வணக்கம்

புதன், 13 ஏப்ரல், 2016

பஸ் நிலையத்தில் களவெடுத்த பெண் 15 நிமிடங்களில் கைது

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, 15 நிமிடங்களில் நேற்று திங்கட்கிழமை (11) மாலை பொலிஸார் 
கைது செய்தனர்.
புதுவருட கொள்வனவை முடித்துவிட்டு நண்பிக்காக மேற்படி பெண் காத்திருந்த வேளை, பெண்ணின் பின்பக்கமாகச் சென்ற சந்தேகநபரான பெண், கைப்பையைத் திறந்து பணத்தை
 திருடியுள்ளார்.
அதன் பின்னர், சந்தேகநபரான பெண் தடுமாற்றமடைந்த போது, அங்கு சிவில் உடையில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகநபரான பெண்ணை விசாரணை செய்த போது, பணம் திருடப்பட்டமை 
தெரியவந்தது.
உடனடியாக அவரைக் கைது செய்த பொலிஸார் பணத்தையும் மீட்டனர்.
மேற்படி பெண்ணின் கணவர் திருட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக