வணக்கம்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன.

இன்று (21.12.2018) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன.இதன்படி, 92,95 ஒக்ரெய்ன் பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது. புதிய விலையில் 92 ஒக்ரெய்ன் 125 ரூபாவும், 95 ஒக்ரெய்ன் 149 ரூபாவாகவும் 
விற்கப்படும். டீசல் 5 ரூபாவும், சுப்பர் டீசல் 10 ரூபாவும் குழறக்கப்படுகிறது.கடந்த ஒக்டோபர் மாதம்
 10ஆம் திகதியன்று, எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்ட போது, ஒரு பெரல் கச்சா எண்ணெய், 85 டொலராகக் காணப்பட்டது. இந்த விலை தற்போது, 57 டொலராகக் குறைவடைந்துள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்துக்கு அமைய, எரிபொருட்களின் விலைகள், இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக, திறைசேரித் தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக