வணக்கம்

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

திடீரென பலத்த காற்றுடன் யாழில் வீசிய மினி சூறாவளி

யாழில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளது.
அத்துடன், வீடுகளின் கூரைகளும் காற்றினால்
 தூக்கி வீசப்பட்டுள்ளன.
யாழ். குடாநாட்டில் 14.08.2018. மாலை திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தது. வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதுடன் கன மழையும் பெய்துள்ளது.
நேற்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த மினி சூறாவளியால் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமாகியுள்ளன.
காரைநகர் கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரப்பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமாகியுள்ளதுடன் நான்கு வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு பகுதியளவில் சேதமாகியுள்ளன.
அத்துடன் பொன்னாலை குடியிருப்பு பகுதியிலுள்ள மூன்று வீடுகள் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமாகியுள்ளது.
இதேவேளை இப்பகுதியிலுள்ள மரங்களும் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக