வணக்கம்

வியாழன், 20 அக்டோபர், 2016

யாழ் மாவட்ட பாடசாலை வெண்கல பதக்கம் வென்ற மாணவிக்கு கௌரவிப்பு


பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்டத் தடகளப்போட்டிகள் கடந்த வாரம் கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ் மாவட்ட பாடசாலை பதக்கம் வென்றது
அந்தவகையில்,  21 வயது பெண்களுக்கான நீளம்பாய்தலில் வெண்கலப்பதக்கம் வென்ற யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி சி. ஆரணிக்கு கல்லூரிச் சமூகத்தால் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று நேற்று பெற்றது. 
குறித்த நிகழ்வானது கல்லூரியின்  அதிபர் திருமதி கௌரி சேதுராஜா தலைமையில், இடம்பெற்றது.  இந்நிகழ்வில்   பாடசாலைக்கு பதக்கத்தினை வென்று கொடுத்த மாணவி உடுப்பிட்டிச் சந்தியில் இருந்து பாண்ட் வாத்திய சகிதம் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு கல்லூரி மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார். 
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டமை சிறப்பித்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக