வணக்கம்

வியாழன், 30 ஜூலை, 2015

துப்பாக்கி வேட்டுக்கள்.ஷாப்பிங் பிளாசாவிற்கு அண்மையில் ???

கனடா-ரொறொன்ரோ,ஸ்காபுரோ ஷாப்பிங் பிளாசா ஒன்றிற்கு அருகாமையில் வியாழக்கிழமை அதிகாலை 12.45மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கி பிரயோகம் செய்த சந்தேக நபர்களை பொலிசார் தேடுகின்றனர். கென்னடி மற்றும் எல்ஸ்மியர் அருகில் அமைந்துள்ள பிளாசாவிற்கு 
அருகாமையில் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் ஆறு மற்றும் ஒன்பது குண்டு தடங்களையும் யன்னல் ஒன்றில் புல்லட் ஓட்டைகளையும் கண்டுபிடித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிலநடுக்கம்!

கனடா பிரிட்டிஷ் கொலம்பியா போர்த் ஹார்டி கடற்கரைப்பகுதியில் 4.7 மக்னிரியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது.
போர்த் ஹார்டி மேற்கு கடற்கரைப்பகுதியிலிருந்து சுமார் 183 கிலோ மீற்றர் தூரத்தில் நேற்று (புதன்கிழமை) 19 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன்காரணமாக உயிர் சேதங்களோ பொருட் சேதங்களோ ஏற்பட்டதாக பதிவாகவில்லை என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

தீவிர வெப்ப எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா- ரொறொன்ரோவின் சுகாதார மருத்துவ அதிகாரி புதன்கிழமை காணப்படும் நகரத்தின் வெப்ப எச்சரிக்கை ஒரு தீவிர வெப்ப எச்சரிக்கையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். புதன்கிழமை வாரத்தின் 
அதிஉயர் வெப்ப 
நாளாக இருக்கும் எனவும் ஒன்ராறியோவின் தென்பாகத்தில் வெப்பநிலை 34C ஆக காணப்படும். பொது மக்களிற்காக குளிர்ச்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நீச்சல் குளங்கள் சில இரவு 11.45மணிவரைக்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். அதிவெப்பநிலை காரணமாக புழு ரயில் சேவைகளில் தாமதங்கள் 
ஏற்பட்டுள்ளன. வெப்பம் தொடர்பான அறிகுறிகளை- தலைசுற்றல் அல்லது மயக்கம், குமட்டல், தலைவலி ,விரைவான சுவாசம் மற்றும் தீவிர தாகம்- கவனிக்கும் வண்ணம் பொதுமக்கள் கேட்டுகொள்ளப் படுகின்றனர்.
 மிகவும் 
பாதிக்கப்படக்கூடிய வயதான குடும்ப அங்கத்தவர்கள், நீண்டகால நோய்வாய் பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாதலால் 
அவர்களை கவனிக்கும் வண்ணம் மக்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். வாகனங்களிற்குள் தங்கள் செல்லப்பிராணிகளை விட்டு செல்லவேண்டாம் என சாரதிகள் எச்சரிக்கப்படுகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஈழத்து கலைஞர்களின் எங்கோ பிறந்தவளே.காணொளி .

இசை இளவரசன் ஈழத்து கலைஞர் கந்தப்பு ஜெயந்தன் இசையிலும்
 குரலிலும் கவிஞர் அஸ்மின் வரிகளிலும்
 உருவான அழகிய காதல்ப் பாடல் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 22 ஜூலை, 2015

கதறி அழுத குற்றவாளியய் .! சுட்டுக்கொன்ற பொலிசார்.???

கனடா நாட்டில் நள்ளிரவு வேளையில் நபர் ஒருவரை குற்றவாளி என தவறுதலாக கருதி 3 பொலிசார் கொடூரமாக சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள தெற்கு Surrey நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் அந்நகரில் உள்ள RCMP என்ற பொலிசாரின் கட்டிடத்திற்கு வெளியே இருந்து ஒரு நபர் கூச்சலிடுவதுபோல் சத்தம் வரவும், உள்ளிருந்த பொலிசார் வெளியே ஓடி வந்துள்ளனர்.
அப்போது அங்குள்ள Semiahmoo என்ற நூலகத்திற்கு அருகே 3 பொலிசார் நபர் ஒருவரை சுற்றி நின்றிருந்ததை கண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய Mike Bhatti என்ற பொலிசார், அருகே சென்று பார்ப்பதற்குள் அந்த நபர் குண்டடிப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
பின்னர், இறந்து கிடந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிசாரால் கூறப்பட்டது.
ஆனால், அதேபகுதியில் வசித்த Andrea Taggart என்ற பெண்மணி, நபர் ஒருவர் உயிருக்கு பயந்து அலறி துடித்ததால் தான் வீட்டை விட்டு வெளியே வந்ததாக கூறினார்.
பிற்பகல் வேளையில், அந்த பகுதியில் மர்ம நபர் ஒருவன் பொது மக்களுக்கு தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்பட்டது. பொலிசார் அந்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபடும்போது அந்த நபர் அவர்களிடமிருந்து தப்பி அந்த 
பகுதியை விட்டு வெளியேறியுள்ளான்.இந்த வேளையில் தான் தற்போது கொல்லப்பட்டுள்ள நபர் பொலிசாரிடம் தவறதுலாக சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.
நபரை சுற்றி வளைத்த 3 பொலிசாரும் பல முறை சுட்டதை தன்னால் கேட்க முடிந்தது என விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
நள்ளிரவில் வாலிபர் ஒருவர் பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து பொலிசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்    .,,,நிகழ்ந்துள்ளது.----
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 18 ஜூலை, 2015

வனத்துறையினரால் நன்னீர் ஆமைகள் மிட்பு!

வடக்கு பிலிப்பைன்ஸில் மட்டுமே காணப்படுபவை பலாவன் வன ஆமைகள். நன்னீரில் மட்டுமே வாழும் இந்த ஆமைகள் அருகிவரும் இனப் பட்டியலில் உள்ளன. ஹாங்காங், சீனா போன்ற நாடுகளுக்கு வளர்ப்புப் பிராணிகளாகவும்,
 உணவுக்காகவும் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டின் பலாவன் தீவில்
 தனியாருக்குச் சொந்தமான குளம் ஒன்றில் 4,000-க்கும் அதிகமான நன்னீர் ஆமைகள் கவனிப்பாரற்று, குற்றுயிராகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடி நடவடிக்கையில் இறங்கிய பிலிப்பைன்ஸ் சரணாலய வனத்துறையினர் அத்தனை ஆமைகளையும் பத்திரமாக
 மீட்டு அரசுக்குச் சொந்தமான நிலத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர். தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன இந்த ஆமைகள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 10 ஜூலை, 2015

கொலை செய்தவருக்கு மரணதண்டனை????

சாவகச்சேரி பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளர் கனகா சிவபாதசுந்தரம் மரணதண்டனை விதித்து, இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தவமணி மகான் என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.   இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் வேலன் மகான், சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
சாவகச்சேரி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கு கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் மாற்றப்பட்டது.
அந்தக் காலப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளராக இருந்த தற்போதய யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற ஆணையாளரான திருமதி கனகா சிவபாதசுந்தரம் முன்னிலையில் யாழ்.மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது வந்தது.

இதன் காரணமாக இன்று தீர்ப்பு வழங்கும் போது, யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளராக கனகா சிவபாதசுந்தரம் மன்றில் ஆஜராகினார்.

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்தார் என்பதை சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்திய ஆணையாளர், அவரைக் குற்றவாளியாக இனங்கண்டு மரண தண்டனை வழங்கினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

குழந்தை மிது கார் ஏறி உயிர் பிழைத்த அதிசயம்


வீடியோ பாருங்கள்  கார் முழுவதும்  ஏறி இறங்கியும் 3 வயது குழந்தி உயிர் பிழைத்த அதிசயம் 
நாசிக்-
 3 வயது குழந்தை ஒன்று கார் விபத்தில் சிக்கி உயிர்  பிழைத்த அதிசயம் நடந்து உள்ளது. அது சிசிடி வி கேமிராவில் பதிவாகி உள்ளது.அந்த வீடியோ யுடிப்பில் பதிவிடபட்டு பரவி வருகிறது.
 இந்த வீடியோ கடந்த மாதம் 18 ந்தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தை ஜோய்  வீட்டிற்கு வெளியே  தாயருக்கு  பின்புறம் சற்று தள்ளி நடந்து வருகிறது. அப்போது வெள்ளை நிற கார் ஒன்று மெதுவாக வருகிறது. அப்போது ஒரு செகண்டில் குழந்தை  மீது காரின் முன் டயரும் பின் டயரும்  ஏறி இறங்கு கிறது.கார் நிற்கிறது அப்படி இருந்தும் காரின் 2 டயர் குழந்தையின் மீது ஏறி இறங்கி உள்ளது. 
இந்த பயங்கர சம்பவத்திற்கு பிறகு குழந்தை ஜோய் அதே காரில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லபட்டார். டாக்டர்கள் அதிசயம் மாக கார் முழுவதும்   குழந்தை  மீது ஏறி இறங்கியும் குழந்தை அதிர்ஷ்டவசமாக பிழைத்து கொண்டதாக கூறினர். ஜோய்க்கு சிறிது உள்காயம் மட்டும் இருந்து உள்ளது.. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

யேர்மனியர்கள் அகதிகளை விரட்டு கின்றனர் ???

ஜேர்மனி நாட்டில் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு நாட்டின் நிதியை வீணாக்க கூடாது எனக்கூறி அகதிகளுக்கு எதிரான அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Freital என்ற நகரில் நேற்று கூடிய அகதிகளுக்கு எதிரான அமைப்பினர், ஜேர்மனி குடிமக்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர்களுக்கு தஞ்சம் அளிக்கும் அரசின் போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டம் தொடர்பாக பேசிய Saxony மாகாண உள்துறை அமைச்சரான Markus Ulbig, அகதிகளுக்கு எதிரான அமைப்பினரின் இந்த போராட்டம் தனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
Freital நகரில் உள்ள ஒரு மையத்தல் கூடிய போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் Markus Ulbig ஈடுபட்டுள்ளார். ஆனால், அவரது வார்த்தைகளுக்கு செவி சாய்க்காத போராட்டக்காரர்கள் ஜேர்மனி மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஒரு பெண்மணி 
கூறுகையில், தாங்கள் அமைதியாக வசிக்கும் பகுதியில் வெளிநாட்டினருக்கு தஞ்சம் அளிப்பதால் தங்களுடைய நிம்மதி பறிப்போய் உள்ளதாக புகார் கூறினார்.
தஞ்சம் கோருபவர்கள் தங்கியுள்ள வீடுகளிலிருந்து தேவையற்ற பொருட்களை காணும் இடங்களிலெல்லாம் வீசுவது நகரத்தையே அசுத்தமாக்கியுள்ளது.
இரவு நேரங்களில் அவர்கள் எழுப்பும் சத்தத்தால் தங்களால் நிம்மதியாக உறங்க கூட முடியவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜேர்மனியில் தஞ்சம் கோருபவர்களுக்கு நிதியை வீணாக்குவதற்கு பதிலாக நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் அந்த நிதியை பயன்படுத்தலாம் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சம் கோருபவர்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக நடந்த இந்த போராட்டம் நேற்று உச்ச நிலைக்கு சென்றதால், ஆளும்கட்சி அரசியல்வாதிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>