வணக்கம்

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

கம்பியால் முதியவரை தாக்கி சங்கிலி கொள்ளை

யாழ்ப்பாணம், அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், குடும்பஸ்தரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து
 சென்றுள்ளனர்.
இன்று(புதன்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எஸ்.வீ. சமன்குணதிலக,
 தெரிவித்துள்ளார்.
இதன்போது கந்தசாமி மார்க்கண்டேயர் வயது(72) என்ற முதியவரே தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பொலிஸார், தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக