வணக்கம்

செவ்வாய், 1 மார்ச், 2016

இருவர் படுகாயம் பதுளை விபத்தில் ஆசிரியயை பலி;

பதுளை உடுவரை தமிழ் வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் பலியானார். அத்துடன் இருவர் படுகாமயடைந்தனர்.
டபிள்யூ.எம்.பிரியலதா (வயது 47) என்ற ஆசிரியையே விபத்தில் நடந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்தையடுத்து மக்கள் வீதிக்கு இறங்கி பஸ்ஸை சுற்றிவளைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து பாதுகாப்புக்காக பொலிஸார் களமிறக்கப்பட்டனர். பாடசாலை முடிவடைந்து வீடு செல்வதற்காக பிரதான வீதியில் காத்திருந்த போது,
 அவ்விடத்துக்கு வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏற முற்பட்டுள்ளார். இதன்போது பஸ்ஸுக்கு 
பின்னால் வந்த லொறி ஒன்று பஸ்ஸூடன் மோதியதையடுத்து ஆசிரியை தவறி கீழே விழுந்து பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையே நசுங்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், அவருடன் இருந்த இரு ஆசிரியைகளும் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பஸ் மற்றும் லொறியின் சாரதிகளை கைதுசெய்துள்ளனர் .
இதேவேளை -
பண்டாரகம பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறுவர்கள் பலியாகினர். அத்துடன் நலவர் காயமடைந்தனர்.
பண்டாரகம - கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல என்ற இடத்தில் டிப்பர் வாகனம் ஒன்றும் ஓட்டோ ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பலியானவர்களில் இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் 
அடங்குகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக