வணக்கம்

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

குழுவினர்வாள்வெட்டில் குடும்பஸ்தர்யாழில் பலி

இனந்தெரியாத குழுவினர் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - சங்குவேலியில் நேற்றுப் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிவகுமார் பிரணவன் (வயது 35) என்பவரே உயிரிழந்தவராவார்.
 நேற்றிரவு வீட்டின் முன்னால் நின்றிருந்தவரை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட குழு வாளால் வெட்டியது. இதில் அவர் தலை, கழுத்து, கை, கால் பகுதிகளில் கடும் காயங்களுக்கு இலக்கானார். உறவினர்களால் காப்பாற்றப்பட்ட அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமானார். மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபரை கொக்குவிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலைமையிலான குழுவே வாளால் வெட்டியது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் ரவுடித்தனம், வாள்வெட்டுப் போன்ற குற்றச் செயல்கள் கட்டுக்குள் இருந்தன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் யாழ். மக்களிடையே மீண்டும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக