வணக்கம்

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

நீச்சலடிக்க சென்ற பெண்னின் கை முதலையின் வாயில்

அமெரிக்காவில் தனிமையில் நீச்சலடிக்க விரும்பிய பெண் முதலையிடம் சிக்கி தனது கையை பறிகொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள வெகிவா நதியில் நீச்சலடிப்பதற்காக பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அங்கு நண்பர்களுடன் நீச்சலடித்துக்கொண்டிருந்த தனிமை விரும்பியான இவர், ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றுள்ளார், அங்கு நீச்சலடித்துக்கொண்டிருந்தபோது முதலை ஒன்று இவரது கையை கடித்திருக்கிறது.
முதலையுடன் நடந்த போராட்டத்தில் தனது கையை இழந்ததாக கூறப்படுகிறது, இந்த போராட்டத்தின்போது மயங்கிய இவரை அந்த வழியாக படகில் சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, இவரது கையை பொருத்தி சீரமைக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக