வணக்கம்

செவ்வாய், 31 மே, 2016

குழந்தை பிறந்த 31 ஆம் நிகழ்வை குடித்துக் கொண்டாடிய தகப்பன் பரிதாப மரணம்!

பிள்ளை பிறந்து 31 ஆம் நாள் சடங்கு நிகழ்வு கொண்டாட்டத்தில் மதுபானத்தை அதிகமாகப் பருகிய தந்தை உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழில் இடம்பெற்றது.
சங்கானை ஆஸ்பத்திரி வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் அரியநேந்திரன் அஜந்தன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தையின் 31 ஆவது நாளை உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து குடித்துக் கொண்டாடிய தந்தை, இரவு நித்திரையாகிவிட்டார்.
வழமையாக நித்திரையின் போது குறட்டை விடும் கணவர் குறட்டை விடாமல் கிடப்பதனைக் கண்ட அவரின் மனைவி இரவு 2 மணியளவில் அவரை எழுப்பியுள்ளார்.
அவர் எழுந்திருக்காமையால் உறவினர்களின் உதவியுடன் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள் பரிசோதனையின் போது அவர் இறந்துவிட்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக