வணக்கம்

செவ்வாய், 29 ஜனவரி, 2019

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை இலங்கையின் வானிலையில் திடீர் மாற்றம்

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை சாதாரண நிலையை விடவும் 2 – 4க்கும் இடைப்பட்ட செல்சியஸ் அளவில் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.திணைக்களத்தின் தரவுகளுக்கமைய நேற்றைய தினம் அதிக 
அளவிலான வெப்பம் இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. அதன் வெப்ப நிலை 35.6 பாகை செல்சியஸாகும்.பகல் நேரத்தில் அதி கூடிய வெப்பநிலை குருணாகல் மற்றும் புத்தளம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சாதாரண வெப்ப நிலையை விடவும் 4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது.
துளை, கட்டுகஸ்தோட்ட, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் சாதாரண வெப்ப நிலையை விட 3 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது.மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்ட,
 யாழ்ப்பாணம், மஹ ழுப்பல்லம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் பகல் நேரத்தில் 2 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டுள்ளது.இரவு நேரத்தில் மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்ட, வவுனியா மற்றும் அனுராதபுரத்தில் 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக
$ குறிப்பிடப்படுகின்து.
கொழும்பு, காலி, கட்டுகஸ்தோட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேசத்திலும், இரவு நேரத்தில் பொதுவான வெப்பநிலையை விட 2 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக