யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் படுகாயமடைந்த நிலையில் (29) யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் வெளிநாட்டு பிரஜைகளான சுற்றுலா பயணிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்துள்ளனர்.
அதன்போது, அவர்களுக்கு மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
இந்த விபத்தில் சுற்றுலா பயணியான பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக