ல.
இந்தப் பெண், கர்ப்பமாக இல்லாதிருந்தால், சிறுமி என்ற அடிப்படையில் அவருடைய பாதுகாப்புக்கான பொறுப்பை, நீதிமன்றம் அவருடைய தயாரிடமே வழங்கியிருக்கும்.
ஆனால் அப்பெண் கர்ப்பிணியாக இருப்பதனால் நாளை பிறக்கப்போகும் குழந்தைக்குத் தந்தை, யார் என்ற கேள்வி எழுப்பப்படும்.
எனவே, ஆட்கொணர்வு மனுவின் விதிவிலக்கான காரணங்களின் அடிப்படையில் அந்தப் பெண் காதலனுடனேயே செல்ல விரும்புவதனால் (தாலிகட்டிய இளைஞன்) அதற்கு அனுமதி 
வழங்கப்பட்டது.
திருமணம் சம்பந்தமாகவோ பெண்ணின் பாதுகாப்பு சம்பந்தமாகவோ பிறக்கப்போகும் குழந்தையின் நிலைமை சம்பந்தமாகவோ, சிவில் நீதிமன்றமாகிய மாவட்ட நீதிமன்றத்திலேயே உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன்
 உத்தரவிட்டு இந்த வழக்கை இந்த நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்துவதில் பயனில்லை எனக் கூறி, வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

மாணவி தற்கொலை அனுமதி அட்டை வழங்கப்படாமையே காரணமாம்

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி மாணவி ஒருவர் நேற்று வியாழக்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.வேப்பங்குளம் பகுதியில்உள்ள குறித்த மாணவியின் வீட்டுக் கிணற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த. உ/த பரீட்சையில் தோற்ற இருந்த நிலையிலேயே கிணற்றுள் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
குறித்த மாணவி கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதபாட பெறுபேறு அற்ற நிலையில் உயர்தரம் கற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்கு தேற்றுவதற்கான அனுமதி 
அட்டை வந்த போதும் பாடசாலையில் அனுமதி அட்டை வழங்கப்படவில்லை எனவும் அதன் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புலனாய்வாளர்கள் அதிகரிப்பு மக்கள் அச்சம்???

 மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை மற்றும் பட்டிப்பழை பிரதேசங்களில் புலனாய்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தலைமையகத்தின் உத்திரவின் பேரில்
 அதிக அளவான இராணுவ புலனாய்வாளர்கள் இந்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் குறித்த பிரதேசங்களில் பொது மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
தேர்தலை காரணம் காட்டி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதனால் பிரதேசங்களின் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சுமார் 15,000 போலி வாக்குச் சீட்டுகள் கந்தளாயில் மீட்பு!


திருகோணமலை கந்தளாய் பகுதியில் சுமார் 15,000 போலி வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கந்தளாய் பகுதியிலுள்ள் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து குறித்த வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச் சீட்டை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டு பிரதான அரசியல் கட்சியொன்றின் திருகோணமலை வேட்பாளர் ஒருவருக்கு புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது
 செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 14ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலி வாக்குச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 5 ஆகஸ்ட், 2015

அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளை


சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் நேற்று,04.08.2015. அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களால் சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபா பணம் என்பனவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர்.
கந்தரோடை சுப்பிரமணியம் வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் முகத்தை வெள்ளைத் துணியால் மூடிக்கட்டிய நால்வர் கூரை வழியாக உள் நுழைந்து அங்கிருந்த சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சங்கிலிகள், இரண்டு சோடி தோடுகள் காப்புகள் மற்றும் ஆயிரம் பவுன்ஸ் வெளிநாட்டு கரன்ஸி என்பனவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இந்த வீட்டுக்கு சற்றுத் தள்ளி உள்ள மற்றொரு வீட்டினுள் நுழைந்த அதே கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களைக் மிரட்டி சுமார் முப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்ட அதேசமயம் அங்குள்ள அலுமாரிகளில் தேடுதல் நடத்திய போதிலும் தங்க நகைகளை எவையும் கிடைக்காத நிலையில் கைவிட்டுச் சென்றுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
நீண்டகாலத்தின் பின்னர் மீண்டும் இத்தகைய துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 1 ஆகஸ்ட், 2015

குட்டி தேவதைக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் தங்ககை:.காணொளி .

பிரித்தானியாவை சேர்ந்த பிரபல நீச்சல் வீராங்கனையான ரெபக்கா தன்னுடைய குட்டி மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.
பிரித்தானியாவை சேர்ந்த ரெபக்கா அட்லிங்டன் 2008 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் 400 மீற்றர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த தங்க மங்கைக்கு கடந்த யூன் மாதம் 6 ஆம் திகதி, பெக்கி அட்லிங்டன் என்ற ஒரு அழகான குட்டி தேவதை பிறந்தது.
மூன்றரை வாரமே ஆன அந்த குட்டி தேவதையை பெருமையுடன் நீச்சல் குளத்திற்கு கூட்டிச் செல்கின்றார் ரெபெக்கா, அதுமட்டுமல்ல பிறந்த சில வாரங்களே ஆன அக்குழந்தைக்கு நீச்சலும் கற்றுத் தருகிறார்.
அவர் தன் குட்டி மகளுக்கு நீச்சல் பழக்கும் காட்சிகள் இப்போது இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>