வணக்கம்

வியாழன், 28 ஏப்ரல், 2016

முகநூல் ஊடாக ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இணையத்தின் ஊடாக சமூக வலையத்தளங்களில் இவ்வாறு ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து குறித்த நபர் நாடு திரும்பிய போது இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முகநூல் ஊடாக இந்த நபர் ஜனாதிபதியை கொலை செய்ய போவதாக எச்சரித்துள்ளார்.
புலனாய்வுப் பிரவினர் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டதனை எதிர்த்து ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக