வணக்கம்

திங்கள், 14 ஜனவரி, 2019

திங்களன்று வடக்கு, கிழக்கு பாடசாலைகள் விடுமுறை

எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் தினம் என்பதால் அதற்கு முதல் நாள் திங்கட்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கும் தகவலை வெளியிட்டுள்ளன.
அதற்குப் பதிலாக அடுத்துவரும் வார இறுதி நாள் ஒன்றில் பாடசாலையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாகாண ஆளுநர் அலுவலகங்கள் கூறியுள்ளன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக