வணக்கம்

வியாழன், 25 மே, 2017

மூதாட்டியை அச்சுறுத்தி உடுவிலில்15 பவுண் நகை கொள்ளை!

உடுவிலில் நேற்று அதிகாலை வீடு புகுந்த கொள்ளையர்கள் 15 பவுண் தங்க நகைகள், பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் தனித்திருந்த மூதாட்டியை அச்சுறுத்தி ஓரிடத்தில் இருத்திவிட்டுச் சில மணித்தியாலங்களாகக் கொள்ளையர் தேடுதல் நடத்தி 15 பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், உண்டியலில் காணப்பட்ட ஒரு தொகைப் பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர்.
உடுவில், டச்சு வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஓடு பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் 5 பேர் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தாம் கொண்டு சென்ற ரோச் லைற் உதவியுடன் அறைகளிலும் அலுமாரிகளிலும் தேடுதல் நடத்தி நகைகளையும் பணத்தையும் எடுத்துச் சென்றனர்.
குறித்த வீட்டில் உள்ள ஏனையவர்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை கொள்ளை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. அங்கு விசாரணை நடத்தப்பட்டது. எவரும் கைது செய்யப்படவில்லை என்று 
பொலிஸார் தெரிவித்தனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக