வணக்கம்

புதன், 28 டிசம்பர், 2016

.-தனியார் -· இ.போ.ச பேருந்து சாரதிகள் மோதல்!

வவுனியா இலுப்பையடி பேருந்து தரிப்பிடத்தில் இ.போ.ச சாரதி மீது தனியார் பேருந்து சாரதி தாக்கியதில் படுகாயமடைந்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (27) பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா - செட்டிகுளம் செல்லவிருந்த அரச பேருந்தில் பயணிகளை ஏறிக்கொண்டிரு க்கையில் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லவிருந்த தனியார் பேருந்து சாரதிக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது
இதில் கைகலப்பில் ஈடுபட்ட இரு சாரதிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இ.போ.ச சாரதியான மகேஸ்வரன் (வயது 35) மீது தனியார் பேருந்து சாரதி தாக்கியதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட தனியார் பேருந்து சாரதியிடம் நீங்கள் முதலில் செல்கி ன்றீர்களா? அல்லது நான் முதலில் செல்லவா? என்று இ.போ.ச பேருந்து சாரதி கேட்டதை யடுத்து பேருந்தில் இருந்த தனியார் பேருந்து சாரதி தனது பேருந்து கதவைத்திறந்து சார தியின் முகத்தில் தாக்கியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக