வணக்கம்

வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஆணின் சடலம் கல்முனை பேரூந்து தரிப்பிடத்தில் மீட்பு!!!

அம்பாறை கல்முனை பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 
மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குறித்த நபர் கல்லாறு காளி கோயில் வீதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க தம்பிராசா வரதரதசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனியார் பேரூந்துகளில் நடத்துனராகவும். கடைகளிலும் தொழில் புரிந்து வந்ததாகவும் குறிப்பிட்ட பிரதேச மக்கள், அதிகளவில் மது அருந்துபவர் எனவும் கூறினர்.
கல்முனை பஸ் நிலையக் கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் இருந்து கீழ் தளத்தில் வீழ்ந்ததில், அவரது தலை பலமாக அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்:.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக