வணக்கம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தரம் 5 பரீட்சை முடிவுகள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய ரீதியில் இன்று இப்பரீட்சை நடைபெற்று முடிந்தது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு நாட்டின் சகல பாகங்களிலும் பரீட்சை நிறைவடைந்தது. இப்பரீட்சையின் சகல விடைத்தாள்களும் இன்று நள்ளிரவாக முன்னர் கொழும்பிலுள்ள பரீட்சைகள் திணைக்களத்தை வந்தடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த மாதம் 3 ஆம் திகதி முடிவடையவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக