வணக்கம்

சனி, 12 செப்டம்பர், 2015

தங்கையின் கணவரை அக்காவும் தம்பியும் சேர்ந்து எரித்துள்ளனர் ?.

ந்தளாய் பிரதேசத்தில் மண்ணெண்ணை ஊற்றி ஒருவரை எறித்த குற்றச்சாட்டின் பேரில் கந்தளாய் பொலிஸார் இருவரை இன்று சனிக்கிழமை(12) காலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பேராறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(11) இரவு இந்த எரிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தொரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் அக்காவும் தம்பியும் என்பதோடு சந்தேக நபர்களின் தங்கையின் கணவரேயே இவ்வாறு மண்ணெண்ணெய் ஊற்றி எறித்துள்ளதாகவும் இச்சம்பவத்துக்கு குடும்ப பிரச்சினையே காரணமெனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எறிகாயங்களுக்குள்ளானவர் ஆபத்தான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர் வழங்கிய தகவலின் படியே சந்தேக நர்களை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக