வணக்கம்

சனி, 1 டிசம்பர், 2018

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்கள் விலை குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கப்படும் என பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே 
தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய வளத்துறை அமைச்சில்.30.11.2018. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்
 குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும், குறித்த எரிபொருட்களின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, ஒக்டேன் 92 வகை பெட்ரோல் 135 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளதுடன், 95 வகை பெட்ரோல் 159 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன், ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 106 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 131 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மண்ணெண்ணெய் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக