வணக்கம்

சனி, 8 அக்டோபர், 2016

ஆறு வயது சிறுமியை தாக்கிய தாயின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ் நீர்வேலிப் பகுதியில்  6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயை எதிர்வரும் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று உத்தரவிட்டார் என
 தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி முகப்புத்தகத்தில் வைரலாக பரவியது.
அந்த சிறுமியை தாக்கிய தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடப்பட்டிருந்தது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக