வணக்கம்

செவ்வாய், 8 டிசம்பர், 2015

இரண்டு பிள்ளைகளின் தந்தை பணக்கார பெண்ணை ஏமாற்றி திருமணம் புரிந்தர் ! ! !

ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி, தாம் மணம் முடிக்கவில்லை என்று கூறி 24வயதான பணக்கார பெண் ஒருவரை திருமணம் முடித்து
 தேன்நிலவில்
 இருக்கும் போது உண்மையான மனைவியால் பிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே தாம் மணம் புரிந்த மனைவி வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக உள்ள 24 வயது பெண்ணை, ஏமாற்றி தனியார் நிறுவன அதிகாரி திருமணம் செய்துள்ளார்.
இதன் நிமித்தம் தமது தாயாரைப் போன்று நடிப்பதற்காக பெண் ஒருவருக்கு பணம் வழங்கப்பட்டே திருமணம் நிச்சயிக்கப்பட்டிந்தது.
அதேவேளை, திருமண நிகழ்வுக்கு ஏழு இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதுமணத் தம்பதிகள் தேன்நிலவில் இருக்கும் போது உண்மையான மனைவியும் அவர் பணிபுரியும் வைத்தியசாலையின் பணியாளர்களும் ஹொட்டேலுக்குள் புகுந்து இருவரையும் பிடித்து மீரிஹன பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த ஆண், திருமணமானவர் என்று தமக்கு தெரியாது என 24 வயதான பணக்கார பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் 
அளித்துள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக