வணக்கம்

திங்கள், 21 மார்ச், 2016

கனரக வாகனம் மோட்டார் சைக்கிள் யாழில் விபத்து! இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியும், வண்ணார்பண்ணைச் சிவன் கோவில் வடக்கு வீதியும் இணையும் சந்தியில் இன்று காலை 08.00 மணியளவில் இடம்பெற்ற கனரக வாகன – மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை முடித்து விட்டு தமது இல்லம் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரையும் கொக்குவில் பக்கமாகவிருந்து வந்த கொழும்பு CITY HARDWARE STORS நிறுவனத்துக்குச் சொந்தமான கனரக வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். குறித்த கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இளைஞர் சந்தியில் சிக்னல் போட்டு வாகனத்தைத் திருப்பாததுடன், வீதி ஒழுங்கை மீறி வாகனத்தைத் திருப்பியமையுமே இந்த விபத்துச் சம்பவத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்துச் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விபத்துக்குக் காரணமான வாகனம் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பண்டத்தரிப்புப் பகுதியினைச் சேர்ந்த ஜே.கிறிஸ்ரியன் (வயது-21), ரி.இரட்ணசீலன் (வயது-25) ஆகிய இருவருமே படுகாயமடைந்தவர்களாவார் .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக