வணக்கம்

சனி, 13 ஜூன், 2015

மூன்று உணவகங்களை தற்காலிமாக மூட உத்தரவு

யாழ்  மருதனார்மடத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்களை தற்காலிமாக மூட மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சுன்னாகம் பிரதேச சபைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் 
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில் பெரும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்கள் சிக்கின. இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இந்த 
உணவகங்களின் 
உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. 3 உணவகங்களின் உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து 3 உணவகங்களையும் தற்காலிகமாக மூட நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் ஒரு மாத காலத்தில் சகல திருத்தப் பணிகளையும் மேற்கொண்ட பின்னர், சுகாதார பரிசோதகர் அதனைப் பரிசீலித்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர் உணவகங்களை மீண்டும் திறக்க முடியும் என தீர்ப்பளித்தார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக