வணக்கம்

திங்கள், 27 ஜூன், 2016

வளலாய் பகுதி கடற்கரையில் கஞ்சா மீட்பு! இருவர் கைது

யாழ். அச்சுவேலி- வளலாய் பகுதியில் உள்ள அக்கரை என்ற கிராமத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 100 கிலோ கேரள கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் கஞ்சா கொண்டு வந்த 2 இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளலாய் - அக்கரை கிராமத்திற்கு கடல் வழியாக கஞ்சா கொண்டு வரப்படுகின்றமை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து, அந்த பகுதியில் நள்ளிரவு இரகசியமாக சென்று தங்கிய விசேட அதிரடிப்படையினர் இன்றைய தினம் அதிகாலை 5 மணியளவில் கஞ்சா கொண்டு வரப்பட்ட படகை கடற்கரையில் வைத்தே கைது செய்துள்ளனர்.
இதன்போது கஞ்சாவை கடத்தி வந்த மாதகல், அக்கரை ஆகிய பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்ப ட்டுள்ளனர்..இந்நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா கேரள கஞ்சா எனவும் அது 100 கிலோ இருந்ததாகவும் அதிரடிப்படையினர் கூறியிருக்கின்றனர்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக