வணக்கம்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

திடீரென யாழில் அதிகரித்த வெப்பநிலை: மக்கள் சிரமம்

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
வழக்கத்தை விடவும் 4பாகை செல்சியல்
 அதிகமாக வெப்பநிலை காணப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையின்  பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், மகாஇலுப்பல்லம,
 புத்தளம், இரத்மலான, வவுனியா ஆகிய பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவானது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், வழக்கத்தை விட சற்று அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாந்தோட்டை, கட்டுகஸ்தோட்டை, மன்னார், மற்றும் திருகோணமலையில் வழக்கத்தை விடவும், 3 பாகை செல்சியஸ் அதிகமான வெப்ப நிலை காணப்பட்டது.
இதனை விட இரவு நேர வெப்பநிலையும் வழக்கத்தை விட சுமார் 2, 3 பாகை செல்சியஸ் அதிகமாகவே காணப்பட்டதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
இதனால்  பொதுமக்கள் நேற்றைய தினம் வெளியில் நடமாட முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பல பாகங்களிலும் வெப்பமான காலநிலை மாற்றம்
இலங்கையின் வெப்பமான காலநிலை நிலவுகிறது. நாட்டின் பல பாகங்களிலும் இந்த காலநிலை தாக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை பொழுதுகளில் கொழும்பில் வெப்பமான காலநிலை உணரப்பட்டது.
காலநிலை அவதான மையத்தின் தகவல்படி யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, கட்டுகஸ்தொட்டை, மன்னார், திருகோணமலை, அனுரதபுரம் நுவரெலியா, புத்தளம்,ரத்மலானை, வவுனியா ஆகிய இடங்களில் இந்த காலநிலை மாற்ற தாக்கம் உணரப்படுகிறது.
இதேவேளை களுத்துறை பகுதிகளில் இரவில்மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை அவதான மையம் 
தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக