வணக்கம்

செவ்வாய், 21 மார்ச், 2017

ஓட்டோவில் வந்தவர்களால் அளவெட்டியில் ஆடு திருட்டு!

யாழ் - அள­வெட்­டிப் பகு­தி­யில் வீட்­டின் முன்­னால் கட்டி வைத்­தி­ருந்த ஆடு திருட்­டுப் போயுள்­ள­தாக பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. முச்­சக்­கர வண்­டி­யில் வந்­த­வர்­களே ஆட்­டைத் திரு­டி­னார்­கள் என்று அதன் உரி­மை­யா­ளர் முறைப்­பாட்­டில் 
தெரி­வித்­துள்­ளார்.
“அள­வெட்டி பன்­னா­லைப் பகு­தி­யில் குட்டி ஈன்று இரண்டு மாதங்­க­ளே­யான  தாய் ஆடு வீட்­டுக்கு முன்­பாகக் கட்­டப்­பட்­டி­ருந்­தது. குட்டி அதன் அரு­கில் விடப்பட்டிருந்தது.20.03.2017 திங்கட்­கி­­­ழ­மை
 பகல் 10 மணி­ய­ள­வில் சாலை­யால் ஓர் முச்­சக்­கர வண்டி சென்­றது. அந்த நேரம் நாம் வீட்­டுக்­குள்­ளி­­ ருந்­தோம். முச்­சக்­கர வண்­டி­யில் வந்­த­வ­ரின் நட­மாட்­டம் அறிந்த அய­ல­வர்­கள் எம்மை கூப்­பிட்­ட­னர். சத்­தம் கேட்டு ஓடி­வந்­தோம். அந்த நேரம் ஆடு திரு­டப்­பட்­டு­ விட்­டது.
அய­ல­வர்­கள் கூறு­வ­தன் பிர­கா­ரம் ஓர் பட்­டர் கலர் முச்­சக்­கர வண்­டி­யி­லேயே ஆடு கடத்­தப்­பட்­டுள்­ளது.   இது தொடர்­பில் தெல்­லிப்­பழை பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. எனி­னும் பொலி­ஸார் இது­வ­ரை­யில் எந்த நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை. 
களவாடப்பட்ட தாய் ஆட்டின் இரண்டு மாதக் குட்டி தாயைப் பிரிந்து  நின்று கதறுவதை பார்க்கமுடியாது சோகமாகவுள்ளது. எந்த உணவையோ நீரையோ குட்டி அருந்துவதாகத் தெரியவில்லை. இதனால் கத்திக் கத்தியே அதன் உயிரும் பிரிந்துவிடுமோ என்ற 
ஏக்கமாகவுள்ளது.  
இவ்வாறான பாவங்களை சுமப்பவர்களும் இந்த நாட்டிலேயே உள்ளனர்” என்று ஆட்டின் உரிமையாளர் மனவேதனையுடன்
 தெரிவித்தா
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக