வணக்கம்

புதன், 19 ஜூன், 2019

வழங்கப்படும் விசேட தேவையுடையவர்களுக்கு கொடுப்பனவில் மாற்றம்

விசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம்  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா வழங்கப்பட்டது.32 ஆயிரம் பயனாளிகள் இதன்மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது 40,000 பேர் வரை பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக